20 May 2018

GOODNESS WILL SHINE ON YOU LIKE THE SUN

உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்
"ஆனாலும் என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும், நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்" மல்கியா 4:2

ஆண்டவருக்கு பயப்படும் பயம் குறைந்து வரும் நாட்களில் நாம் வாழ்ந்து வருகின்றோம். அடுத்து என்ன நடக்கும் என யோசிக்காமல் பலர் செயல்படுவதை நீங்கள் பார்க்கின்றீர்கள்! ஆண்டவர் எப்பொழுதுமே அன்பினால் நிறைந்திருக்கின்றார். மனிதன் ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்புகின்றார்! ஆசீர்வாதங்களைக்கூட அதற்குள்ளேயே வைத்திருக்கின்றார்! இங்கே பயப்படும் பயம்! யாத்திராகமம் 20:20ல், நீங்கள் பிழையில்லாத வாழ்க்கை வாழும்படிக்கு ஆண்டவருக்கு பயப்படும் பயம்! நாளாகமம் 19:7ல், ஆண்டவருக்கு இலஞ்சம் கொடுக்க முடியாது, நீதியுள்ளவர் ஆகவே பயப்படும் பயம்! நீதிமொழிகள் 8:13ல்,  தீமையை வெறுப்பது கர்த்தருக்கு பயப்படும் பயம்! அதாவது கர்த்தர் வெறுப்பதை நீங்களும் வெறுக்க வேண்டும்! 

நான் ஆண்டவருக்கு பயந்த வாழ்க்கை வாழுகின்றேன்! இன்னமும் வாழுவேன் என உங்கள் உள்ளம் கூறுமானால், மிக நல்லது! இது சரிதான்! இதோடு இதன் பலனை பெற்று கொள்ளுவேன் என விசுவாசிக்க வேண்டும்! 

பலன் என்ன? ஞானத்தின் ஆரம்பம்! (நீதி.1:7) அறிவை பயன்படுத்துவதுதான் ஞானம்! வேத வசனத்தோடு கூட உங்கள் அறிவைப் பயன்படுத்தினீர்கள் எனில் அதுதான் தேவ ஞானம்! அதிலே சமாதானம் நிறைந்திருக்கும்! அதனால் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும்! உதாரணத்துக்கு, நீங்கள் உங்கள் தோட்டத்திலே, முருங்கை மரங்களை பயிரிட்டு இருக்கின்ரீர்கள் என வைத்துக்கொள்ளுவோம்! அதற்க்கு தண்ணீர் பாய்ச்சும் பொழுது, எனது வருமானத்தில் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து ஒரு பங்கை கொடுக்கின்றேன், எனவே அவர் எனது வருமானத்தை ஆசீர்வதிக்கின்றார். இந்த முருங்கை மரங்கள் அனைத்தும் 100% பலனைத் தரும். எனது தோட்டத்தில் இருக்கும் முருங்கள் மரங்களே உங்களை நான் அதிகமாய் நேசிக்கின்றேன்! (அடுத்த முறை நீங்கள் தண்ணீர் விட செல்லும் பொழுது, ஒரு வித்தியாசத்தை உணருவீர்கள்!) ஆண்டவரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும், எனவே சந்தையில் எனது காய்கள் அதிக விலை பெரும். இப்படி பேசிக்கொண்டே / யோசித்துக்கொண்டே உங்கள் வேலைகளை செய்யுங்கள்! (உலகத்தோடு ஒப்பிட்டு பார்க்கதிருங்கள்!) உங்களுக்கு நீங்களே இடைப்படும்போது அறிவைப் பயன்படுத்துங்கள்! பிறரோடு இடைப்படும்போது இதயத்தை பயன்படுத்துங்கள்!

2வது, சரீரத்தில் ஆரோக்கியம்! மல்கியா 4:2ன்படி,உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்! அதன் கதிர்களில் ஆரோக்கியம் இருக்கும்! நீங்கள் விசுவாசித்து வாழ அழைக்கப்பட்டு இருக்கிண்றீர்கள்! இந்த வசனத்தை அறிக்கை செய்யுங்கள்! ஆரோக்கியம் என்பது வியாதி இல்லாமல் வாழும் வாழ்க்கை! ஆரோக்கியம் எப்பொழுதுமே தேவை! சுகம், வியாதி வந்தால் மட்டுமே தேவை.

ஆண்டவருக்கு பயப்படுவதால் வரும் அடுத்த ஆசீர்வாதம், லூக்கா 1:50ன்படி, அவருடைய இரக்கம் உங்கள் பிள்ளைகளின் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும் வருகின்றது. நீங்கள், உங்கள் சந்ததிக்கு இதைவிட எவ்வளவு பெரிய சொத்தையும் இந்த உலகத்திலே சேர்த்து வைக்க முடியாது. இதையெல்லாம் நினைத்து, அனுபவித்து ஆண்டவருக்கு நன்றி சொல்லுங்கள்!

பசுவிடம் பால் குடித்த கன்று எப்படி துள்ளுமோ அதுபோல உங்கள் வாழ்க்கை அமையும்! மனதில், மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும்! 

ஜெபிப்போம்! 

பரிசுத்தமும், அன்பும் நிறைந்த எங்கள் பரம பிதாவே உம்மைத் துதிக்கிறோம்! நன்றி செலுத்துகின்றோம்! உமது வழி காட்டுதலுக்காக, உமது பிரசன்னத்துக்காக கோடானகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்! உமது அன்பான இந்த வாக்குக்காய் நன்றி! உமது வாக்கு தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்து நின்று ஆசீர்வதிப்பதற்காய் நன்றி! உமது இரக்கங்களுக்கு முடிவில்லை. தீமையை விட்டு விலகி வாழ தீர்மானிக்கின்றோம்! எல்லைகள் பெரிதாவதற்காய் நன்றி! வேத வசனத்தை மட்டுமே விசுவாசித்து வாழ உதவி செய்யும்! இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே! ஆமென், ஆமென்.
    
If you want to donate to our ministry in Bit Coin, this is our Bit Coin address: 36UeDPS5e8JUoLvR4F26B5AAQ57RRMKmgj
நன்றி!