14 Dec 2014

BEHOLD, THE BRIDEGROOM COMES!

இயேசு வருகிறார்...... ஆயத்தமாவோம்....

".... இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர் கொண்டு போக புறப்படுங்கள்....." மத்தேயு 25:6
 
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்! இயேவின் முதல் வருகையை கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், இந்த செய்தியின் மூலமாக உங்களை சந்திக்கின்றேன்.
 
இந்த தலைப்பில் நாம் தியானிக்கப் போகும் வசனங்கள் மத்தேயு 25:1 முதல் 13 வசனங்கள் வரை அடங்கியிருக்கின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு உவமை இது. பத்து கன்னிகைகளை குறித்து சொன்னது.
 
பரலோக ராஜ்ஜியம் இந்த பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாய் இருக்கிறது. இந்த பத்துபேரும் விசுவாசிகள்தான், அவிசுவாசிகள் அல்ல. சுத்தமான கிறிஸ்தவர்கள். இயேசு சீக்கிரமாய் வருகின்றார் என எதிர் பார்த்தவர்கள்தான். யாருமே அவர் எப்படி வருவார்? பஸ்ஸில் வருவாரா? டிரைனில் வருவாரா? மேற்கே இருந்து வருவாரா? தெற்க்கே இருந்து வருவாரா? என இடக்காக கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. எல்லாரும் இயேசு சீக்கிரம் மேகமீதினில் வருவார் என விசுவாசித்தவர்கள் தான். இந்த பத்து பேரும் ஆயத்தமானார்கள் மணவாளனை சந்திக்க.
 
ந்து பேர் புத்திசாலிகளாய் இருந்தனர், ஐந்து பேர் முட்டாள்களாய் இருந்தனர். அவர்கள் தங்கள் தீவட்டிகளோடு எண்ணையையும் கூடவே எடுத்து வந்தனர்.  பகலில் வந்தால் தீவட்டி எதற்கு? இயேசு பகலில் வராமல் இரவில்தான் வருவாரா? இயேசு கூறிய இந்த உவமையில் மணவாளன் இரவில்தான் வருகிறார். இது ஒரு திருமணத்துக்கு ஒப்பிடப் பட்டுள்ளதால், இஸ்ரவேலர்களின் வழக்கப்படி, மணமகன் எப்போழுதுமே இரவில்தான் வருவார். இங்கே இரவா? பகலா? என்பது கேள்வியில்லை. இயேசு எந்த வினாடியிலும் வருவார்.
 
ங்கே தீவட்டி என்பது, உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை. அது எரிந்து கொண்டிருக்க வேண்டும். வேத வசனங்களைப் பிடித்துக் கொண்டு சுடர்களைப் போல பிரகாசிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை வேத வசனத்தின் அடிப்படையில் உள்ளதா? அல்லது உங்களின் விருப்பப்படி வசனத்தை வளைத்து வாழ்கின்றீர்களா? இன்று கிறிஸ்தவர்களில் அநேகருக்கு ஆவிக்குரிய அன்பைப்ப்ற்றியே தெரியவில்லை. இயேசுவை நேசிக்கின்றோம் என்கின்றார்கள், எப்படி நேசிக்கிக வேண்டும் என தெரியவில்லை. யோசித்துப் பாருங்கள்! வேத வசனத்தின்படி வாழ்வது மிக மிக எளிதானது. இயேசுவை நம்மில் வாழ அனுமதிக்கும் பொழுது நாம் போராடிக் கொண்டிருக்க தேவையே இல்லை. 
 
இங்கே எல்லாருடைய தீவட்டிகளும் எரிந்து கொண்டிருந்தன. மணவாளன் வர தாமதித்த பொழுது என்ன நடந்தது? எல்லோருமே தூங்கிவிட்டனர். எல்லாரும் அறியாத நேரத்தில் வருவார் என்பதை வைத்து பூனை போல யாருக்கும் தெரியாதபடி வருவார் என நினைக்கின்றனர். இயேசு வரும் நேரந்தான் மறைத்து வைக்கப் பட்டுள்ளதே தவிர வரும் பொழுது பிரதான தூதனுடைய எக்காள சத்தத்தோடு இந்த உலகத்திற்கே தெரியும்படி மத்திய ஆகாயத்தில் வருவார்.
 
மணவாளன் வர தாமதித்த பொழுது, எல்லோருமே தூங்கி விட்டனர். பலவேறு சூழ்நிலையிலே வந்தவர்களுக்கு  உடல் சோர்வு தூக்கத்தைக் கொண்டுவந்தது. மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர்கொண்டு போக புறப்படுங்கள் என்ற சத்தம் உண்டான பொழுது பத்து பேரும் எழுந்தனர். அனைவரும் ஆயத்தப் பட்டனர். தீவட்டி மங்கி எரிந்ததால்,  தீண்டி ஏற்றினர். எண்ணெய் ஊற்றினர். ஆனால் ஐந்து பேருடைய தீவட்டிக்கு எண்ணை இல்லாததால் மங்கி எரிந்து அணைந்து போனது. இங்கு எண்ணை என்பது சாட்சியுள்ள வாழ்க்கையைக் குறிக்கின்றது. 
 
தம்முடைய விருப்பத்தின் படி வாழ்ந்தவர்கள்! தமது வாழ்க்கைக்காக வசனத்தை வளைத்தவர்கள். ஆண்டவர் எல்லாவற்றையும் மன்னித்துவிடுவார் என்னெனில் நான் அவருடைய செல்லப் பிள்ளை. நரகம் என்று ஒன்றே கிடையாது. தேவன் அன்புள்ளவராய் இருந்தால் நரகத்தைப் படைப்பாரா? (அது பிசாசுகளுக்காக படைக்கப்பட்டது என அறியாதவர்கள்) படைத்த எல்லாவற்றையும் நல்லது எனக் கண்ட ஆண்டவருடைய பிள்ளைகள் - நாள், நட்சத்திரம் பார்க்கின்றவர்கள். (கடவுளே இல்லை என்பவர்கள் கூட இவர்களது எம கண்டத்தில் திருமணம் முடிக்கின்றார்கள்) ஆண்டவரைப் பிரியப்படுத்தி வாழாமல் தங்களையே பிரியப்படுத்தி வாழ்கின்றவர்கள்; ஊழியர்களுக்காக, ஊழியங்களுக்காக ஜெபிக்காமல் ஊழியர்களைக் குற்றப்படுத்தி வாழ்ந்தவர்கள்; ஆண்டவருடைய அன்பை ருசி பார்த்தவர்கள், ஆனால் பிரச்சனை வந்த பொழுது மறுதலித்தவர்கள். நன் மதிப்பைத் தேடி போய் பேசியவர்கள்; பிறருக்காக வாழாமல் தனக்காகவே வாழ்ந்தவர்கள்; பாவ மன்னிப்பின் நிச்சயத்தை மையமாக்கி வாழாமல் பணத்தையே மையமாக்கி வாழ்ந்தவர்கள்; பணத்துக்காக அரசாங்கத்தை ஏமாற்றி வாழ்பவர்கள்; ஆணால் கிறிஸ்தவர்கள்.

எண்ணெய் வைத்திருந்தவர்கள்:

தேவனுக்கு பயந்து வாழ்ந்தவர்கள்; தாங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் ஆண்டவருக்கு பிரியமாயிருக்குமா? என தேவனை தேடியவர்கள்; இவர்கள் ஆண்டவருடைய சித்தத்தை அறிந்து அதன்படி வாழ்ந்தவர்கள்; தங்கள் நடவடிக்கை யாவற்றிலும் இயேசுவைக் காட்டியவர்கள்; எந்த பிரச்சனை வந்தாலும் வேத வசனத்துக்கு மட்டும் கீழ்படிய ஒப்புக் கொடுத்தவர்கள்; மனிதர்கள் தவறாக நினைத்தாலும் தான் உண்மையாகவே இருப்பேன் எனத் தீர்மானித்தவர்கள்; தங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்து அவர்களுக்காக ஜெபித்தவர்கள்; தங்கள் வாழ்க்கையில் வேதவசனத்துக்கே முதலிடம் கொடுத்தவர்கள்; பிறரை நல்ல வழியில் நடத்தியவர்கள்; தான் இரட்சிக்கப்பட்டதைப் போலவே, பிறரும் இரட்சிக்கப்படவேண்டுமே என்ற ஆதங்கத்தில் பிரயாசப்பட்டவர்கள்; தன்னுடைய தவறு வெளிப்படும் போது, மனத்தாழ்மையாக அதை ஏற்றுக் கொண்டு, சரி செய்ய முயற்சித்தவர்கள்; செயலைக் காட்டிலும் நோக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள்; தரிசனத்தை அடைய தங்கள் வழியை சுத்தம் செய்தவர்கள்; பிறருடைய இடத்தை அபகரிக்க எண்ணாதவர்கள்; தாங்கள் முன்னேறுவதற்கு குறுக்கு வழியைத் தேடாமல், ஆண்டவருடைய வழியைத் தேடியவர்கள்; இப்பிரபஞ்சத்துக்கு ஏற்ற ஒத்த வேஷம் தரியாதவர்கள். இவர்களும் கிறிஸ்தவர்கள்தான். இவர்களிடம் இருப்பதுதான் எண்ணெய். 

எண்ணெய் இல்லாதவர்கள் தாங்கள் மீண்டும் பூமிக்குப் போய் ஒரு நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து எண்ணெய் சம்பாதித்துக் கொண்டு வருகின்றோம் என கடையைத் தேடி போய்விட்டனர்.

அந்த நேரத்தில் மணவாளன் வந்து விட்டார். எண்ணெய் இருந்தவர்கள், வருகையில் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். எண்ணெய் இல்லாதவர்கள் மீண்டும் உலகத்த்குள் போய் ஆண்டவருக்குப் பிரியமாய் வாழ்ந்து எண்ணெய் வாங்கி வருவதற்குப் போன போது கைவிடப்பட்டார்கள்.

வாழ்ந்து எண்ணெய் சந்பாதித்துக் கொண்டு வந்து எங்களையும் உள்ளே அனுமதியுங்கள் என அவர்கள் கதவைத் தட்டிய பொழுது உங்களை அறியேன் எனக் கூறிவிட்டார். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஆண்டவர் கனியுள்ள, கீழ்படிதலுள்ள வாழ்க்கை வாழ உங்களை அழைக்கின்றார்.

ஜெபிப்போமா?

எங்களை நேசிக்கின்ற அன்பின் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு மகிமையை செலுத்துகின்றோம். உமக்கு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து உமக்கு மகிமையை சேர்க்க எங்களுக்கு கிருபை செய்யும். "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்...." நீதி.28:20ன் படி எங்களை ஆசீர்வதியும். இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென். 
     

11 Dec 2014

WE WISH YOU A MERRY CHRISTMAS!

கிருஸ்துமஸ் தேவ செய்தி
 
"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன்; நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்" ஏசாயா 9:6.
 
ந்த இடத்தில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! ஆண்டவருடைய பிறப்பின் நாளைக் கொண்டாட ஆயத்தப்படுகிற உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்! வரும் ஆண்டிலும் தேவன் தம்முடைய பிள்ளைகளை இந்த வாக்கின்படி ஆசீர்வதிப்பார்!
 
ந்த வசனத்தில் நமது இரட்சகருக்கு ஐந்து பெயர்கள் சூட்டப் பட்டுள்ளது. இங்கு நான் வெறுமனே பெயர்களை விவரிக்க விரும்பவில்லை. இந்த ஐந்தும் அவருடைய இயற்கையான, மகிமையான தன்மையாகும்
 
1.அதிசயமானவர்:
யேசு கிறிஸ்துவின் பிறப்பே அதிசயமானது.
 
"இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்......"மத்தேயு 1:23
கிறிஸ்து பிறப்பதற்கு முன் 7௦௦ ஆண்டுகளுக்கு முன்பதாகவே, இயேசுவின்  பிறப்பை  முன் அறிவித்த ஏசாயா என்னும் தீர்க்கதரிசி, 7:14ல், 
 
"ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்,....."
 
கூறிய தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது. கன்னிகையின் வயிற்றிலே பிறந்ததே ஒரு அதிசயந்தானே! அதிசயமானவர் என்றால் அதிசயம் நிறைந்தவர், ஆச்சரியத்தைத் தூண்டுபவர் என்று பொருள் படும். இயேசு பிறந்த பொழுது மந்தையைக் காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு அது அதிசயம்! வான சாஸ்திரிகளால் அந்த நாட்டு மன்னனுக்கு இயேசுவின் பிறப்பு ஒரு அதிசயம்! இப்படி ஏழை மக்களில் இருந்து நாட்டை ஆளும் மன்னன் வரை ஆச்சரியப்பட்டார்கள்! 
 
னோவா என்பவருக்கு பல வருடங்களாக பிள்ளையில்லை. மேலும் இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தியரின் அடிமைகளாக இருந்தனர். இவர்களை விடுவிக்க ஒரு விடுதலை வீரன் தேவைப்பட்டார். தேவனுடைய தூதன் மனோவாவின் மனைவியிடம் அனுப்பப்பட்டார். பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும்? என்ற வழிகாட்டுதலைப் பெற்ற பின், இது நிறைவேறும் பொழுது நாங்கள் உம்மைக் கனப்படுத்தும்படிக்கு உமது பெயர் என்ன? என்றார்கள். கனத்தை நீ கர்த்தருக்குச் செலுத்து எனக் கூறியபின், என் பெயரைக் கேட்பானேன், அது அதிசயம் என்றான்.
 
தை வாசிக்கிற நீங்களும் அதிசயமான கர்த்தரை கனப்படுத்தும் போது / மகிமைப்படுத்தும் போது, மனோவாவுக்கு செய்த அதே அற்புதத்தை உங்களுக்கும் செய்வார்.
 
2. ஆலோசனைக் கர்த்தர்:
 
"எனக்கு வழிகாட்டியாய் இருக்கிற தேவனுக்கு நான் துதிகளைச் செலுத்துவேன்; இரவிலே எனது நினைவுகளில் இருந்து எனக்கு அறிவு வரும்" சங்கீதம் 16:7. (BIBLE IN BASIC ENGLISH)
 
மேலே உள்ள வசனத்தின்படி, நான் ஆண்டவரைப் புகழ்ந்து துதிக்கும் பொழுது, இரவிலே தமது ஆலோசனையைத் தருகின்றார். ஆலோசனை கொடுக்கக் கூடியவரின் தகுதி:
 
"ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாய் இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? ரோமர் 11:33,34
 
"ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும்  எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவ பெலனும் தேவ ஞானமுமாயிருக்கிறார்" 1 கொரிந்தியர் 1:24
 
"அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது" கொலோ. 2:3.
 
ப்படிப்பட்ட ஆண்டவரைத் துதித்து, ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுவதைத் தவிர்த்து நாம் எங்கெல்லாமோ அலைகிறோம். ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்திருந்தோமானால் நாம் ஆண்டவரை விடவே மாட்டோம். இந்த கொண்டாட்டத்தின் நாட்களில் நாம் ஆண்டவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுவோம். கடைசியாக, நீதி.8:23ல்,
 
"ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது"
 
3. வல்லமையுள்ள தேவன்:
ங்கள் சிறுவர் ஊழியத்தில் பிள்ளைகளுக்கு படங்களை வைத்து சத்தியத்தைப் போதிக்கும் பொழுது,
 
"வானத்தில் என்னவெல்லாம் இருக்கிறது?"
 
"மேகம், சூரியன்,சந்திரன், நட்சத்திரங்கள்"
 
"இவைகளைப் படைத்தவர் இவைகளைக் காட்டிலும் சின்னவராக இருந்தால் இவைகளைப் படைக்க முடியுமா?"
 
"முடியாது" 
 
புதிதாக ஒன்றைப் படைக்க வேண்டுமானால், அல்லது உருவாக்க வேண்டுமானால் அல்லது உருவாக்க வேண்டுமானால் (உதாரணமாக கணினி) நாம் அதைவிட பெரியவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அதைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவர் வானத்தையும் பூமியையும் படைத்தார், நம்மையும் படைத்திருக்கிறார். நம்மைப் பற்றி சகலத்தையும் அறிவார். நமக்கு என்ன திறமை இருக்கிறது? எப்படி நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதையும் ஆண்டவர் அறிந்திருக்கிறார். எனவே ஆண்டவர்  நாம் நினைப்பதைக் காட்டிலும் பெரியவராகவும், வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார். அவர் வல்லமையுள்ள தேவன், உனக்காக எல்லாவற்றையும் செய்து முடித்தவர். சகலத்தையும் அறிந்த ஆண்டவரிடம் நாம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவோம்.
 
4. நித்தியப் பிதா:
யேசு கிறிஸ்த்துவுக்கு இன்னொரு பெயர் உண்டு அது நித்திய பிதா - அழிவில்லாத தகப்பன். யோவான் 1௦:3௦ல், 
 
"நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்றார்" 
 
மேலும், 14:9ல், 
 
"...... இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;...." 
 
ஏசாயா 8:18ல், 
 
"இதோ நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்"
 
மேலே உள்ள இந்த வசனம் எபிரேயர் 2:13,14ல்
 
"உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும், நான் அவரிடத்தில் நம்பிக்கையாய் இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்"
 
ள்ள இந்த வசனத்தின்படி இது இயேசு கிறிஸ்து கூறுவதாக இருக்கிறது. அவருடைய அன்பு எவ்வளவு மேலானது, அவர் நமக்கு நித்திய பிதாவாய் இருக்கிறார். ஏசாயா 53:10ல், 
 
"கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய் ஆத்துமா தன்னை குற்றநிவாரண பலியாக ஒப்புக் கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்"
 
யேசு சிலுவையில் அடிக்க ஒப்புக் கொடுத்தபோது நம்மையெல்லாம் தமது பிள்ளைகளாக கண்டார் (நித்திய பிதா)
 
5. சமாதான பிரபு: 
நாமெல்லாருக்கும் சமாதானத்தை கொடுக்கும்படியாக, இயேசு நெருக்கப்பட்டார். ஏசாயா 53:5ல்,
 
"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குனமாகின்றோம்"
 
யேசு பிறந்த பொழுது, தேவ தூதர்கள், கேரல் பாடல்களைப் பாடினார்கள். அது:
 
"உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்"
 
மாதான பிரபுவாகிய இயேசு கூறியது:
 
"சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை, உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக"
 
வானத்தையும் பூமியையும் படைத்த கடவுளோடு நாம் சமாதானமாய் இருக்கும்படியாக சுவிஷேசத்தைக் கூறினார்.
 
"எல்லோருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவைக் கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிஷேசமாய்க் கூறி...." அப்.10:36
 
கொலோ.1:20,21ல்,
 
"அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாயும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்" 
 
யேசுவின் இரத்தத்தினாலே நாம் பிதாவாகிய தேவனோடு சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம், இவரே மெய்யான சமாதான பிரபு.
 
 
ஜெபிப்போமா?
 
அன்புள்ள இயேசுவே, உம்மைக் கனப்படுத்தி மகிமைப்படுத்துகிறோம், எங்களுக்கு அதிசயத்தைச் செய்கிறபடியால் நன்றி செலுத்துகிறோம். எங்களுக்கு தேவ பெலனும், தேவ ஞானமுமாய் இருக்கிற ஆலோசனைக் கர்த்தரே உமக்கு மகிமையைச் செலுத்துகின்றோம். வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனே உமக்கு மகிமையை செலுத்துகின்றோம். குற்ற நிவாரண பலியாக உம்மை ஒப்புக் கொடுத்தபோது எங்களையெல்லாம் உமது சந்ததியாக கண்ட நித்திய பிதாவே உமக்கு நன்றியை செலுத்துகின்றோம். உம்முடைய சமாதானத்தையே எங்களுக்குக் கொடுத்திருக்கிற சமாதான பிரபுவே உமக்கு கோடாக் கோடி துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறோம். உமது பிறப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்ற இந்த சூழ்நிலையிலும், வருகின்ற புது வருடத்திலும் உமது இந்த ஐந்து நாமங்களைத் தியானித்த தியானம் எங்கள் ஒவ்வொருவரோடும் இருந்து வழி நடத்தும்படியாய் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே. ஆமென். ஆமென்.
 
 
An appeal to you,
 
Salvation, is the saving of the soul from sin and its consequences. It may also be called "deliverance" or "redemption" from sin and its effects. It is completely free. Salvation can't be obtained by the sacrifice of animals nor by shedding our hair. It can't be obtained by visiting pilgrims or by hurting ourselves with sharp things.
To be saved,we have to confess our sins to Jesus Christ.Then he will clense us from our sins,by his blood and purify us. No man on earth can save you,it can be done only by Christ and the people of God will be able to guide you to be saved. Jesus said in Mark 16:15,16,

     “ And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature. He that believeth and is baptized shall be saved; but he that believeth not shall be damned”.
 
The expense of proclaiming the gospel to the gentiles is more. We can testify in the streets, distribute tracts and give gifts to children. It is also expensive to print and buy tracts. We are unable to do the gospel work without money.
          Let God bless those who donate towards this ministry.
We do these ministries,
1. ZION'S CHILDREN MINISTRY:
a. Training program for volunteers
b. Weekly Sunday Schools in villages also.
c. Children Bible School in summer holidays
d. Cultural programs @ Christmas times.
2. “ESCHATOS”: A monthly magazine (trumpet of zion)It’s subscription Rs.50/- per year. Rs.600/- Life in India
$ 10/- per year and $ 500/- Life.
3. TRACT PRINTING & PUBLISHING.
 We published 10 Tracts.
1. You have appointment with death. (available)
 (ungalaiyum saavu santhikkum)
2. The truth about the lie. (Not available. To be printed)
 (poiyai pattrria oor unmai)
3. Repentance toward God (Not available. To be printed)
  (kadavulidam (manan)thirumpungal)
4. Old fashioned parents and modern age youth (Not available. To be printed)  (hyder kaalaththu perrorum nava yuga izhaignarkalum)
These tracts are translated from “BIBLE HELPS” booklets and tracts
 
5. Christmas vaazhththukkal (Christmas greetings)
These tracts are distributed in Tamilnadu and in few other countries to transform the Tamil community. If you want to pariticipate in the ministry to spread the gospel thro' distribute tracts, please send  in your postal address to +919840836690. Sample tracts will be  sent to you freely.
Some tracts are yet to be printed and published
1. “Vice of sexual immorality” (paaliyal kuttrrangal).“Bible helps”
2. “The search for Happiness”(magizhchchiyai thedi).“Bible helps”
 
If you want be a part of this tract ministry, please donate Rs.20,000 for tracts to be printed and distributed all over the world in your family name.
 
4. VILLAGE MINISTRY:
We do this ministry once in every month in villages nearby Chennai.
Contact:
Bro.K.Selvin durai
Poppy's house
#63-A, 6th Main Rd, 2nd Layout,
Laxmipuram, Teachers Colony,
Kolathur, Chennai - 600 099

www.youtube.com/zion’schildrenbilbeschool
www.facebook.com/selvin.durai.1
Visit as at www.karunyas.blogspot.com & www.zrmindia.blogspot.com
Donation through bank:
Zion Revival Ministries,
Indian Bank ottery branch,
A/c No:441176777.
IFS Code: IDIB000O004
                           
THANK YOU
"Give, and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over, shall men give into your bosom. For with the same measure that ye mete withal it shall be measured to you again" Luke 6:38  
 

21 Nov 2014

NO EVIL BEFALL.....

பொல்லாப்பு உனக்கு நேரிடாது
"ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது" (சங்கீதம் 91:1௦)

ந்த இடத்தில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
இந்த வசனத்தின் மூலமாக ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக....  இதற்கு முந்தய வசனத்தின்படி உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர்  உன்னதமானவராகவும் அடைக்கலமானவராகவும் இருந்தால் பொல்லாப்பு உங்களுக்கு நேரிடாது. 
 
ங்கள்  வாழ்க்கையில் ஆண்டவரை உன்னதமான இடத்தில் (முதலிடத்தில்) வைக்க வேண்டும். எதை ஆரம்பித்தாலும், செய்தாலும் ஆண்டவரிடம் கேட்க வேண்டும். ஆண்டவருடைய சித்தம் என்ன என்பதைத் தேடவேண்டும். பிரச்சனைகள் வரும் பொழுது ஆண்டவரை அடைக்கலமாக - புகலிடமாகக் கொள்ளவேண்டும். ஆண்டவரையே வழுமிடமாக கொள்ளவேண்டும்.
 
முன்பு ஒரு காலத்தில், ஆஸ்டின் என்ற ஒரு ஊழியக்காரர், ஒரு குறிப்பிட்ட ஊரில் பிரசங்கிப்பதர்க்காக சில உடனூழியர்களோடு சென்றார். இங்கு அநேகரை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்காக வருகின்றார் என கேள்விப்பட்ட கிறிஸ்தவ விரோதிகள் சிலர்,  அவரை கொல்லுவதற்காக அவர்கள் வரும் வழியில் ஆயுதங்களோடு   பதுங்கி இருந்தனர். ஊழியர்கள் வந்த பாதை இரண்டாகப் பிரியவே, அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவனிடம் வழியை விசாரித்தனர். அவன் சரியான வழியை காட்டாமல் சுற்று வழியைக் காட்டிவிட்டான். இவர்கள் நீண்ட தொலைவு நடந்து வந்து குறிப்பிட்ட கிராமத்தை அடைந்தனர். பின்பு விஷயம் தெரிந்து, தங்களது வசிப்பிடமாக/உறைவிடமாகக் கொண்ட  ஆண்டவரை மகிமைப்படுத்தினர். (அபாய நேரத்தில் பாதுகாப்பு) 
 
நீங்கள் பிற மனிதர்களால் ஏமாற்றப் பட்டுவிட்டோம்/ வஞ்சிக்கப் பட்டுவிட்டோம் என நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களா? ஆண்டவர் பொல்லாப்புக்கு உங்களை விலக்கிக் காத்துக்கொண்டார் என விசுவாசியுங்கள். யோபு 5: 19, 2௦ல்,
 
"ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக் மீட்பார்".
 
ஞ்ச காலத்திலே விதவையையும், தானியேலை சிங்கத்தின் கெபியிலும், தேவனுடைய பிள்ளைகளை சூளையின் சூட்டிலிருந்தும் (மரணத்தின் பிடியிலிருந்து) பாதுகாத்த தேவன் உங்களையும் பாதுகாத்து நடத்துவார். 
 
விஷம் அல்ல, பாதுகாப்புதான் மாற்று மருந்தை உண்டாக்கும். யோசேப்பு குழியிலே விழ தள்ளப்பட்டான், எகிப்திற்கு விற்கப்பட்டான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவனுக்கு ஆண்டவருடைய பாதுகாப்பு இருந்தது. உயர்த்தப்பட்டான். எஸ்தர் தான் செத்தாலும் சாகிறேன் என்றாள். விசுவாசம் இடர்களுக்கு மத்தியில் பாதுகாப்பை உண்டாக்குகின்றது. 
 
ப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும், எடுத்துக்கொண்ட முயற்சியில் எந்த இடர்பாடுகளை நீங்கள் சந்தித்தாலும் ஆண்டவரை உன்னதமானவராக கொண்டிருக்கிற உங்களைப் பாதுகாப்பார். 
 
ண்டவரையே நம்முடைய உறைவிடமாக கொண்டிருக்கிறபடியால் வாதை (வெறுமனே வியாதி மட்டுமல்ல, குடும்பத்திலே ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொள்ளுதல், சண்டை சச்சரவு, அமைதிக்கு பங்கம், பிறர் மூலமாக குடும்பத்திலே வரக்கூடிய பிரச்சனைகள் இவைகள்)  நம்முடைய கூடாரத்தை அணுகாதபடி பாதுகாப்பார்.
 
ஜெபிப்போமா?
 
எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வருகின்றோம். இந்த வாக்குத்தத்தம் எங்களுடைய குடும்பத்திலே நிறைவேறுவதற்காய் நன்றி செலுத்துகின்றோம். எங்கள் வாழ்நாளெல்லாம் எங்களுக்கு வரும் ஒவ்வொரு இடர்பாடுகளிலும் பொல்லாப்பு எங்களை அணுகாதபடி பாதுகாப்பதற்க்காய் நன்றி செலுத்துகின்றோம். எங்கள் வீடுகளிலே எப்பொழுதும் உமது பிரசன்னம் இருக்கிறபடியால் நன்றி.... இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள்  பிதாவே. ஆமென்.
 

13 Oct 2014

IF YOU BELIEVE........

நீ விசுவாசித்தால்.....
 
"நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா என்றார்" (யோவான் 11:40)
 
 
கிறிஸ்துவில் பிரியமானவர்களே...... இந்த இடத்தில் உங்களை சந்திக்கச் செய்த கிருபைகளுக்காய் நம் ஆண்டவரை ஸ்தோத்தரிகின்றேன்!அற்புதத்திற்காய் நம் ஆண்டவரை சந்தித்த ஒவ்வொருவரிடமும் ஆண்டவர் எதிர்பார்த்தது விசுவாசத்தையே என்பதை நாம் அறிவோம்!
 
ருமுறை ஊழியத்துக்கு சென்ற பொழுது, ஒரு சகோதரி என்னை தெருவில் சந்தித்து, "பிரதர் என் தம்பி குடிப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என நான் 3 நாட்களாக உபவாசித்து ஜெபித்து வருகின்றேன், இது மூன்றாவது நாள்" என்றார்கள். நான் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேச ஆரம்பித்தேன். நான் பேசி முடிப்பதற்குள்ளாக, "இவன் எங்க திருந்தப் போகிறான்?" என்று திட்ட ஆரம்பித்தார்கள். நான் "நீங்கள் எதற்காக ஜெபிக்கின்றீர்களோ அதை ஆண்டவர் நிறைவேற்றுவார் என விசுவாசித்து விசுவாச வார்த்தைகளைப் பேசுங்கள்." எனக் கூறினேன். நான் ஜெபிப்பதை ஆண்டவர் கேட்க விரும்புகின்றார், அதே நேரத்தில் நான் பேசுவதையும் கவனித்துக் கேட்கின்றார். (மல்கியா 3:16) இதிலே நாம் கவனமாய் இருக்க வேண்டும்.
 
மது 'பொய்யைப் பற்றிய உண்மை' என்ற கைப்பிரதியிலே ஒரு பாடல் ஒன்று வரும். அது,
 
இங்கே ஒரு சிறிய கதவு
எல்லோரும் அதைப் பூட்டலாம்
அந்த சிறிய கதவு
உங்கள் மூக்குக்குக் கீழே
 
நேக நேரங்களில் பேசாமல் இருந்தாலே அற்ப்புதங்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும். எப்படி ஆண்டவர் நமது விசுவாசத்தை எதிர்பார்க்கின்றாரோ அதைப் போலவே நமது விசுவாச அறிக்கையையும் ஆண்டவர் எதிர் பார்க்கின்றார். ஆண்டவர் என் ஜெபத்துக்குப் பதில் தருவார் என்று விசுவாசித்துவிட்டு, நான் எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசுவேன்' என்றால் எப்படி நாம் அற்புதத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்? எதற்காக நாம் ஜெபிக்கின்றோமோ, அதிலே நாம் பொறுப்புடையவர்களாக இருக்க வேண்டும்.
 
யேசுவுக்கு முன் விசுவாசத்தை அறிக்கை செய்த ஒரு மனிதனை நாம் பார்ப்போமா! அவனது அறிக்கை இயேசுவையே ஆச்சரியப்பட வைத்தது. மத்தேயு 8:8,9ல்,
"நூற்றுக்கு அதிபதி பிரதியுத்திரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப் பட்டவனாயிருந்தும், எனக்கு கீழ்ப் பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனை போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகின்றான், என் வேலைக்காரனை இதை செய் என்றால் செய்கிறான் என்றான்"
வாயிலிருந்து புறப்படும் வார்த்தைக்கு எவ்வளவு வல்லமை இருக்கின்றது என்பதை இந்த நூற்றுக்கு அதிபதி நன்கு அறிந்திருந்தான். இதுவே ஆண்டவரை ஆச்சரியப்பட வைத்தது. நாமும் நமது விசுவாசத்தை அறிக்கையிடுவதில் கவனமாயிருப்போம். விசுவாச அறிக்கை என்றாலே நமது நினைவுக்கு வருவது 23 ம் சங்கீதந்தான்.
 
1. "கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன்........." ஆண்டவர் என் மேய்ப்பராய் //// வழிகாட்டியாய் //// என்னை ஆளுகை செய்பவராய் இருக்கிறார். எனவே நான் தாழ்ச்சியடைவதில்லை, குறைவு பட்டுப் போவதில்லை, மாறாக நான் மேன்மையடைவேன். என்னுடைய எல்லாச் சூழ்நிலையும் இயேசுவின் கட்டுப்பாட்டுக்குள்ளாக இருக்கிறது.
 
2. "அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகின்றார்............." எனக்கு நல்ல வருமானம் வரும் இடத்திற்கு என்னை வழி நடத்துகின்றார். என்னைப் போஷிக்கின்றார், நான் பரிபூரண திருப்தியடையும் படி என்னை ஆசீர்வதிக்கின்றார். எனவே நான் சுகித்திருக்கிறேன். எந்த எதிரியின் பயமும் எனக்கு இல்லை. கவலையும் எனக்கு இல்லை.
 
3. "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி தமது நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதையில் நடத்துகின்றார்........" நான் என் வாழ்க்கையில் சந்திக்கிற எந்த கடினமான  சூழ்நிலையையும் தமது நாம மகிமைக்காக பயன்படுத்துகிறார். (நான் ஏமாற்றப் படும்போதும் //// துன்பப்படும்போதும்) அவர் என் உள்ளத்தைத் தேற்றி,  அவரது நாம மகிமைக்காக என்னை நீதியின் பாதையில் நடத்துகின்றார். (இதை சொல்லும் போதே உங்கள் உள்ளத்தில் சமாதானத்தை உணருவீர்கள்).
 
4. "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்......." உதவி செய்ய ஒருவருமில்லாமல், கஷ்ட்டத்தின் மத்தியில், என்னைப் புரிந்து கொள்ள ஆளில்லாத சூழ்நிலையில் மரண இருளிலே இருந்தாலும், சகலத்தையும் அறிந்திருக்கிற தேவன் என்னோடிருக்கின்ரீர். அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நிற்கின்ற சூழ்நிலையிலும், தேவரீர் உமது வழியைவிட்டு நான் விலகிச் செல்லும் போதும், உமது கோலும் உமது தடியும் என்னை மிகச் சரியான வழியிலே நடத்துகிறது. 
 
5. "என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி, என் தலையை எண்ணையால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது........." நான் அவமானப் படுவதையும், நான் துன்பப்படுவதையும், பட்டினியாய் இருந்து கஷ்டபடுவதையும் கண்டு, சந்தோஷப் பட நினைக்கின்ற என் எதிரிகளுக்கு முன்பாக என் தலையை உயர்த்துகிரீர். மகிழ்ச்சியினால் என்னை நிறம்பி வழியப்  பண்ணுகின்றீர். 
 
6. "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.........." நான் உயிருடன் இருக்கும் வருடங்கள் எல்லாம்  நன்மையினாலும் தேவ கிருபையினாலும் நிறைந்திருப்பேன். நான் நீண்ட ஆயுளோடு இந்த உலகத்தில் வாழுவேன். 
 
இப்படி நாம் பொருளை உணர்ந்து, நமது விசுவாசத்தை அறிக்கை செய்தால், ஆயுள் முழுவதும் நன்மையினாலும் கிருபையினாலும் நிறைந்திருப்போம். விசுவாசத்தை அறிக்கை பண்ணுங்கள் ஆசீர்வதிக்கப் படுவீர்கள்
 
"நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா என்றார்" (யோவான் 11:40)
 
ந்த 11ம் அதிகாரம் முதலில் இருந்து வாசித்தோமானால் நிறைய உண்மைகளை நாம் அறிந்து கொள்ள முடியும். நாம் நமக்கு இங்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளப் போகிறோம். வசனம் 4ல்,
 
"இயேசு அதைக் கேட்ட பொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாய்ருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப் படுவார் என்றார்"
 
னக்கன்பான நண்பர்களே... நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், எந்தப் பிரச்னையை நீங்கள் சந்தித்தாலும், எந்த குறைவுகளில் நீங்கள் இருந்தாலும் அதனாலே ஆண்டவருடைய நாமம் மகிமைப்படும் என்பதை அறியுங்கள். அல்லேலுயா! அறிக்கை செய்யுங்கள்!
 
பெத்தானியாவுக்குப் போய் ஜெபிக்க நாலு நாள் தாமதப்படுத்தினார்!  உங்கள் ஜெபத்திற்கு பதில் தாமதமானாலும் மிகச் சரியான நேரத்தில் ஆண்டவரிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுக் கொள்ளுவீர்கள்!
 
நேராக மார்த்தாளும் மரியாளும் ஆண்டவரை சந்தித்த இடத்துக்கு வருவோம். அவர்கள் என்ன விசுவாச அறிக்கை செய்தார்கள் என்பதைக் கவனிப்போம்!   சத்தியம் உங்களை விடுதலையாக்கும்! வசனம் 21,22ல்,
 
"மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருநதீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாறேன்று அறிந்திருக்கிறேன் என்றாள்"
 
ன்ன ஒரு அருமையான அறிக்கை! இப்பொழுது நீர் ஜெபம் பண்ணினால் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்றாள். சூப்பர்! உடனே (வ23)
 
"இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயித்தெழுந்திருப்பான் என்றார்" 
 
டனே ஆச்சரியப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு 'வாருங்கள் ஆண்டவரே... கல்லறையில் அவனை வைத்த இடத்தைக் காட்டுகின்றேன் என்று கூறிக் கொண்டே இயேசுவுக்கு முன்னே ஓடினாள். ஆனால் வேதாகமத்தில் அப்படி இல்லை. (வ 24)
 
"அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கின்றேன் என்றாள்"
 
ரு அற்புதத்தை எங்கோ கொண்டு சென்றுவிட்டாள். மரியாளாவது சரியான அறிக்கை செய்தாளா எனப் பார்த்தோமானால் அதுவும் இல்லை. வ 35ல்,   
 
"இயேசு கண்ணீர் விட்டார்".
 
ப்பொழுது, வசனம் 39
 
"இயேசு கல்லை எடுத்துப் போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே என்றாள்"
 
ற்புதத்தை எதிர் பார்க்கும் என் அன்பு சகோதர சகோதரிகளே..... நீங்களும் அற்புதத்திற்கு எதிராய் பேசிக் கொண்டிருக்கின்றீர்களா? ஆனாலும் ஆண்டவர் தாம் ஏற்கனவே நிச்சயித்து இருந்ததினால் (வ 4) யாருமே எதிர்பாராத ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். ஆண்டவரே உம்மிடத்தில் அற்புதத்தை எதிர்பார்த்துவிட்டு அதற்கு எதிராய் பேசியதை மன்னியும் என்று ஜெபித்து மனந்திரும்புங்கள். இதை வாசிக்கின்ற நீங்கள் ஒரு அற்புதத்தைச் சந்திப்பீர்கள்!
 
மது ஆண்டவருடைய ஜெபத்தைப் பார்ப்போம்! (வ 41,42)
 
"அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப் போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவி கொடுத்தபடியினால் உம்மை ச்தொத்தரிகின்றேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவி கொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதை சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்"
 
ம்மெல்லாருக்கும் சவால் நிறைந்த ஒரு ஜெபம்! நம்மில் எத்தனை பேர் இப்படி ஜெபிக்க முடியும்? விஷேசமாக ஊழியர்கள்....... ஆண்டவரை விட்டு விலகச் செய்யும் பிசாசு, உலகம் மாம்சத்துக்கு எதிர்த்து நில்லுங்கள். தேவ பிரசன்னத்தினால் நிறைந்திருங்கள்!
 
"சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்" (எபிரெயர் 3:12)
 
மேலும்,
 
"இவைகளைச் சொன்ன பின்பு லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான்......" (வ 43,44)
 
வ்வளவு மகிழ்ச்சி!! மரித்த சகோதரனை இனிமேல் பார்க்க முடியாது என்று அழுது கொண்டு, துக்கத்தோடு இருந்த சகோதரிகளுக்கு எத்தனை மகிழ்ச்சி!! சூழ நின்ற ஜனங்கள் எல்லோரும் வாவ்.....! தேவனைப் புகழ்ந்தார்கள்! இதை வாசிக்கின்ற நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அற்புதத்தை வரும் நாட்களில் பெற்று ஆண்டவரை புகழுவீர்கள்!
 
 ஜெபிப்போமா!
 
ங்களை நேசித்து வழிநடத்தி வருகின்ற எங்கள் அன்பின் பிதாவே! எங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள கிருபை செய்யும்.  குறிப்பாக ................ ........................ ..................... ............... ................... ........................ ..................... ........................ .......................... ........................... ................ ................................ ..................................... .................................... ............................ ........................ .. ..................................... ..........................................  (இங்கே ஆண்டவர் உங்களுக்கு செய்யவேண்டிய அற்புதத்தை சொல்லுங்கள்) இதிலே அற்புதத்தை செய்வதற்காய் நன்றி..... இயேசுவின் மூலம் ஜெபங்களும் பிதாவே.
 
 
 
 

10 Oct 2014

"ALL THINGS ARE POSSIBLE TO HIM THAT BELIEVETH"

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்
 
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! இந்த இடத்தில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்!
 
"விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" மாற்கு 9:23
என்ற வசனத்தின் மூலமாக ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்தவிருக்கும் மாற்றங்களை ஆவலோடு எதிர் பார்க்கின்றேன்!
 
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை நாம் விசுவசித்துதான் பெற்றுக் கொள்ளவேண்டும். எபிரேயர் 6:11ல்,
 
"நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிரவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து..........."

என வேதம் கூறுகின்றது. இதன்படி இயேசுவிடமிருந்து அற்புதங்களை, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டுமானால், நாம் 1. அசதியாய் இருக்கக் கூடாது. 2. விசுவாசம் தேவை. 3. நீடிய பொறுமை தேவை. இந்த வசனமும் நமக்கு விசுவாசம் அவசியம் தேவை என வலியுறுத்துகின்றது.
மேலும் இயேசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் தம்மை அற்புதம் செய்ய வேண்டி சந்திக்க வந்தவர்களிடம் விசுவாசத்தை எதிர்பார்த்தார். மத்தேயு 9:22ல்,
 
"இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்"
 
மத்தேயு 9:29ல்,
 
"அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக் கடவது என்றார்"

 
மாற்கு 9:23ல்,
 
"இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்"
 
யோவான் 11:40ல்,
 
"இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்"
 
மேலும் வேதாகமத்தில், விசுவாசத்தை குறித்து, ரோமர் 8:33; 10:11ல்,
 
"அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை....."
 
ரோமர் 14:23ல்,
 
"விசுவசத்தாலே வராத யாவும் பாவமே"
 
மேலும், எபிரேயர் 11:6ல்,
 
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்......"
நமது விசுவாசத்தைப் பெருக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? அது சம்பந்தமாக, வேறு சில வசனங்களைத் தியானிப்போம்.இயேசு தமது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்த போது, லூக்கா 17:5ல்,
"அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள்"

இதற்கு முந்தய வசனங்களை நாம் பார்க்கும் போது, இயேசு கிறிஸ்து மன்னிப்பின் அவசியத்தைக் குறித்து பேசிய பொழுது அவருடைய சீடர்கள் மேற்கண்டவாறு கேட்டனர். நமது விசுவாசம் வல்லமையுள்ளதாக சாரமுள்ளதாக இருக்க வேண்டுமானால் நாம் பிறரை மனதார மன்னிக்க வேண்டும். இதன் அர்த்தம் என்னவெனில், 
 
எனக்கு விரோதமாக, துரோகியாக நீ எதை செய்தாலும் எனது அற்புதத்தை இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்ளுவேன் என்பதுதான். என்னை கோபப்படுத்தி  என் விசுவாசத்தை குறைத்து விட முடியாது என்பதுதான்! 
மன்னிக்க முடியவில்லையானால், இயேசு கிறிஸ்து தமது மலைப் பிரசங்கத்தில் மத்தேயு 5:44ல்,
 
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துபவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்"
 
என்ற வசனத்திற்கு கீழ்படியுங்கள். நாம் பிறரை மன்னித்தால்தான் நாம் ஆண்டவரிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சத்தியம் மாறாதது. மத்தேயு 6:12ல், 
 
"எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்"
 
ஆண்டவர் இதை விரும்புகின்றார். நீங்கள் அற்புதங்களைப் பெற்றுக் கொள்ள ஆயத்தப்படுகின்றீர்கள்.            
   
2. நமது விசுவாசம் காணக் கூடியதாக இருக்கவேண்டும்: எங்கள் சிறுவர் ஊழியத்தில், அன்பைக் குறித்து சொல்லிக் கொடுக்கும் போது, உங்கள் அப்பா, அம்மாவிடம் எப்படி உங்கள் அன்பைக் காட்டுவீர்கள்? எனக் கேட்டால், சில பிள்ளைகள் என் அம்மாவிற்கு நான் முத்தம் கொடுப்பேன், சிலர், 'அம்மா சொன்ன வேலைகளை செய்வேன்' சிலர், 'அன்பாக இருப்பேன்' இப்படிக் கூறுவார்கள். இங்கே நம் விசுவாசம் காணக் கூடியதாக இருக்க வேண்டும். மத்தேயு 9:2ல், 
 
"இயேசு அவர்களுடைய விசுவாசத்தை கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன் கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப் பட்டது என்றார்"
 
 
மாற்கு 2:5லும், இதே சம்பவத்தை நாம் பார்க்கின்றோம். கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என வேதம் நமக்கு போதிக்கின்றது. செயல்களின் மூலமாக நாம் நமது விசுவாசத்தைக் காட்டவேண்டும். எனது ஊழியத்தில் நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
 
ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு, வாரத்தில் ஒரு நாள் நான் தவறாமல் ஊழியத்துக்கு செல்லுவது உண்டு. தனித்தாள் ஊழியம். வீடு வீடாக சென்று அவர்களை விசாரித்து, ஆண்டவருடைய அன்பைக் கூறுவேன். அநேகர் குடும்பமாக இரட்சிக்கப் பட்டார்கள்; சிறுவர் ஊழியத்தையும் ஆரம்பித்து செய்து வந்தேன். சுமார் 3௦ பிள்ளைகள் வருவார்கள். ஒருநாள் சில வீடுகளை சந்தித்துவிட்டு, அந்த பகுதியின் மையத்தில் இருந்த ஒரு திண்டில் உட்கார்ந்து எனது ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சகோதரி ஒரு வயதுள்ள ஒரு குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு, "சார்..... இந்தக் குழந்தை காலையில் இருந்தே அழுகின்றது. தயவு செய்து வேண்டுங்கள்" என்றார்கள். சரி நான் உங்கள் வீட்டுக்கே வருகின்றேன் என்று கூறவே, அவர்கள் முன் சென்றார்கள். நான் பின்னாலே சென்றேன். என்னோடு கூட ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளும் வந்தார்கள். குடிசைக்குள்ளே சென்றேன். உள்ளே இன்னொரு குழந்தை இரண்டு வயதிருக்கும், ஒரு கந்தல் துணியில் படுத்திருந்தது. இதுக்கு என்ன? "அவனுக்கும் ஜுரம் சார்...." தொட்டுப் பார்த்தேன் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. தேங்காய் எண்ணை இருக்கிறதா? கேட்டுவாங்கி நெடுமுழங்காலில் ஜெபிக்க ஆரம்பித்தேன். முதலாவது அந்த சிறு குழந்தைக்கு எண்ணை பூசி ஜெபித்தேன். பின்பு அந்த 2 வயதுப் பையனுக்கும் எண்ணை பூசி ஜெபித்தேன். பின்பு சத்தியத்தை சொல்ல ஆரம்பித்தேன். அப்பொழுது ஞாயிறு பள்ளி பிள்ளைகள், "இன்னும் அழுதுகிட்டே இருக்கு பாரு சார்" ஒரு வினாடி திகைத்தேன். பக்கத்திலிருந்த பாட்டிலில் இருந்த எண்ணையை எடுத்து, இயேசுவின் இரத்தம் ஜெயம் என சத்தமாக கூறி, தனது தாயின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்த குழந்தையின் வயிற்றில் (அதுதான் எனக்கு எட்டிய இடத்தில் இருந்தது) தடவினேன். அடுத்த நொடி குழந்தை தன் அழுகையை நிறுத்தியது. அந்த 2 வயதுப் பையனைப் பார்த்தேன் அவன் எழுந்து விளையாடிக் கொண்டிருந்தான். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! எனது ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளின் கண்களிலும் மகிழ்ச்சி! சத்தியத்தை சொன்னேன். ஆண்டவர் நமது விசுவாசத்தைப் பார்க்க விரும்புகின்றார்! கடைசியாக,
 
துதிக்கவேண்டும்: வாக்குத்தத்தத்தை நாம் சுதந்தரிக்க நாம் விசுவாசிகளின் தகப்பன், ஆபிரகாமைப் பின்பற்ற வேண்டும். ரோமர் 4:20,21ல்,
 
"தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப் படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப் படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்"

 
ஆபிரகாமின் 75 வது வயதிலே ஆண்டவர் வாக்குக் கொடுத்தார். இடையிலே சிறிது தளர்வு. மீண்டும் அவன் நம்புவதற்கேதுவான ஏதுக்களைக் (மேலே வானத்தின் நட்சத்திரங்கள், கீழே கடற்கரை மணல்) கொடுத்தார். நானும் எனது ஊழியத்தில் சில ஏதுக்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு அது ஊழியத்திலே நிறைவேறியதைக் கண்டிருக்கின்றேன். வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் சந்தேகப் படாமல்.......". சந்தேகப்படாமல் இருப்பதற்கு அவன் என்ன செய்தான்?  ஆண்டவருடைய வாக்குத்தத்தத்திற்கு எதிராய் தோன்றிய எதையுமே  அவன் எண்ணாதிருந்தான். (ரோமர் 4:19) நாமும் அப்படியே இருக்க வேண்டும். 
உதாரணமாக ஆபிரகாமுக்கு இருந்த பிரச்சனையையே எடுத்துக் கொள்ளுவோம். தற்காலத்தில் குழந்தை இல்லையெனில் டாக்டரிடம் சென்று சரீரத்தை செக் பண்ணி இருக்கலாம். குழந்தையை பெற்றெடுக்கும் அளவிற்கு சரீர நிலை இல்லை எனக் கூறியிருக்கலாம். சிலருக்கு மைன்ட் செட் ஆக வேண்டும் என்று கூறியிருக்கலாம். ஒரு சிலருக்கு குழந்தையே பிறக்காது எனக் கூட கூறியிருக்கலாம். ஆபிரகாம் என்ன செய்தான்? டாக்டர் கூறியது எல்லாம் நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் அதை அவன் எண்ணவில்லை --- பெரிதாக நினைக்கவில்லை. சோர்ந்து போகவும் இல்லை. அதை தடையாக நினைக்கவுமில்லை. மாறாக வாக்குத்தத்தத்தைப் பார்த்தான்.
 
"உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுவேன்" (சங்கீதம் 115:14)
 
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! நீங்கள் இதைப்போல  உங்கள் ஆசீர்வாதத்துக்காக, இருக்கின்ற நிலைமையை மட்டுமே  பார்க்காமல்  ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்த்து ஆண்டவருக்கு மகிமையை செலுத்துவீர்களா?
 
ஆபிரகாம் எப்படி ஆண்டவருக்கு மகிமையை செலுத்தியிருப்பான்? 
 
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிற கர்த்தாவே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். மரித்தவர்களையும் உயிரோடு எழுப்ப வல்லமையுள்ளவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். என்னுடைய பிரச்சனைகளைக் காட்டிலும் பெரியவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். என்னுடைய குறைவுகளை நிறைவாக்க வல்லமை உள்ளவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். கர்த்தாவே நீர் பெரியவர் உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை ஆகவே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். தாயின் கருவிலே என்னைக் கண்டவரே உம்மைத் துதிக்கிறேன். கர்ப்பத்தை உயிர்பிக்க வல்லமையுள்ளவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். சர்வ வல்லமை உள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம்! இப்படியாக ஆபிரகாம் தேவனுக்கு மகிமையை செலுத்தியிருப்பான்
 
ஜெபிப்போமா?
 
ஆபிரகாமின் தேவனே, ஈசாக்கின் தேவனே யாக்கோபின் தேவனே... உமது பரிசுத்தப் பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தில் தேவ சமூகத்தில் வருகின்றேன். எனது பாவங்களை உமது திருக் குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் மன்னித்து இரத்தத்தினால் கழுவி பரிசுத்தப்படுத்தும். நீர் என் மீது வைத்திருக்கும் உம்முடைய அன்பை எண்ணாமல் உலகத்தின் மீது மனதை செலுத்தியதை மன்னியும். சகலத்தையும் அறிந்திருக்கின்ற உமக்கு முன்பாக நான் பாவஞ்செய்தேன் என அறிக்கையிடுகின்றேன். நீர் அதினதின் காலத்தில் சகலத்தையும் செய்ய வல்லமையுள்ளவர் என விசுவாசிக்கின்றேன். எனது குறைவுகளை நிறைவாக்குகிறபடியால் நன்றி! எங்களையும் எங்கள்  பிள்ளைகளையும் வர்த்திக்கச் செய்கிறபடியால் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபங்களும் எங்கள் பிதாவே.  
    
      கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! பிறருக்கு பிரயோஜனம் உண்டாகும்படி உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்!
 
உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகக்கடவது

7 Oct 2014

GO IN PEACE.....

'நீ சமாதானத்தோடே போ'
"அவர் அவளைப் பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்." மாற்கு 5:34
 
ந்த வாக்குத்தத்திற்க்காய் தேவனை துதிக்கிறேன்! இதை வாசிக்கிற உங்களை ஆண்டவர் சுகப்படுத்துவார். இந்த பெரும்பாடுள்ள ஸ்திரீ சுகமாக்கிய சம்பவம், மத்தேயு 9:20-22 மற்றும் லூக்கா 8:43-48 வசனங்களிலும் இருக்கின்றது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இல்லை. லேவியராகமம் 15:19-30 வசனங்களை வாசித்துப் பார்ப்பீர்களானால் வீட்டுக்கு விளக்கமான பெண் என்னன்ன செய்து தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளவேண்டும் என விளக்கமாக பார்க்கலாம். அந்த நாட்களில் அவளைத் தொடுகின்ற யாராய் இருந்தாலும், தீட்டுப் பட்டவர்களாக எண்ணப்படுவார்கள். தொட்டவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து, குளித்தாலும் சாயங்காலம் வரைக்கும் தீட்டுப்பட்ட நிலைதான். 
 
திரத்தின் ஊரல் நின்றபின் 7 நாட்களுக்குப் பின் 8ம் நாளில் ஆலயத்துக்குச் சென்று பலி செலுத்தி உதிரத்தின் ஊரலின் நிமித்தம் பாவ நிவர்த்தி செய்ய வேண்டும். பின்புதான் அவள் சுத்தமானவளாகக் காணப்படுவாள். ஒரு பெண்ணின் நிலை மிக மோசமான நிலைதான். மாதந்தோறும் இப்படியென்றால் பன்னிரண்டு ஆண்டுகளாக உதிரத்தின் ஊரளினால் பெரும் பாடுபட்டாள். அதனால்தான் வேதம் இவளை பெரும்பாடுள்ள ஸ்திரி என்று அழைக்கிறது.
 
முதலில் வீட்டில் உள்ளவர்களோடு பழக முடியாமல், தனிமைப்படுத்தப் பட்ட வாழ்க்கை. பிள்ளையாய் இருந்தாலும் தொட முடியாது. தான் அமர்ந்த இடத்தில் பிறர் உட்கார முடியாது. எல்லாமே தீட்டாகிவிடும். இவளது நிலை மிக மோசமானதாக இருந்தது. ஏறக்குறைய தன் குடும்பத்தாராலேயே புறக்கணிக்கப் பட்ட / தீண்டத்தகாத நிலைமை. அண்டை அயலார் இவளை கண்டாலே தீட்டு என விலகிச் செல்லும் பொழுது இவள் உள்ளம் எப்படி உடைந்திருக்கும். இதில் சரீர வேதனை வேறு.
 
ந்தப் பெண்ணுமே விரும்பாத நிலை. அதுவும் அந்தக் காலத்தில் உள்ள சமுதாய நிலை மேக மோசமானது. எனவே வைத்தியர்களைத் தேடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. தான் கேள்விப்பட்ட வைத்தியரிடமெல்லாம் சென்றாள். எப்படியாவது தனக்குச் சுகமாக வேண்டும் என்ற வேகம் அவளுக்குள் இருந்தது. எனவே தன் சொத்துக்களை விற்றாவது வைத்தியம் பண்ணவேண்டும் என சொத்துக்களை விற்றாள். எந்த வைத்தியர்களாலும் அவளது நோய்க்கான காரணத்தைக் காண முடியவில்லை. நோய்க்கான காரணத்தைத் தேடவே தன் சொத்தில் பெரும்பகுதியை செலவளித்திருப்பாள்.
 
ந்த நாட்களில் இருமல் என்று டாக்டரிடம் சென்றாலே போதும். பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோசன் டெஸ்ட் என்று பல நூற்றுக்கணக்கான ரூபாய் செலவாகின்றது. மேலும் சுகமாகவில்லை எனில், எக்ஸ்-ரே, ஸ்கேன் மற்றும் எக்கோ எல்லாம் எடுக்க வேண்டும். இப்படி டேஸ்டுக்கே பல ஆயிரங்களை செலவிட வேண்டியது உள்ளது. அந்த நாட்களில் வைத்திய செலவுக்கான இன்ஷுரன்ஸ் கூட கிடையாது.
 
ந்த பெரும்பாடுள்ள ஸ்திரியோ....... தனது சொத்துக்களை எல்லாம் விற்று வைத்தியத்துக்கே செலவு செய்தாள். இன்னும் சுகமாக வில்லை. 
இப்படி பட்ட நேரத்தில் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டாள். அந்த ஸ்திரீக்கு இயேசுவை சொன்ன நபர்களுக்காக தேவனைத் துதிக்கின்றேன். இயேசுவிடம் சென்றால் சுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதை கேட்டவுடன் இவளுக்கு நெஞ்சிலே பால் வார்த்ததைப் போல இருந்திருக்கும். எந்த விதமான நம்பிக்கையும் இல்லாமல் நடை பிணமாக வாழ்ந்த இவளது உள்ளம் இயேசுவை சந்தித்தால், நோய் சுகமாகிவிடும், எதிர் காலம் பிரகாசமாய் இருக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. 
 
ன்றும் கூட நாம் இருக்கும் பகுதியில் எத்தனைபேர் இது தெரியாமல் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களை சந்தித்து இவர்க ளுக்காக ஜெபிப்போமா?  இயேசுவிடம் ஜெபிக்கக் கற்றுக் கொடுப்போமா? நமக்குத் தெரிந்த ஊழியர்களை அழைத்து வந்து இவர்களுக்காக ஜெபிக்க  சொல்லுவோமா? இதை வாசிக்கின்ற சகோதரிகள் இப்படிப்பட்ட அன்பினால் நிறைந்திருக்க வேண்டும். 
 
சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆவலுடன் வருகின்றவர்கள் கூட தனக்கான் ஒரு பாதையை தெரிந்து கொண்டு வருகின்றார்கள். உதாரணமாக நூற்றுக்கு அதிபதி, 'ஒரு வார்த்தை சொல்லும் என் வேலைக்காரன் சொச்தமடைவான்' . இன்னொரு இடத்தில் வந்து கைகளை வையும் அப்பொழுது சுகமாவாள். இங்கே நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சுகமாவேன். 
 
னக்கூட்டம் அவளுக்கு ஒரு தடையாகத் தெரியவில்லை. முண்டியடித்துக் கொண்டு வந்து இயேசுவுக்குப் பின்னாக வந்து அவருடைய வஸ்த்திரத்தை தொட்டாள். அந்த வினாடியே 12 வருடங்களாக பட்ட வேதனை நீங்கி சுகமானதை தன சரீரத்தில் உணர்ந்தாள். அன்பானவர்களே நீங்கள் எப்படிப்பட்ட வியாதியோடு எத்தனை வருடங்கள் பாதிக்கப் பட்டிருந்தாலும் இயேசு கிறிஸ்துவால் உங்களுக்கு சுகத்தைக் கொடுக்க முடியும்.
இயேசு கிறிஸ்து தன்னைத் தொட்டது யார் எனக்  கேட்டபொழுது, பயந்து நடுங்கியபடி முன்னால் வந்தாள். உடனே இயேசு அவளை நோக்கி "மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. சமாதானத்தோடே போ, உன் வேதனை நீங்கி சுகமாயிரு. எவ்வளவு மனசார ஆசீர்வதித்தார் பாருங்கள்!
 
ன்பானவர்களே உங்களில் வியாதியாய் இருப்பவர்களுக்காக நான் ஜெபிக்க விரும்புகின்றேன். இயேசுவின் தழும்புகள் இப்பொழுதும் உங்களை சுகமாக்க வல்லமையுள்ளதாய் இருக்கிறது. வியாதி உங்களை எத்தனை வருடங்கள் பாடாய் படுத்தியிருந்தாலும் சரி.... சுகத்திற்காய் அதிகமாய் செலவழித்திருந்தாலும் சரி..... டாக்டர்களால் கைவிடப் பட்டிருந்தாலும் சரி...... இப்பொழுது இயேசுவை விசுவாசத்தோடு தொட்டீர்களானால் உடனடியாக உங்கள் சரீரத்திலே சுகத்தை உணர முடியும். உங்களைச் சுகமாக்குவதுதான் இயேசுவின் பிரதான தொழில்.     
 
ஜெபிப்போமா?
 
எங்களை அதிகமாய் நேசிக்கின்ற எங்கள் அன்பின் பிதாவே!
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டி இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றேன்! இந்த செய்தியை வாசிக்கின்ற எனது அன்பான சகோதர சகோதரிகளுக்காய் ஜெபிக்கிறேன். பல்வேறு ஆஸ்பத்திரிக்குச் சென்றும் குணமாகாமல், மன வேதனையோடு இருக்கின்றவர்களுக்காக ஜெபிக்கிறேன். அன்று உமது வஸ்திரத்தை தொட்டபொழுது, உம்மிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டுச் சென்று 12 வருட வியாதியை ஒரு நொடியில் சுகமாக்கியதைப்போல இன்று உம்மை விசுவாசத்தோடு தொட முயற்சிக்கின்ற எனது சகோதர சகோதரிகள் மீது உமது வல்லமை இறங்கட்டும். இப்பொழுதே தங்கள் சரீரத்தில் சுகத்தை உணருவார்களாக. இயேசுவே நேற்றும் இன்றும் என்றும் மாறாத வல்லமைக்காக நன்றி செலுத்துகின்றேன். தொடர்ந்து பெலப்படுத்தும். உமக்கே சகல துதி கனம் மகிமையை செலுத்துகின்றோம்  உதவி செய்யும் இயேசுவின் மூலம் ஜெபங்களும் பிதாவே. ஆமென்.
 "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரேன்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;  நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவைமேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்". (ஏசாயா 53:4,5) 

 
 
பிரியமானவர்களே! பிறருக்கு நன்மையுண்டாகும்படி உங்களுக்கு ஆண்டவர் செய்த அற்புதத்தை பதிவிட மறக்காதீர்! நன்றி!!!
Bro. K.Selvin Durai
Cell: 09840836690

30 Sept 2014

TWO CHARACTERS

இரண்டு குணங்கள்

ஆவியின் கனி .................................மாம்சத்தின் கிரியைகள்

1. அன்பு ............................................... வெறுப்பு, சுயநலம், பொறாமை, கோபதாபம்
 
2. சந்தோஷம்...........................................................வருத்தம், மனக்கலக்கம், சோர்வு
                          
3. சமாதானம் ..........................................கவலை ,பயம், கலகம், மோதல், பதட்டம்.
 
4. நீடிய பொறுமை..................................................ஆத்திரம், படபடப்பு, முன்கோபம் 
 
5. தயவு.............................குரூரம், போக்கிரித்தனம், கடினமனம், முரட்டுத்தனம்
 
6. நற்குணம்..............தீமை, கொடுமை, ஒழுக்கக்கேடு, கஞ்சதனம், பேராசை  
 
7.விசுவாசம்.............................. கவனமின்மை, நேர்மையற்ற, திரித்துகூறல்,       
                                                           
                                                                                                                      நம்பகதன்மையற்ற 
 
 8. சாந்தம்...........................................................பெருமை, எதையும் நியாயந்தீர்த்தல் 
 
9.இச்சையடக்கம்................................................................................ஒழுக்கமற்றநடத்தை,
 
                                                                                       விதியை மீறுதல்,  கட்டுப்பாடற்ற.
 
 
 
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! பிறருக்கு நன்மை பயக்கும்படி உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடும்படி வேண்டுகின்றேன்! 

16 Sept 2014

FAITH CONFESSION

விசுவாச அறிக்கை
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். என் பொருளாலும், என் எல்லா விளைவின் முதற்பலனாலும் (மிக சிறந்தவற்றாலும்) கர்த்தரைக் கனம் பண்ணுவேன். அப்பொழுது என் களஞ்சியங்கள் பூரனமாக நிரம்பும், என் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். என் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படும். என் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கிறேன். அவரே காரியத்தை எனக்கு வாய்க்கப் பண்ணுவார்.
வர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தை நினைத்திருக்கிறார். கர்த்தர் எனக்கு ஞானத்தை அருளுகிறார், புத்தியையும் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுகின்றேன். கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும், உற்ச்சாகமாக கொடுக்கிற என்னிடத்தில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். நான் ஆசீர்வதிக்கப் பட்டவன், பெரிய காரியங்களை செய்வேன்.
ன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். கர்த்தரைத் தேடுகிற எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. என் தேவன் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி எங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும். நான் மனத்தாழ்மையாயும், கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடும் நடப்பதால், அதன் அதன் பலனாக ஐசுவரியத்தையும், மகிமையையும், ஜீவனையும் பெற்றுக் கொள்ளுகின்றேன். கர்த்தரின் ஆசீர்வாதமே எனக்கு ஐசுவரியத்தைத் தருகிறது. ஏழைகளுக்கு இறங்குகிற எனக்கு கர்த்தர் திரும்பக் கொடுப்பார்.
(மேலே உள்ள அறிக்கை, இந்த வேத வசனங்களில் இருந்து எடுக்கப்பட்டது. நீதி. 3:9,10; சங்கீதம் 37:5; 105:42; லூக்கா 6:38;  நீதி. 2:6; 1சாமு.26:25; பிலி.4:13; சங்கீதம் 23:1; 34:10 பிலி. 4:19; சங்கீதம் 23:5,6; நீதி. 22:4; 10:22; 19:17)

இயேசுவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!

 
விசுவாசத்தை அறிக்கை செய்வோம் ஆண்டவரின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவோம்!

10 Sept 2014

FORGIVENESS

மன்னிப்பு (மத்தேயு 18:21-35)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
ந்த பதிவை படிக்குமுன் உங்கள் வேதாகமத்தை பக்கத்திலே வைத்துக் கொண்டு, மேலே உள்ள வசனங்களை ஒருமுறைக்கு நான்குமுறை படித்துக் கொள்ளுவது நலம். ஏனெனில், அப்பொழுதுதான் உங்களுக்கு நன்கு புரியும்.
முதலாவது வசனம் 21ல் அப்போஸ்தலர் பேதுரு எத்தனை தடவை மன்னிப்பது என்ற கேள்வியைக் கேட்கின்றார், "ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய் குற்றஞ் செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்?".....
ன்னிப்பு என்பது மனித தன்மையின் உயரிய பண்பு. ஏனெனில் இது கடவுளைப் பிரதிபலிக்கின்றது. தேவன் நம்மை இலவசமாகவே மன்னிக்கின்றார். மேலும் நாம் பிறரை சீக்கிரமாகவே மன்னிக்கவும் எதிர்பார்க்கின்றார். இயேசு கிறிஸ்தவ மனதுருக்கம் மீண்டும், மீண்டும்......., ............., ..............., மீண்டும் மீண்டும் மன்னிக்கும் என போதித்தார்.
சனம் 23-35ல், இயேசு கிறிஸ்து ஒரு ஈவிரக்கமற்ற ஒரு வேலைக்காரனைப் பற்றிய ஓர் உவமையைக் கூறுகின்றார். ஒருமனிதன் ஒரு அரசனிடம் கடன் (இன்றைய மதிப்பின்படி ரூ. 7,32,00,000/-) பட்டிருந்தான். அரசன் உடனே கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நெருக்கியபோது, கடன் வாங்கியவன் இரக்கத்துக்காக் கெஞ்சினான். அவன் கெஞ்சிக் கேட்டதையடுத்து, அரசன் அவன் கடன் முழுவதையும் மன்னித்து அனுப்பிவிட்டான். ஆனால் இந்தக் கடன்காரன், (7,32,00,000/- ரூபாய் மன்னிக்கப்பட்டவன்) தன்னிடம் ரூ.1220/- கடன் வாங்கியவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து, நீ பட்ட கடனை எனக்கு உடனே கொடுத்துத் தீர்க்க வேண்டும் என்றான். அப்பொழுது அவன், இவன் காலில் விழுந்து, என்னிடத்தில் பொறுமையாய் இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்கின்றேன், என்று அவனை வேண்டிக் கொண்டான். இவனோ சம்மதியாமல் போய், அவன் பட்ட கடனைக் கொடுத்து தீர்குமட்டும், அவனைக் காவலில் போடுவித்தான்.
யேசு மிகச் சரியாக 'மன்னிக்காத தன்மை'யைக் கண்டித்தார். நமது பரலோக தேவனிடம் நாமனைவருமே எல்லையில்லா மன்னிப்பைப் பெற்றவர்கள். நமக்கு விரோதமாக செய்யப் படும் சின்ன குற்றங்களைக்கூட வேகமாக மன்னிக்க வேண்டும்.இந்தப் பகுதியில் (மத்தேயு 18ன் பிற்பகுதியில்) உண்மையான மன்னிப்பைப் பற்றி நாம் கற்றுக் கொள்ளுகின்றோம்.
1. உண்மையான மன்னிப்புக்கு எல்லை இல்லை: (18:21,22) நாம் ஏழு தரம் மாத்திரமல்ல, ஏழு எழுபது தரம் மன்னிக்க வேண்டும். யூதர்கள் மூன்று முறை மட்டுமே மன்னித்தனர். யூத மத போதகர்கள், 'ஒருவன் ஒருமுறை குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு, இரண்டாம் முறை குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு, மூன்றாம் முறையும் குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு. நான்காம் முறை குற்றஞ் செய்தால் மன்னிக்காதே' என போதித்தனர். இங்கே பேதுரு யூத முறைமையைக்காட்டிலும் மேலும் நான்கு முறையைச் சேர்த்து ஏழு தரம் குற்றஞ் செய்தால்.............' எனக் கேட்கின்றார். இங்கே இயேசு கூறுகின்றார், :மன்னிப்புக்கு எல்லையே கிடையாது' ஒரே மனிதன் மீண்டும் மீண்டும் குற்றமிழைத்தாலும் ஏழு எழுபது முறை (நானூற்று தொண்ணூறு முறை) நாம் மன்னிக்க வேண்டும். மன்னித்தல் என்பது நிலையான அடிப்படையாய் இருக்க வேண்டும்.
2. நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவனை நாம் மன்னிக்கும் போது நாம் நம்முடைய பெருந்தன்மையைக் காட்டுகின்றோம்: தேவன் நமது பாவம் என்ற கடனை  நமக்கு  மன்னித்திருக்கிறபடியால், (நமது "கடவுளிடம் மனந்திரும்புங்கள்" என்ற கைப்பிரதியில் நாம் ஒருவருக்கு விரோதமாக குற்றஞ் செய்தால் அது படைத்த கடவுளுக்கு விரோதமாகவும் குற்றஞ் செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளோம்) நாமும் நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவர்களை மன்னிக்க வேண்டும். தேவன் நம்மை மன்னித்ததைப் போல நாம் மன்னிக்க வேண்டும். எபேசியர் 4:32 சொல்லுகிறது.
"ஒருவருக்கொருவர் தயவாயும் மனதுருக்கமாயுமிருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்"
ன்னிப்பு என்னும் விலைக் கிரையம், நம்மைத் தவறாக நடத்தியவர்களிடம் முரட்டுத்தனமாயும், மன்னிக்க மறுக்கும் தன்மையையும் உடையவர்களாய் இருப்பதிலிருந்து, நம்மை விழிப்புடையவர்களாக்குகிறது.
3. மன்னிக்காத தன்மை, மிகக் கடுமையான பின் விளைவுகளைக் கொண்டுவரும்: (18:34,35) மத்தேயு 6:15ல், 
இயேசு, "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால் உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" என்றார்.
நீங்கள் இதை மிக எளிதாக எடுத்துக் கொள்ளமுடியும், ஆனால் நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவர்களை மன்னிக்காவிடில், ஆண்டவருடைய தீர்ப்பு மேலிரங்கும். அது 'மனிதனை' குறை சொல்ல முடியாதபடி இருக்கும்.
நம்மில் ஒவொருவரும் கடவுளுக்குக் கடன்பட்டிருக்கிறோம். நாம் மனந்திரும்பும் போது அவர் மன்னிக்கிறார். ஒரே ஒரு நிபந்தனை........... நாம், நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவர்களை மன்னிக்கும் போது மட்டுமே. 
ண்டவரை அறியாத மக்கள், கிறிஸ்தவர்களைப் பார்த்துக் கூறும் ஒரு குறை என்னவென்றால்,  'என்ன தப்புப் பண்ணியிருந்தாலும் இயேசுகிட்ட போய்.... என்ன மன்னியும்..... என்ன மன்னியும்.... அப்படீன்னு சொல்லி மன்னிப்புக் கேட்பீங்க... அவரும் மன்னிச்சுறுவாரு..... தப்புப் பண்ணீட்டு........ தப்புப் பண்ணீட்டு மன்னிப்புக் கேட்ருவீ ங்க....  அவரும் எத்தனை தடவைனாலும் மன்னிப்பாரு....... எங்களுக்கெல்லாம் அது தெரியாது....  நாங்க தப்பே செய்யாமல் வாழத்தான் முயற்சிக்கிறோம்". 
ன்னிப்பதற்கும் ஆண்டவர் ஒரு நிபந்தனை வைத்திருக்கின்றார் என்பதை அறியாமல் கூறுவார்கள். நாம் அடுத்தவர்கள் மீது எரிச்சலுடனும் பொறாமையுடனும், கசப்புடனும், பழிவாங்கும் உணர்வுடன் இருந்தால், சமாதானத்தை உண்டுபண்னும்படியான நடவடிக்கைகளை உடனே நாம் மேற்கொள்ளவேண்டும்.
ணமையாகவே மன்னிக்கப் பட்ட மனிதன், நான் இப்படிப்பட்ட குற்றஞ் செய்துவிட்டேனே என்று அதையே நினைத்துக் கொண்டு அதிலேயே இருக்க மறுக்க வேண்டும். ஆனால், சில வேளைகளில் நினைவுக்குவரும், அதை தடுக்க முடியாது. "மன்னித்து மறந்துவிடு" என நாம் கூற முடியும். அப்படிப் பட்ட வாசகம் வேதாகமத்திலே எங்கும் இல்லை.  ஒரு காரியம் மன்னிக்கப் பட்டதானால், நாம் அதையே நினைத்துக் கொண்டு அதிலேயே தங்கிவிடக் கூடாது. அப்படி இருந்தால் அது மறக்க முடியாத தளும்பாக மாறிவிடும். இதிலே கவனம் தேவை. 
ன்னிப்பு என்பது  பாவம் நிறைந்த குற்றத்தை மறைக்க சாக்குப் போக்கு சொல்லுவதில்லை. நான் மற்றவரை மன்னிக்கிறேன் என்றால், நான் அந்த மனிதர் செய்த பாவத்தை தட்டிக் கழிப்பது ஆகாது. பாவம் எப்போதுமே பாவந்தான். மேலும் உண்மை அன்பு பாவத் தன்மையை எப்பொழுதுமே குறைக்க முயற்சிக்காது. குற்றஞ் செய்தவன் மனந்திரும்பும்படியாய் விட்டுவிடும். ஆனால் மனிப்பு என்பது கசப்பு, கோபம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தல் ஆகியவைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். மேலும் நமக்கு விரோதமாக செய்யப்பட்ட பாவத்தை அனுசரித்து செல்லும். 
இங்கே எனது ஜெபமெல்லாம், ஆண்டவர் இதைப் படிக்கின்ற அன்பு சகோதர சகோதரிகளின் இருதயத்தில் மன்னிப்பு என்னும் நீரூற்றைத் திறக்கும் படியாகவும், நம்மில் ஒவொருவரும் மேலும் மேலும் மன்னிப்பின் ஆவியால் நிறைந்திருக்க வேண்டும் என்பதே. மத்தேயு 18ல் இயேசு கிறிஸ்து 'மனத்தாழ்மை, மனதுருக்கம், மன்னிப்பு' இவைகளைக் குறித்து போதிக்கின்றார்.  
   
இயேசு கிறிஸ்து உங்களை அளவில்லாமல் நேசிக்கின்றார்!
 பின் குறிப்பு: கிறிஸ்துவில் பிரியமானவர்களே! 'மனத்தாழ்மை, மனதுருக்கம், மன்னிப்பு' என்ற தலைப்பில்  சிறிய புத்தகமாக வெளியிடலாம் என நான் ஆலோசிக்கின்றேன்! ஆண்டவருடைய போதனைகள், சுவிஷேசமாக மக்களை சென்றடைய வேண்டுமெனில், ஜெபியுங்கள்!! தாராளமாக கொடுங்கள்! இதனால் வரும் பலன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சேரும்!!
நமது வங்கிக் கணக்கு: 
Zion Revival Ministries,
Indian Bank Otteri Branch,
A/c No: 441176777
IFS Code: IDIB 000O0004
நன்றி!