18 Apr 2017

OUR HELP COMES FROM THE LORD!

கர்த்தரிடத்திலிருந்து உங்கள் உதவி
கிறிஸ்துவில் அன்பு நண்பர்கள் யாவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்!
"நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தருடைய நாமத்தில் உள்ளது" (சங்கீதம் 124:8)
இங்கே சகாயம் என்பது உதவி. உங்களுக்கு வருகின்ற உதவி கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. நீங்கள் அநேக காரியங்களைக் குறித்து ஜெபிக்கின்றீர்கள்! பதில் வரும்போது ஆண்டவருக்கு மகிமையை செலுத்தவேண்டும்!
ஒரு பக்தன் இவ்வாறு பாடுகின்றார்,
யெகோவா தேவனுக்கு 1000 நாமங்கள் 
என்ன சொல்லி நான் பாடுவேன்......
இங்கே ஒரு சில நாமங்களைக் குறித்து தியானிக்கலாம்! வேதாகம கால பக்தர்கள் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் ஆசீர்வாதமாக மாறும்போது அவர்கள் ஆண்டவருக்கு  பிரச்சனைகளின் அடிப்படையில் பெயர் வைத்தார்கள்! ஆனால் நாம் இங்கு ஆண்டவரே தன் பெயரை வெளியிட்ட இடங்களைத் தேடிப்பிடித்து தியானிக்கிறோம்!
ஆதியாகமம் 17:1ல்,
"...... நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாய் இரு" 
கர்த்தர் சர்வவல்லமையுள்ள தேவன்: அன்று ஆண்டவருடைய வாக்கை சந்தேகப்பட்டபொழுது, தேவ தூதன் கூறியது, 'தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை' வாக்கு வந்தபொழுது சாராளும் சந்தேகப்பட்டாள், அப்பொழுது கர்த்தரே 'கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?' எனக் கேட்கின்றார். உங்கள் வாழ்க்கையிலே ஆண்டவரால் நிறைவேற்ற முடியாத வாக்குத்தத்தம் என ஒன்றுமே இருக்காது. வாயின் வார்த்தையினால் வானத்தையும் பூமியையும் படைத்தவர், அவருடைய வாக்குத்தத்தங்கள் வேதாகமத்திலே இருக்கின்றது, பயன்படுத்துங்கள்!
"மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்" யாத்திராகமம் 3:15
இதின் பொருள் என்னவென்றால், இஸ்ரவேல் ஜனங்கள், ஆண்டவரை தங்கள் பாவத்தினால் கோபமூட்டினாலும், அவர்கள் மனந்திரும்பும் போது, இவர்களின் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நினைத்து, தண்டனையிலிருந்து விடுவித்து, ஆசீர்வதிப்பார் என்பதுதான். நீங்கள் சுவிஷேசத்தை அறிவிக்கும் போது, மேலே உள்ளவர்களின் தேவன் என நீங்கள் கூறினால், கேட்பவர்கள், நாங்கள் நினைத்தது சரிதான்...... இயேசு வெளிநாட்டுக் கடவுள் எனக் கூறுவார்கள். நீங்கள் ஆண்டவரை இருக்கிறவராகவே இருக்கின்றார், என்றும் மாறாதவர், மனுக்குலத்தின் மீது அன்பு செலுத்தினபடியால், இயேசுவாக, பாவத்தை மன்னிக்கிறவராக இந்த உலகத்துக்கு வந்தார். அவர்தான் வானத்தையும் பூமியையும் படைத்தவர். அவர் நாமம் இம்மானுவேல் - என்றும் நம்மோடிருக்கிறவர். என்றுதான் அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால், உங்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வல்லமையுள்ளவர் என்பதுதான். 
"மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும், யாக்கோபுக்கு தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினாலே நான் அவர்களுக்கு அறியப்படவில்லை" (யாத்திராகமம் 6:2,3)
முதலாவது வசனத்தைத் தியானித்தீர்களானால், உங்கள் வாழ்க்கையிலே இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்களில் அற்புதத்தைச் செய்வார். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பாவத்திலிருந்து / மாம்சத்திலிருந்து (எகிப்து), விடுதலை செய்வார். உங்களை விட்டு பிரிந்து செல்லு(ம்)வார்கள். உங்களை சரியாக வழிநடத்தாமல், தவறான வழியில் நடத்தியவர்கள், என்னை விட்டால் போதும் எனக்கூறி ஓடுவார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்தே ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுவீர்கள்! ஏனெனில் அவர் யேகோவா என்னும் நாமத்தில் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவார். பாவத்தின் கட்டிலிருந்து வெளிவருவதே மிகப் பெரிய ஆசீர்வாதமாகும். உள்ளம் சமாதானத்தினாலும் மகிழ்ச்சியினால் நிரம்பி வழியும். இவைகளை பெற்றுக் கொண்டு ஆண்டவருக்கு சாட்சியாக வாழுங்கள்! ஆத்துமாக்களை ஆதாயம் செய்யுங்கள்! 
முடிவாக, ஆதி.12:8,
"..... கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்" வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தருடைய நாமத்தை ஆபிரகாம் தொழுது கொண்டதை போல, நீங்களும் அவனுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்! 
"...நான் யேகோவா" 
(யாத். 6:3)
நண்பர்கள் யாவரையும் மீண்டும் அன்புடன் வாழ்த்துகின்றேன்! உங்கள் நண்பர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்படிக்கு, உங்கள் முகநூல் பக்கத்திலே பகிர்ந்து கொள்ளுங்கள்! 
நன்றி!

17 Apr 2017

DEBIT PART - 1

கடன்!
(முதல் பகுதி)
அன்பு நண்பர்கள் யாவருக்கும் வணக்கம்! 
இந்த தலைப்பை 3 பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம். 
1. வேதாகமம் கடனைப்பற்றி என்ன கூறுகின்றது?
2. நடைமுறையில் கடனை எவ்வாறு தீர்க்கலாம்?
3. இனிமேல் கடன் வாங்க வேண்டியது இருந்தால், என்ன கோட்பாடுகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்?
வேதாகமத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (உங்களுக்கு கடன் இருந்தால், இந்த தலைப்பில் உள்ள அனைத்தையும் திறந்த உள்ளத்தோடு படியுங்கள்! இந்த வேதவசனங்களுக்கு கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்புக்கொடுங்கள்! கடனிலிருந்து வேதவசனத்தின் அடிப்படையில் வெளியேற வேண்டும் என்பதில் தீவிரமாக இருங்கள்!) கடனிலிருந்து வெளியேற ஆவியானவர் உங்களை வழிநடத்துவார் என விசுவாசிக்கின்றேன்! வேத வசனங்களை உறுதியாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்! கடனை வேதவசனத்தின் அடிப்படையில் பாருங்கள்! கவலை உங்கள் உள்ளத்தை விட்டு அகலும். வேத வசனத்தை மீண்டும் மீண்டும் வாசித்து, பதிலை ஒரு நோட்டில் எழுதவும்.
குறிப்பு: 
ஒவ்வொரு வசனத்துக்கு தனித்தனியாக பதிலை எழுதவேண்டும். எந்த வசனம் உங்களுக்கு இடறலாக தெரிகின்றதோ, அதற்க்கு நிச்சயமாக கீழ்ப்படிந்தே (ஏற்றுக்கொண்டே) ஆகவேண்டும்.
வசன பகுதி 1. உபாகமம் 15:4-6 
"எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்கு கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
உன்தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை"
வசனப்பகுதி 2: உபாகமம் 28:1,2,12,
"இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்துக்கு உண்மையாய் செவி கொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவி கொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்"
வசனப்பகுதி 3: உபாகமம் 28:15, 43-45 "இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதே போவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும். உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மென்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப் போவாய். அவன் உன்னிடத்தில் கடன் படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாய் இருப்பான், நீ வாலாயிருப்பாய்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து....."
மேலே உள்ள வசனபகுதிகளில் இருந்து தனித்தனியாக கீழே உள்ள கேள்விகளுக்கு  பதிலளிக்கவும். 
கேள்வி: 
இந்த வேதபி பகுதிகளின் அடிப்படையில் பழைய ஏற்பாட்டுக்கு காலத்தில் கடன் எவ்வாறு பார்க்கப்பட்டது? 
ஒருவர்்கடனுக்கு  ஆளாவதற்கோ அதினின்று விடுபடுவதற்க்கோ என்ன காரணம்? 
அடுத்தது,
வேதப்பகுதி 1:ரோமர் 13:8 "ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மறறொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறரிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்" 
நீதிமாழிகள் 22:7, 
"ஐசுவரியாவான் தரித்திரனை ஆழுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை" 
1 கொரிந்தியர் 7:23, 
"நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்"
வேதாகமம் கடனைப் பரிந்துரைக்கிறதா? அப்படியெனில் ஏன்?2இந்த வேதவசனங்கள் கூறுவது உங்கள் தொழிலுக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா? (வாழ்க்கைக்கும்)
உங்களுக்கு கடன் இருந்தால் அதிலிருந்து மீளுவதற்கான திட்டம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் அந்த திட்டத்தை உங்கள் நோட்டில் எழுதவும். இதை நன்கு சிந்தித்து முடிவெடுக்கவும். 
அடுத்தது,
சங்கீதம் 37:21, 
"துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இறங்கிக் கொடுக்கிறான்" 
நீதிமொழிகள் 3:27,28, 
"நன்மை செய்யும்படி உனக்கு திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாலைக்குத் தருவேன் என்று சொல்லாதே"
கேள்வி: கடனைத் திரும்பிச் செலுத்துவதை பற்றி இந்த வசனங்கள் கூறுவது என்ன? இரு வசனங்களுக்கும் தனித்தனியாக பதில் எழுதவும். இதை நீங்கள் எவ்வாறு செயல்படுத்துவீர்கள்?
அடுத்தது, 
2 இராஜாக்கள் 4:1-7ஐ வாசிக்கவும். 
"தீர்க்கத்தரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமதுஅடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்.
எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்:பி ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். 
அப்பொழுது அவன்: நீ பொய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி, 
உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததாய் ஒரு பக்கத்தில் வை என்றான்.
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள்  பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள். 
அந்த பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா என்றாள். அதற்க்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.
அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு  அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவணம் பண்ணுங்கள் என்றான். 
1. இந்த வேத பகுதியில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளும் கடனிலிருந்து மீளுவதற்கான கோட்பாடுகள் என்னென்ன?
2. ஏதாவது ஒரு கோட்பாட்டை உங்களுடைய தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்த முடியுமா? ஆம் எனில் எவ்வாறு?
(மேலே உள்ள இரு கேள்விகளுக்கும் நீங்களே தியானித்து எழுதுங்கள். அல்லது அடுத்த பதிவாக இதே வலைத்தளத்தில் வெளியிடப்படும், உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகம் செய்யுங்கள். இது உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்) 
அடுத்தது,
நீதிமொழிகள் 22:26,27 
"கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைக்கப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக் கொள்ள வேண்டியதாகுமே"
நீதிமொழிகள் 17:18, 
"புத்தியீனன் தன்  சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக் கொடுத்துப் பிணைப்படுகிறான்"
மேலே உள்ள வசனங்களில் இருந்து கீழே உள்ள கேள்விக்கு பதிலளிக்கவும். 
1. ஜாமீன் கொடுப்பதைக் குறித்து இந்த வசனம் என்ன சொல்லுகிறது? எழுதவும். 
அடுத்தது, 
நீதிமொழிகள் 6:1-5, 
"என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அன்னியனுக்குக் கையடித்துக் கொடுத்தாயானால்,
நீ உன் வாய் மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்ட படியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். 
உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவது போல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்" 
கேள்வி:
ஜாமீன் கையெழுத்திட்டவர் என்ன செய்ய வேண்டும்?
நண்பர்கள் யாவருக்கும் அன்பு வணக்கம்! அடுத்த இரு பிரிவுகள் அடுத்த பதிவாக வெளியாகும். உங்களுக்கு கடன் இருக்கும் பட்சத்தில், கடனிலிருந்து வெளியேற ஜெபிக்கிறேன்! வாழ்த்துகின்றேன்!!

5 Apr 2017

THE SECRET OF REAL HAPPYNESS

உண்மையான மகிழ்ச்சி!
12ம் நூற்றாண்டில் இத்தாலியில் உள்ள அசிசி என்ற நகரத்தில் பிரான்சிஸ்கோ என்ற ஒரு இளைஞன் வாழ்ந்து வந்தான். இவனது தகப்பனார், அந்தப் பட்டணத்தில் மிகப் பெரிய செல்வச் செழிப்பு மிக்க தொழிலதிபராக இருந்தார்.
எனவே இளைஞன் பிரான்சிஸ்க்கோவிடம் நிறைய பணம் இருந்தது. நிறைய நண்பர்கள், இவன் சொல்லுக்குக் கீழ்ப்படிய நிறையபேர் இருந்தனர். வாழ்க்கை சுகபோகமாக சென்று கொண்டிருந்தது. தன் நண்பர்களோடு குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தான். இன்றும் கூட உங்களில் அநேகர் பணமிருந்தால் உண்மையான மகிழ்ச்சியோடு இருக்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கின்ரீர்களல்லவா? அதற்காக அநேகர் குறுக்கு வழியில் பணத்தைப் பெற முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்! உதாரணத்துக்கு இன்றைய அரசியல்வாதிகள், அதிகாரிகள். ஆனால் பிரான்சிஸ்கோவிடம், ஒன்றே ஒன்று இல்லாமலிருந்தது. அதுதான் உண்மையான மகிழ்ச்சி! தினமும் நண்பர்கள் அவனைப் பிரிந்து சென்றவுடன் ஒரு இனம் புரியாத சோர்வு அவனைப் பிடித்துக்கொள்ளும். இதிலிருந்து விடுபட அவனால் முடியவில்லை. (குடித்து வெறித்தாலும் மகிழ்ச்சி இல்லை) பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒன்று அவன் வீரனாக பயிற்சி எடுக்கத் தொடங்கியதுதான். குதிரையேற்றம், வில்வித்தை, வாள்வித்தை, என அனைத்திலும் பயிற்சி எடுத்தான். அந்த ஊரிலேயே ஒரு பெரிய வீரனாகிவிட்டான். 
அவனது 21ம் வயதில், அருகில் இருந்த பெருஜியா என்ற பட்டணத்துக்கு அசிசி பட்டணத்துக்கு இடையில் சண்டை மூண்டது. போர்க்களத்தில் எடுத்த ஒரு மோசமான முடிவினால், பிரான்சிஸ்கோவும் அவனது வீரர்களும் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கே அவனுக்கு காய்ச்சல் வந்து, ஏறக்குறைய சாகும் நிலைக்கு சென்றுவிட்டான். எதிரிகள் அவனை விடுதலை செய்தனர். அவன் அசிசிக்குத் திரும்பிய போது, அவன் மாவீரன் பட்டத்தை இழந்து, வியாதியுடன், தோல்வியைத் தழுவினவனாக, உருவமே உருக்குலைந்து வந்து சேர்ந்தான்.
இந்த அனுபவங்கள் பிரான்சிஸ்கோவை, தன் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யத்தூண்டியது. நாட்கணக்காக வேதாகமத்தோடு ஜெபத்தில் உட்கார்ந்தான். குறிப்பாக மலைப்பிரதேச பிரசங்கத்தை உன்னிப்பாக கவனித்து படிக்க ஆரம்பித்தான். (மத்தேயு 5-7 அதிகாரங்கள்) மேன்மையான மகிழ்ச்சி இந்த இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தான். உங்கள் பொக்கிஷங்களை இந்த பூமியில் அல்ல, பரலோகத்தில் சேர்த்து வையுங்கள், நாலையைக் குறித்து கவலைப்படாதிருங்கள், கர்த்தரை விசுவாசியுங்கள் என்பன போன்றவை. இவைகளைத் தியானம் செய்த பொழுது வானத்தில் சிறகடித்து பறப்பது போலவும், பறவைகளை போல பாடி மகிழ்வது போலும் உணர்ந்தார். 
அவர் தனக்குரிய அரண்மனையை விட்டு வெளியேறினார். பொருட்களைப்பற்றிய பாரம் இல்லாமல் வாழும்படியாக குகைகளில் தங்க ஆரம்பித்தார். விலையுயர்ந்த ஆடைகளுக்குப் பதிலாக ஏழைகள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தார். மற்றவர்களோடு கூட இருந்த ஐக்கியமும் மாறியது. முதன் முதலாக மகிழ்ச்சியை அனுபவித்தார்! அவர், ஏழைகளுக்கு, வீடில்லாதவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதில் தனது நாட்களைச் செலவிட்டார். தொழுநோயாளிகள் இருப்பிடத்துக்கே சென்று, அவர்களுடைய காயங்களைக் கழுவி மருந்திட்டுக் காயம் கட்டினார். முன்பு அவர் வெறுத்த மக்களுக்கெல்லாம் உதவிகள் செய்தார். இது அநேக நண்பர்களை அவர் பக்கம் ஈர்த்தது. அவர்களும் பிரான்சிஸ்கோவுடன் சேர்ந்து ஏழைகள் மத்தியில் ஊழியம் செய்தனர்.
பிரான்சிஸ்கோ மரணமடைந்த கொஞ்ச நாட்களுக்குப்பின் அவரது பெயர் புனித பிரான்சிஸ் என அழைக்கப்பட்டது. மேலும் அவர் கிறிஸ்தவர்கள் எல்லோராலும் நேசிக்கப்பட்டார். 
800 வருடங்களுக்குப் பின்னரும் மக்கள், அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் கண்டு பிடித்த மகிழ்ச்சியின் இரகசியத்தைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய முக்கியமான வேத பகுதிகளில் ஒன்று, மத்தேயு 5:1-12 ஆகும். புனித பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றிய இயேசுவின் "உண்மையான மகிழ்ச்சியின் இரகசியங்களை" நீங்களும் படியுங்கள்!
1. பிரான்சிஸ்கோவின் சோர்வை நீக்கியது இயேசு கிறிஸ்துவின் எந்த வார்த்தையாக இருக்கும் என நீங்கள் நினைக்கிண்றீர்கள்?
2. நீங்கள் கற்றுக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியையும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் உள்ள உண்மையான மகிழ்ச்சியையும் எவ்வாறு சாப்பிடுவீர்கள்?
யோசிக்க:
உங்கள் வீட்டில் உள்ள, உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் பொருட்களை உற்று கவனியுங்கள். அதே பொருட்கள் இயேசுவை மகிழ்ச்சிக்குள்ளாக்குமா? என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். 
மேலே உள்ள வசனங்களை சிறுசிறு அட்டைகளில் எழுதி, அதை நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் ஒட்டிவைத்து அதை பார்க்கும்போதெல்லாம் சத்தமாக படியுங்கள். 
மேலும் உங்கள் உதவியாக:
1. சங்கீதம் 4; 2. லூக்கா 6:17-49; 3. யோவான் 15:5-11.
இந்த பதிவு உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். இந்த வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்! புதிய பதிவுகள் உங்கள் இன்-பாக்ஸில் வந்து சேரும்! நன்றிகள் பல. நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தால் இந்த ஊழியத்துக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்!