18 Aug 2019

VICTORY IN THE NAME OF JESUS



புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய யாவருக்கும் எமது வாழ்த்த்துக்களும், வணக்கங்களும்!
 இந்தச் செய்தியின் மூலம்  உங்கள் ஜெபவாழ்க்கை ஒரு பெரிய மாற்றமடைந்து, பல்வேறு எல்லைகளைத் தொட ஆண்டவர் கிருபை தருவார்!  நீங்கள், இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுபவர்களெல்லாம் கிறிஸ்துவுக்குள் மிகவும் பெலப்படுவார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்! இனி வசனத்துக்குள் செல்லுவோம்!
"என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:14)
நல்லவர்களுக்குத் தீமை நிகழும்போது, அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களது நிலைமை என்ன? பழைய ஏற்பாட்டு சன்மார்க்கனாகிய யோபுவின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கவிருக்கின்றோம்! முதலாவதாக அவன் நாட்களில் வாழ்ந்த எல்லாரைக் காட்டிலும் மிகப் பெரிய செல்வந்தனாக இருந்தான். (அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருக ஜீவன்களும் இருந்தது) ஆண்டவரும் அவனைக் குறித்து மிக உயரிய சாட்சி பகர்ந்தார். 
இப்படி பட்ட நிலைமையை ஒருவர் சந்தித்தால் என்ன சொல்லுவார்கள்? சற்று யோசித்து பாருங்கள். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவுக்குச் செல்லும்போதெல்லாம் ஒரு பெரியவரை அடிக்கடி சந்திப்பதுண்டு. அவர் இந்தியன் வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அவருக்கு மனைவி இல்லை. மகளது ஆதரவில், தனக்கு வரும் ஓய்வூதியத்தில் வாழ்ந்து வருபவர். அவருக்குத் தெரிந்த ஒருவருக்கு, அவர் ஆட்டோ வாங்க வங்கியில் கடன் பத்திரத்தில் பொறுப்பாளியாகக் கையெழுத்திட்டார். ஆட்டோ வாங்கியவன் ஒருவருடம் ஒழுங்காகக் கடனைக் கட்டி வந்தான். பின்பு ஆட்டோவை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு பணத்தை வாங்கி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டான். பணம் கட்டப்படவில்லை. இவர் மனைவி பெயரில் இவர் வாங்கிய கடனை மறைத்துவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பின் ஆடிட்டில் பிடிபட்டார். இப்பொழுது பல ஆண்டுகளுக்கு முன்பாக இவர் வாங்கிய கடன், ஆட்டோ கடன் இரண்டையும் கட்டும்படி வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தது. 
இவர் வங்கியில் வேலைபார்த்தபொழுது புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள், இப்பொழுது இவரது கடனை வசூலிக்க வேண்டிய இடத்தில். எனவே அவர்கள், இவர்மேல் மனது வைத்து, வழக்கு போடப்போவதில்லை. நீங்கள் பணத்தை கட்டி முடிக்கும் வரை, உங்கள் ஓய்வூதியத்திலிருந்து பணம் பிடித்தம் செய்து விடுகின்றோம் எனக் கூறிவிட்டனர். ஊரில் உள்ள சொத்தை விற்று கடனை அடைந்துவிடலாம் என்றால், இவரது மகன் கார் வாங்குவதற்காகச் சொத்தை அடமானம் வைத்துக் கார் வாங்கி விட்டான். அதற்கும் இவர்தான் கையெழுத்திட்டிருந்தார். இதெல்லாம் நடந்து முடிந்த பின்தான் மேலே உள்ள கடன் பிடிபட்டது எல்லாம். 
அவருடைய நிலைமையைப் பாருங்கள்! ஊரில் உள்ள ஆட்டோ வாங்கினவனுடைய மனைவியைப் பார்த்து, பணத்தை கட்ட சொல்ல வேண்டும். கையில் தேநீருக்கு கூடக் காசில்லை என்பார், நான் பணம் கொடுத்து உதவி செய்தேன். உற்சாகமாகப் போய்ச் சோகமாகத் திரும்பி வருவார். ஒருநாள் அவருடைய இந்தச் சூழ்நிலைக்கான காரணம் என்ன? என்று கேட்டேன். எல்லாவற்றுக்கும் பாப்பான்தான் காரணம் என்றார். அவன்தான் என் மனைவி பெயரில் இருந்த கடனைக் கண்டுபிடித்தவன். கண்டுபிடித்தவன் கண்டுக்காமல் விட்டிருக்கலாம், வசூலிக்கச் சொல்லிக் குறிப்பு எழுதிவைத்துவிட்டான். மேலும் இவரோடு வேலை பார்த்த சில பிராமணர்கள் இவருக்கு இழைத்த தீமைகளையெல்லாம் சொல்லி, பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடிக்க வேண்டும் என்று கூறிய பெரியாரின் மொழிகளையெல்லாம் கூறி பிராமணர்களைத் திட்டித் தீர்த்தார். 
நான் எவ்வளவு நல்லவன், நான் வேலை பார்த்தபொழுது, ஒரு பைசா கூட இலஞ்சம் வாங்கியதே இல்லை. இலஞ்சம் வாங்கியவன் எல்லாம் நல்லா இருக்கின்றான். உண்மையாய் இருந்த என்னைக் கடவுள் சோதிக்கிறான். பலருக்கு உதவி செய்த எனக்கேன் இந்த நிலை? என அங்கலாய்த்தார். இப்பொழுது எனக்குச் சத்தியத்தை கூறவேண்டிய நிலை. எனவே யோபுவின் நண்பர்களைப் போலப் பேச ஆரம்பித்தேன். இந்தப் பிரச்சனை தீர வேண்டுமானால், நீங்கள் சொல்லுகின்ற அந்தப் பார்ப்பனரை மன்னியுங்கள் என்றேன். உடனே வந்தது பாருங்கள் கோபம்! எந்தக் கடவுளும் கிடையாது என்று அவர் வணங்கிய கடவுள்களின் பெயரை எல்லாம் சொல்லி அவர் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கிய கடவுளையும் சேர்த்து கெட்டவார்த்தையால்  திட்டித் தீர்த்தார். 
இந்தப் பெரியவரின் நிலைமையைப் பாருங்கள்! ஆண்டவருடைய வழி எவ்வளவு மேன்மையானது.  ஆண்டவரின் வழியில் செல்லுபவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்! இன்று ஆண்டவரை அறியாத மக்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி சீரழிகின்றார்கள்! ஆனாலும் ஆண்டவருடைய வழிகளை வேண்டாமென ஒதுக்கித் தள்ளுகின்றார்கள்! இப்படிப்பட்டவர்கள் சுவிஷேசத்தை ஏற்றுக்கொள்ளும்படியாய் கிருஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டியது மிக அவசியம். அந்தப் பெரியவரின் தவறுகள் என்ன என்ன என்பதை நீங்கள் அறிகிண்றீர்களா? மென்மையான, நெருக்கடியிலிருந்து விலகி வாழ அந்தப் பெரியவருக்கு ஆண்டவரின் வழியில் வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிகிறீர்களா? 
உங்களுடைய கடன் பிரச்சனை எப்படி இருக்கின்றது? மாறும் என நம்புகின்றீர்களா? உங்களிலே ஒரே ஒரு மாற்றத்தை நீங்கள் செய்ய வேண்டும், அது உங்கள் விசுவாசத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
யோபு தான் சந்தித்த பிரச்சனைகளில் எவ்விதத்திலும் ஆண்டவரை குற்றம் சுமத்தவில்லை. அவனுக்கு இது ஏன் வந்தது? எப்படி சரியாகும்? என்பதும்  தெரியவில்லை. நன்றாக இருந்த வாழ்க்கையில் குறைவுகளை சந்தித்தால், எலிபாஸ் போன்றவர்கள், நீர் ஏதோ தப்பு செய்திருக்கின்ரீர்! அதனாலதான் இப்படியெல்லாம் நடக்கின்றது எனக்கூறி வெந்த புண்ணில் வேலைப்பாச்சுவார்கள்!
இதில் யோபுவினுடைய நிலைமையைப் பார்ப்போமா? தனது நீதியை சொல்லி இவன் ஜெபித்ததை தொடர்ந்து பார்ப்போம். 30:23-25ல்,
"சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக் கொடுப்பீர் என்று அறிவேன். 
ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,
துன்னாளை (துக்கநாளை) கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய் தன் கைகளை நீட்டுவாராக" 31:5-10ல், 
"நான் மாயையில் நடந்தேனோ, என் கால் கபடு செய்ய தீவிரித்ததோ என்று,
சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
என் நடைகள் வழியைவிட்டு விலகியதும், என் இதயம் என் கண்களை பின் தொடர்ந்தும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக் கொண்டதும் உண்டானால்,
அப்பொழுது நான் அறுத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப் போகக்கடவது. என் மனம் யாதொரு ஸ்திரியின் மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப் பாத்ததும் உண்டானால்,
அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனித அவள் மேல் சாய்வாளாக. 31:13-22ல், 
"என் வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும் என்னோடு வழக்காடும் போது, அவர்கள் வழக்கை நான் அசட்டை பண்ணியிருந்தால்,
தேவன் எழும்பும் போது நான் என்ன செய்வேன்; (இந்த இடம் யோபுவின் தேவ பக்தி) அவர் விசாரிக்கும் போது, அவருக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன்.
தாயின் கர்ப்பத்தில் உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவா? ஒரே விதமான கர்ப்பத்தில் உண்டுபண்ணினார் அல்லவோ?
எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களை பூத்துப் போகப்பண்ணி,
தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய் சாப்பிட்டதுண்டோ?
என் சிறு வயது முதல் அவன் தகப்பனிடத்தில் வளருவதுபோல என்னிடத்தில் வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்தது முதல்,அப்படிப்பட்டவர்களைக் கைலாகு கொடுத்து நடத்தினேன்.
ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்து போகிறதையும், ஏழைக்கு மூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது,
அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல் கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,
ஒளிமுக வாசலிலே எனக்கு செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
என் கைப்பட்டை என் தோளில் இருந்து சரிந்து என் புயத்து எலும்பு முறிந்து போவதாக" 
யோபுவினுடைய நீதி எப்படி இருக்கிறது? தேவ பயம் எப்படிப்பட்டது? உங்கள் சுய நீதியோடு நீங்கள் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்! யோபுவின் பக்கத்திலேயே நிற்க முடியாது. சரி இதெல்லாம் இதுவரை கடவுளை அவன் நேருக்கு நேர் சந்திக்கும் வரை. 
"....இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகின்றேன் என்றான்" (42:5,6)
பொதுவாகப் பழையேற்பாட்டு பரிசுத்தவான்கள் அனைவருமே தங்கள் சுயநீதியை வைத்து ஆண்டவரை அணுகினர் அல்லது தங்கள் அழைப்பை வைத்து அணுகினர். இனிமேல்,
புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய உங்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகின்றது? இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்தெழுதலுக்குப் பின் எல்லாவற்றிலும் மாற்றம் வந்தது. 
இப்பொழுது எல்லாமே விசுவாசன்தான். மேலே உள்ள வசனங்களை விசுவாசிக்கிண்றீர்களா? நீங்கள் நீதிமானாவதற்கு எந்தச் செயலையுமே செய்ய வேண்டாம். இயேசு சிலுவையில் சிந்திய இரத்தமே உங்களை நீதிமானாக்குகின்றது என்பதை விசுவாசித்தாலே போதும். நீதிமானாவது எல்லாமே Free! Free!! Free!!! அனால் இயேசு கொடுத்த விலைக் கிரயம் மிகப்பெரியது.
எனவேதான் நீங்கள் ஜெபத்திலே பிதாவிடம் வரும்பொழுது, பாவியாகிய என்மேல் கிருபையாய் இரும், என ஜெபிக்க தேவை இல்லை. அது மனத்தாழ்மையும் இல்லை. 
பிள்ளைகள் தனது தந்தையிடம் பழகுவதைப் போலத் தேவ சமூகத்திற்கு செல்ல வேண்டும். 
மனத்தாழ்மை சோதிக்கப்படுகின்ற இடங்களை உங்களுக்குச் சொல்லுகின்றேன். 
1. நீங்கள் தவறாக நடத்தபடும்பொழுது, 
(misguide, ill-treat) உங்கள் எதிர் செயல் என்ன? 
2. பிறர் உங்களைத் தவறாகக் குற்றஞ்சாட்டும்பொழுது. 
3. பிறர் உங்களைப் புகழ்ந்து பேசும்பொழுது.
உதாரணத்துக்கு ஒரு முழு இரவு ஜெபத்தில் நான் கலந்து கொண்டபொழுது நடந்த ஒரு சம்பவம். அதில் அநேகமாக 70% ஊழியர்கள், ஒரு ஊழியர், என்னைப் பார்த்து, நீங்கள் யாரெனக் கேட்டார். நான் சுவிஷேசகர் எனப் பதிலளித்தேன். நீங்கள் சபைக்குத்தான் நற்செய்தியை கூறுவீர்களா எனக் கிண்டலாகக் கேட்டார். அதாவது நீங்கள் ஆத்தும ஆதாயம் செய்யமாட்டீர்கள், சபைகளில் பேசுவீர்கள், இது அவர் கேட்டதின் பொருள். எனக்குள்ளே இருந்த ஆவியானவர், ஊழியத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவில் கொண்டுவந்தார். அது, 
ஓரிடத்தில் கைப்பிரதி கொடுத்துக் கொண்டிருந்தேன். அதை மேலோட்டமாகப் படித்த ஒருவர் சொன்னார், 'இதை முதல்ல கிறிஸ்தவர்களுக்குச் சொல்லு'   அதனாலதான் சபைகளிலே பேச ஆண்டவர் வழிகளைத் திறந்திருக்கின்றாரென நினைத்துக் கொண்டேன். 
தேவனுக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள். நீங்கள் இருக்கின்ற வண்ணமாகவே இருங்கள். பிறரை துச்சமாக எண்ணாதிருங்கள். 
உங்கள் ஜெபம் உற்சாகம் நிறைந்ததாய், பிதாவிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நீங்கள் இயேசுவின் இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றீர்கள் என விசுவாசிக்கும்போதுதான், ஆண்டவரால் உங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என விசுவாசிக்கிண்றீர்கள்! சரி, விடயத்துக்கு வருவோம்.  
"என் நாமத்தினாலே நீங்கள் எதை கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:14)
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு இல்லாத ஒரு பெரிய சிலாக்கியம் உங்களுக்கு இருக்கின்றது. அது, இயேசு என்ற  வல்லமையுள்ள நாமம். அல்லேலூயா! இதை உணர்ந்து நீங்கள் ஏசுவின் நாமத்தில் ஜெபிக்கும்பொழுது, உங்கள் ஜெபத்துக்கான பதிலை நீங்கள் பெற்றுக்கொள்ளுகிண்றீர்கள்!
இயேசு என்றத் திரு நாமத்துக்கு 
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
வானிலும் பூவிலும் மேலான நாமம் 
வல்லமையுள்ள நாமமது 
துயர் சொல்லித்துதித்திடும் நாமமிது - இயேசு 
வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த 
வீரமுள்ள திருநாமமது,
நாமும் வென்றிடுவோ மிந்த நாமத்திலே - இயேசு என்ற 
பாவத்திலே மாளும் பாவியை மீட்க 
பாரினில் வந்த மெய் நாமமிது 
பரலோகத்தில் சேர்க்கும் நாமமிது - இயேசு... 
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும் 
உன்னத தேவனின் நாமமிது 
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமிது - இயேசு..
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் 
தாங்கி நடத்திடும் நாமமிது,
தடை முற்றும் அகற்றிடும் நாமமிது - இயேசு...
ஜெபிப்போம்!
பரலோக பிதாவே உமக்குக் கோடானுகோடி ஸ்தோத்திரங்களையும், துதிகளை ஏறெடுக்கின்றோம். உமது குமாரனாகிய இயேசுவினாலே எங்களை நீதிமான்களாக்கியதற்காய் நன்றி! இயேசு என்ற வல்லமையுள்ள நாமத்தை எங்களுக்குத் தந்ததற்காய் நன்றி! இந்த ஜெபத்துக்கு பதில் தருவதற்காய் நன்றி! என்னோடு கூடச் சேர்ந்து ஜெபிக்கிறவர்களுடைய கடன் பிரச்சனை மாறுவதாக. குடும்பத்தின் தேவைகள் எல்லாவற்றையும் சந்தியும். வேலைகளில் இருக்கின்ற பிரச்சனைகள் இப்பொழுதே நீங்குவதாக. வியாதிப் படுக்கை மாறுவதாக. பலவீனத்தில் உள்ளவர்களின் பலவீனங்களை நீக்கிப் பலத்தினால் இடைகாட்டுவீராக. பிரசவிக்கப் பண்ணுகிற நான் பிரசவத்தை தடுப்பேனோ என்ற வாக்கின்படி பிள்ளைச்செல்வங்களை அருளிச்செய்யும். இயேசுவின் பெயரில் ஜெபிக்கின்றோம் பிதாவே. ஆமென், ஆமென்.
பின்குறிப்பு: உங்களுக்கு இந்தச் செய்தி ஆசீர்வாதமாய் இருந்தால், உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்! நீங்களும் உங்கள் மின் அஞ்சல் முகவரியின் மூலம் பதிவு செய்துகொள்ளுங்கள்! வாழ்த்துக்களுடன்... செல்வின். என்னைத் தொடர்பு கொள்ள நினைப்பவர்கள், 9840836690 மற்றும் 9839018488  மேலும் இந்த ஊழியத்துக்கு உதவி செய்ய விரும்பினால் GPAY: 9840836690 

11 Aug 2019

LOVE OF MONEY


அன்பு நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
இந்தப் பகுதியில் பணத்தைப் பற்றிப் பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகின்றது? என்று பார்க்கப்போகின்றோம்! தேவனுக்கு மகிமையை செலுத்துங்கள்! உங்கள் அயலாரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்! விவாதியுங்கள்!! விதண்டாவாதம் பண்ணாதீர்கள்! (அதாவது நான் சொல்லுவதுதான் சரி என்று நண்பர்களோடு வாதாடாதீர்கள்) இந்தச் சத்தியத்துக்கு மாறாக அவர்கள் பேசினால், பொறுமையாகக் கேளுங்கள்! ஆண்டவரிடம் அவர்கள் கூறுவதை விளக்கித் தர கேளுங்கள்! உங்கள் ஜெபத்துக்கு ஆண்டவர் உறுதியாகப் பதிலளிப்பார்!! 
1. பண ஆசை:
"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னை விட்டு விலக்குவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே" (எபி.13:5) 
"பண ஆசை எல்லாத்தீமைக்கும் வேறாயிருக்கிறது...."
நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கின்றபடி, பணத்தில் பிரச்சனை இல்லை; பண ஆசைதான் பிரச்சனை. இந்த உலகில் நடக்கின்ற எந்தத் தீமையாய் இருந்தாலும் அதன் காரணம் பண ஆசைதான் காரணம். தீமை என்று ஒரு செடி இருக்கின்றது என வைத்துக்கொள்ளுவோம்; அதைப் பிடுங்கி பார்த்தீர்களானால், அதின் வேர்கள் அனைத்தும் பண ஆசை என்றிருக்கும். நீங்கள் பணத்தின் மீது ஆசை வைத்தீர்களானால் அது நீங்கள் தேவன் மீது வைக்கும் விசுவாசத்தை கெடுத்து விடுகின்றது. உங்களுக்கு நீங்களே தீமையை இழைத்துக் கொல்லுகிண்றீர்கள் என்று வேதம் தெளிவாகக் கூறுகின்றது. 
எனக்குக் கடன் பிரச்சனை இருக்கின்றது நான் எப்படி பண ஆசை இல்லாதவனாக இருக்க முடியும் என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது. கடன் பிரச்சனை வேறு; பண ஆசை வேறு. பண ஆசை இருந்தால்தான் கடன் பிரச்னையைத் தீர்க்க முடியும் என நினைப்பதே தவறு; நேர்மையாகவே சம்பாதித்து கடன் பிரச்னையைத் தீர்க்க முடியும். இங்கேதான் உக்கிரணத்துவம் வருகின்றது.
உக்கிராணத்துவம் என்றால் என்ன?
உங்களுக்கு இருக்கும் சொத்துக்கள் அனைத்துமே தேவனுக்கு சொந்தமானது. உங்கள் கடனும் கூட! நீங்கள் அதை நிர்வகிக்கிண்றீர்கள்!! ஆகவே கடன் இருப்பவர்கள், கவலைகளை ஆண்டவர் மீது வைத்துவிடுங்கள்! எனவே நிர்வாகம் செய்ய வேண்டிய அறிவுக்காக நீங்கள் வேத வசனத்தைத் தேடி வாசித்து விசுவாசிக்க வேண்டும்! ஈசாக்கோடு தேவன் இருந்ததை போல என்னோடும் இருக்கின்றார்!எனவே எனது கையின் பிரயாசம் 100% ஆசீர்வதிக்கப்படும், என்ற விசுவாசத்தோடு நீங்கள் பிரயாசப்பட வேண்டும். அதன் பலனைப் பெற்று கடனைத் திரும்ப எளிதாகக் கட்டிவிடலாம்.
உங்களுக்குக் கடன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி உக்கிரணத்துவத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்! அப்பொழுது வேதம் கூறுகின்ற பண ஆசையிலிருந்து விடுபட்டவர்கள் ஆவீர்கள்! 
2. ஐசுவரியவான்கள்: 
"அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகின்றேன்.
மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்"
வசனம் 25ல்,
"அவருடைய சீஷர்கள் அதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்பட கூடும் என்றார்கள்" 
மிகவும் ஆச்சரியப்பட்டார்கள் எனில் அவர்களுக்குள் ஐசுவரியாவான் அல்லது ஐசுவரியவாட்டி இயேசுவின் குழுவில் இருந்தார்கள் என்றுதானே பொருள்!
இயேசுவின் கூற்றுப்படி, யார் யாரெல்லாம் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்பதையும் பார்க்கலாம்! ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே தவிர ஐசுவரியாவான் நுழைவதில்லை என்பதை வைத்துப் பார்த்தோமானால், முதலாவது பரலோகத்துக்கு வெளியே நிற்பது ஆபிராம்தான்! ஆதி. 13:2ல்,
"ஆபிராம் மிருக ஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாய் இருந்தான்" 
வசனம் 6ல்,
"ஆபிராமும், லோத்தும் ஒருமித்து குடியிருக்கக் கூடாதபடிக்கு, அந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாய் இருந்தது"
இந்த ஐசுவரியவானாகிய ஆபிராம் பரலோகத்துக்குள்ளே பிரவேசிக்க முடியாது.
ஈசாக்கை நீங்கள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதி. 26:13ல்,
"அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்" ஈசாக்கும் வெளியேதான்!!
யாக்கோபுவை பார்ப்போம். ஆதி. கடைசி வசனம், 
"இவ்விதமாய் அந்த புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும் ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்"
யாக்கோபும் தேவனுடைய இராஜ்யத்துக்கு வெளியேதான்!! கடைசியாக யோபு, அவனது செல்வச் செழிப்பை அவன் விவரிக்கும் போது, யோபு 29:6ல்,
"என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்;...."
அவ்வளவு செழிப்பு! அவனது நாட்களில் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு மக்கள், ஒட்டகங்களைப் பயன்படுத்தினர். இப்பொழுதோ, மக்கள் மகிழுந்தை (car)  பயன் படுத்துகின்றார்கள். அப்படியானால் ஆண்டவரின் ஆசீர்வாதத்துக்குப் பின் அவனிடம் 6,000 மகிழுந்துகள்!! வாவ்.... பக்கத்திலே செல்லுவதற்கு அதாவது 70கி.மீ. வரை அந்தக் காலத்திலே கழுதையை பயன்படுத்தினர். இப்பொழுதோ, இரு சக்கர வாகனங்களை  (bike) பயன் படுத்துகின்றார்கள்! ஆண்டவர் அவனை ஆசீர்வதித்தபின் அவனுக்கு 1,000 இரு சக்கர வாகனங்கள்! நிலத்தை உழுவதற்கு அந்நாட்களில் ஏர்களை மக்கள் பயன்படுத்தினர். இப்பொழுதோ, இயந்திர கலப்பைகள், (tractor) ஆண்டவருடைய ஆசீர்வாதத்துக்குப் பின், அவனுக்கு 1,000 இயந்திர கலப்பைகள்! (Tractors) ஒரு tractor ஒரு நாளைக்கு, 10 ஏக்கர் நிலத்தை உழும். வருடத்துக்கு 3 மாதங்கள் நிலத்தை உழப் பருவம் இருக்கும். இதன்படி கணக்குப் போட்டால், 1,000*10*90=9,00,000 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தகாரன் யோபு. அதாவது இன்றய நாளின் கணக்குப்படி மல்டி பில்லியன் $. அவன் வாழ்ந்த நாட்களில் மட்டுமல்ல இன்றய பெருஞ் செல்வந்தரான பில் கேட்ஸ் ஐ விட மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தான். இந்த யோபுவும் பரலோகத்துக்கு வெளியேதான் நிற்க வேண்டும். 
ஆண்டவர், தன்னை மோசேக்கு முட்ச்செடியில் காட்சியருளி அறிமுகப்படுத்தியபோது, யாத். 3:6ல், 
".....நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார்..."
இப்படி தன்னை பணம்படைத்தவர்களின் தேவன் என்று தன்னை அழைத்துக்கொண்டார். இவர்களை எப்படி பரலோகத்துக்குள் அனுமதியாமல் இருப்பார்? 
இவர்களுடைய வாழ்க்கையை நீங்கள் நுணுக்கமாக ஆய்ந்து பார்ப்பீர்களெனில், ஒரு விடயத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள முடியும். அது தீமோ.6:17-19 வரையுள்ள வசனங்கள்தான். அதைப் பார்ப்போம்!
"இவ்வுலகில் ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கின்றவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், 
நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்கு கட்டளையிடு"
மேலும் ஒரு இடத்தில் இயேசு கூறியதையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அது மாற்கு 10:23,24. 
"அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியவான்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.
சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். பிள்ளைகளே, ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது!"
ஆதலால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு அனைவரும் பரலோகத்திற்குள் நுழைய மிக மிகச் சரியானவர்கள்! உங்களில் செல்வந்தர்கள் இருப்பீர்களெனில் நிச்சயமாகவே வேதவசனத்தின்படி பரலோகத்தில் உங்களுக்கு ஓர் இடம் உண்டு. இறுதியாக, 1தீமோ. 6:6ல், 
"போதுமென்கிற, மனதுடன் கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்"
எனக்கன்பான வாலிப, தம்பி தங்கையரே! உங்கள் அண்ணனது ஆலோசனைக்குச் சற்று செவி கொடுங்கள்! உங்கள் வாழ்நாளில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? என ஜெபத்துடன் திட்டமிடுங்கள்! அதில் உறுதியாக இருங்கள்! அந்த எல்லையை எட்டிவிட்ட பின்பும் ஓடிக்கொண்டிருக்காதீர்கள்! போதும்!! உங்கள் வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! அப்படிப்பட்ட மனதும் வாழ்க்கையும் தேவபக்தியுமே உங்களுக்கு மிகுந்த ஆதாயமாகும்!!
ஓரிரு மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு செய்தியை நீங்கள் வாசித்திருப்பீர்கள்! அது, கூகிள் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை அவர்கள், தனக்கு தனது நிறுவனம் வழங்கிய சுமார் 450கோடி ரூபாயை இது தனக்கு வேண்டாம், என்னிடம் நிறைய பணம் இருக்கின்றது எனக் கூறி வாங்க மறுத்துவிட்டார்.  இதை வாசிக்கின்ற உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? இந்தச் சத்தியத்தில் உங்களுக்கான கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்!! 
ஜெபிப்போம்!!
எங்களை நேசிக்கின்ற அன்பின் பரலோக தகப்பனே! ஏசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம்! பணத்தைக் குறித்து உமது வேதத்தில் கூறப்பட்டுள்ள சத்தியத்தைக் காண கிடைத்த வாய்ப்புகளுக்காக நன்றி! நாங்களும் எங்கள் பிள்ளைகளும் விசுவாசத்தில் முன்னேறிச் செல்லக் கிருபை தருவதற்காய் நன்றி! எங்கள் மன விருப்பத்தை நிறைவேற்றுவதற்காய் நன்றி! இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென், ஆமென்.
அன்பு நண்பர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்!! இந்த வலைத்தளத்தை உங்கள் நண்பர்களுக்கு, 
முகநூல், சுட்டுரை, வாட்ஸ்-அப்  ஆகியவற்றின் மூலமாக உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிர உங்களை அழைக்கின்றேன்! வாழ்த்துக்களுடன்...

5 Aug 2019

BE NOT CONFORMED TO THIS WORLD


கிறிஸ்துவுக்குள் பிரியமான யாவருக்கும் வாழ்த்துக்கள்!
"நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர் 12:2)
மேலே உள்ள வசனத்தை இங்குள்ள சபைகள் நீங்கள் அணிகின்ற ஆடைகளைப் பற்றி போதிக்கின்றன. ஏனெனில் வேஷம் என்ற வார்த்தையை வைத்து போதிக்கின்றார்கள். ஆனால் வசனத்தின் பிற்பகுதியில் உங்கள் மனம் புதிதாகிறதினாலே என்று இருக்கின்றது. ஒத்த வேஷத்துக்கும், மனம் புதிதாவதற்கும் சம்பந்தம் இருக்கின்றது. உங்கள் சரீரத்தில் அணிகின்ற உடைகளில் இல்லை ஒத்தவேஷம்! வேத வசனத்துக்கு புறம்பானவைகளில் மனதை செலுத்தி,  அதையே பேசிக்கொண்டு இருந்தால் வருவதுதான் ஒத்தவேஷம்! 
உதாரணத்துக்கு, உங்கள் நண்பர் வேதவசனத்துக்கு புறம்பான செய்தியை உங்களிடம் பேசினால், நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு அதையே நீங்களும் பேசிக்கொண்டிருந்தால் நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம்  தரிக்கிண்றீர்கள்! 
அண்மையில், ஒரு சபையில் தேவ செய்தியளிக்கச் சென்றிருந்தேன். ஆராதனை முடிந்தவுடன் முன் வருபவர்களுக்கு ஜெபம் செய்யுங்கள் என சபையின் போதகர் கூறவே அநேகர் என்னிடம் வந்து ஜெபித்தார்கள்! அதில் ஒரு வயதான அம்மா, தனக்கு சுகர் இருப்பதாகவும், கை, கால்கள் நோவெடுப்பதாகவும் சொல்லி ஜெபிக்க சொன்னார்கள்! உங்களுக்கு சுகர் இருப்பதாக யார் சொன்னார்கள்? எனக் கேட்டேன். அதற்க்கு டாக்டர்தான் கூறினார்கள் எனக் கூறினார்கள் என்று சொன்னார்கள்! டாக்டர் அவர் படித்ததைக் கூறுவார், ஆனால் வேதம் இயேசுவின் தழும்புகளால் குணமானீர்கள் என்று கூறுகின்றது. நீங்கள் எதை விசுவாசிக்கிண்றீர்களோ அதைத்தான் நீங்கள் சந்திப்பீர்கள்! உங்களுக்கு சுகம் வேண்டுமானால் வேதவசனம் கூறுவதை விசுவாசியுங்கள்! எதை விசுவாசிக்கிண்றீர்கள்? டாக்டரா? பைபிளா? எனக் கேட்டேன். உங்கள் மனம் புதிதாக வேண்டும். 
மேலும் பெண்களின் ஆடை அணிகலன்களைப் பற்றி பேசும்போது, வேதாகமம் 1தீமோ.2:9ல்,
"ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது, தங்களை அலங்கரியாமல், 
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற ஸ்திரிகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்" 
இந்த வசனங்கள் பெண்களை நான்கு விடயங்களை செய்யக்கூடாது எனக் கூறிவிட்டு, அதற்க்கு பதிலாக, மூன்று மனம் சம்பத்தப் பட்ட விடயங்களையும், நான்காவதாக செயலை சார்ந்ததாகவும் இருக்கின்ற விடயங்களை செய்யவேண்டும் என போதிக்கின்றது. புதிய ஏற்பாட்டில் எல்லாமே மனம் சார்ந்ததாகவே இருக்கின்றது. எனவே மனம் புதிதாக வேண்டும். இந்த சத்தியத்தை நீங்கள் அறியும்போதே உங்கள் மனம் புதிதாகின்றது. உங்கள் மனதை வசனங்கள்தான் புதிதாக்குகின்றது! இப்பொழுது உங்கள் வாழ்க்கையிலே தேவனுடைய பரிபூரண சித்தம் என்ன என்பதை நீங்கள் பகுத்தறிய முடியும்!  இதைப்போல இன்னும் இரண்டு விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றேன்! உங்கள் விசுவாசம் கட்டி எழுப்பப்பட ஜெபிக்கின்றேன்!!
இப்பொழுது வயதான பெரியவர்களைக் குறித்த ஒரு விடயம்! 'எனக்கு வயதாகிவிட்டது, சீனியர் சிட்டிசன் ஆகிவிட்டேன். எனக்கு பலவீனமாக இருக்கின்றது, மூட்டு வலி கடுமையாக இருக்கின்றது, பல் கூசுகின்றது, கை நடுங்குகின்றது, வயசானா எல்லாம் வரத்தான் செய்யும் (வேத வசனத்தில் கவனத்தை செலுத்தாமல்  மருத்துவத்தில், கவனம் செலுத்தினீர்கள் எனில், மூப்பியல் என்ற ஒரு பிரிவே இருக்கின்றது!!) என்று உங்கள் மனதை உங்கள் அனுபவத்திற்குள்ளாக பக்குவப்படுத்தி விடுகிண்றீர்கள்! இதன் பலன் மனச்சோர்வுதான்! 
ஆனால் வசனம் என்ன சொல்லுகின்றது? சங்கீதம் 103:6ல், 
"கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது"
விசுவாசியுங்கள்! மேலே உள்ள சோர்வுகள், மற்றும் உங்கள் சரீரம் உங்களுக்கு சொல்லும் செய்திகள் எல்லாமே மாறும். உங்கள் மனம் மேலே உள்ள வசனத்தை விசுவாசிக்கும் பொழுது, புதிதாகும், மறுரூபமாகும்.  அடுத்த விடயம்!! 
உங்களில் எத்தனை பேர் சாவதற்கு ஆயத்தம்? அல்லது சாக விருப்பமில்லை? இன்றைய உலகத்திலே குடும்பத்தாராலே, (உறவுகளாலே) கடன் பிரச்சனையினாலே, வியாதி முற்றியதால் என் பிள்ளைகளுக்கு அதிகம் செலவாகின்றதே, என்ற நெருக்கடிகளினாலே, செத்துப் போனால், நலம் என்று சாவை விரும்புகின்றவர்கள் அநேகர் உண்டு. இன்னொரு பக்கம், என் பிள்ளைகளுக்கு கலியாணம் செய்துவிட்டால் நிம்மதியாக செத்துவிடுவேன், பேரப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டு செத்துவிடுவேன், பேரப்பிள்ளைகளின் கலியாணத்தைப் பார்த்துவிட்டு நிம்மதியாக கண்ணை மூடுவேன்! என்று சாவை தள்ளிப்போட்டுக் கொண்டு இருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள்! இங்கே எபிரேயர் 11:5ல், 
"விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்...." 
இதைப் படிக்கின்ற உங்களுக்கு ஏனோக்குக்கு ஏற்பட்ட அனுபவம் காத்திருக்கின்றது!! எப்படி இந்த அனுபவத்தைப் பெற்று கொள்ளுவது? ஏனோக்கு ஏன் எடுத்துக்கொள்ளப்பட்டான்? வசனத்தைத் தொடர்ந்து படித்து, 'அவன் தேவனுக்கு பிரியமானவனென்று அவன் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னே சாட்சி பெற்றான்' இதைப் படித்துவிட்டு, தேவனுக்கு இதெல்லாம் பிரியம் என்று ஒத்த வசனங்களைத் தேடியெடுத்து, அதன்படி கிரியை செய்யாதிருங்கள்! அடுத்த வசனமாகிய 6ம் வசனத்தைப் படித்துப் பாருங்கள்! அது விசுவாசத்தையே வலியுறுத்துகின்றது! 
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கின்றவரென்றும் விசுவாசிக்க வேண்டும்" 
உங்களது கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கைக்கே இதுதான் அடிப்படை வசனம். உங்கள் விசுவாசம் பிதாவின் உள்ளத்தை குதூகமடைய செய்யட்டும்! உங்கள் மனம் புதிதாகட்டும்! உங்கள் வாழ்வு ஒளிரும்! மிளிரும்!! 
வேத வசனத்தை விசுவாசிக்கிற உங்களுக்கு ஆண்டவர் என்னவெல்லாம் செய்யமுடியும் என்ற நினைவுகளால் உங்கள் மனம் நிரம்பி வழிவதாக. கடைசியாக,
ஒரே ஒரு எச்சரிக்கை!
உங்கள் விசுவாசத்தை, உங்கள் விசுவாசத்தின் மீதே வைத்துவிடாதிருங்கள்! என்றுமே மாறாத நான் குறிப்பிடும் வசனத்தின் மீது வைத்துவிடுங்கள்!! ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!!! 
ஜெபிப்போம்!
அன்புள்ள பரலோகப்பிதாவே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக! விசுவாசிக்க வேண்டிய வசனங்களை விசுவாசித்து, உமது உள்ளத்தைக் குளிர்விக்க உதவி செய்ததற்க்காய் நன்றி! நாங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல், எங்கள் வாழ்க்கையிலே தேவ சித்தம் என்ன என்பதை பகுத்தறிய வழி நடத்துவதற்காய் நன்றி! எங்கள் விசுவாச வாழ்க்கையின் மூலமாய், புறஜாதியினர் மத்தியிலே சாட்சிகளை ஏற்படுத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் பிதாவே! ஆமென், ஆமென்.
பின் குறிப்பு: உங்கள் மின் அஞ்சல் முகவரியினால் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்! இதில் வெளியிடும் பதிவுகள் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்! பகிருங்கள்!! 

26 Jul 2019

PRAYER


பிதாவாகிய தேவனே!
ஒருவர் என்னிடத்தில் உதவி கேட்கும்பொழுது சரி என்று உடனே சொல்லக்கூடிய கிருபையையும், 
நான் சோதிக்கப்படும் பொழுது, தவறானத்தைச் செய்ய மனம் இணங்கும்போது உறுதியாக இல்லை என்று சொல்லக்கூடிய பெலத்தையும்,
நான் அவசரப்படும்போது, எனக்கு நானே காத்திரு எனக்கூற பொறுமையையும், 
இன்று செய்யக்கூடியதை வேறொருநாள் செய்யலாம் என தள்ளிவைக்கும் மனப்பான்மை வரும் போது, இப்பொழுதே என சொல்லக்கூடிய மன உறுதியையும், 
இன்று வருகின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும், கர்த்தாவே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கின்றீர்? என கேட்கும் கீழ்படிதலையும், 
கொடுக்கும்படியாய் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென், ஆமென், ஆமென்.   

19 Jun 2019

AN APPEAL TO YOUTH


அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு எமது அன்பான வாழ்த்துக்கள்!
நீங்கள் நமது வலைத்தளத்துக்கு கொடுத்து வருகின்ற ஆதரவுக்காக நன்றிகள்! உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்தீர்களானால், எப்பொழுதெல்லாம் புதிய பதிவுகள் வெளியிடுகின்றோமோ அது  உங்களுக்கு உடனடியாக வந்து சேரும்!  
"உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் 
உன் தாயையும் உன் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது" (எபே. 6:2,3)
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகின்றேன்! உங்கள் வாழ்க்கையில் நன்மைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற எனது அன்பு தம்பி தங்கையரே! மேலே உள்ள வசனத்தின் மூலமாக உங்களை சந்திப்பது தேவ சித்தமாய் இருக்கின்றது. இன்றுள்ள வாலிபரின் வாழ்க்கையின் அதிகமான  தாக்கம் நண்பர்களிடத்தில் இருக்கின்றது! நண்பர்களும் இக்கட்டான நேரத்தில் உதவி செய்வதின் மூலமாக, அதை உறுதி செய்கின்றனர். வாலிபரின் வாழ்க்கையின் நோக்கம், வாழும் முறை இவைகளில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது!
சில வருடங்களுக்கு முன், தடா என்ற நகரில், மீனவர் குப்பத்தில் சிறுவர் வேதாகம பள்ளி நடத்த அழைக்கப்பட்டிருந்தேன். நான் முதுநிலை (15 வயது முதல் 25 வயதுவரை) ஆசிரியராக பணியாற்றினேன். அவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். உங்களுக்கு யாரை அதிகமாக பிடிக்கும்? எல்லாரும் அமைதியாக இருந்தனர். என்ன பதில் சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்தனர். பதில் சொல்ல விரும்புகிறவர்கள் உங்கள் கைகளை தூக்கி காட்டுங்கள் என கூறினேன். உடனே நான்கு, ஐந்து பேர் கைகளைத் தூக்கினர். அந்த வகுப்பில் மொத்தம் 18-20 பேர் இருந்தனர். கைதூக்கிய ஒரு தம்பியைப் பார்த்து நீ சொல்லு என்றேன்; அவன் மிகுந்த சத்தமாக எனக்கு காஞ்சனாவை பிடிக்கும் எனக் கூறினான். மற்ற பிள்ளைகளெல்லாம் சிரித்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை, காஞ்சனா யார்? என்று கேட்டேன். மற்ற பிள்ளைகள் பதிலளித்தனர், அது தெலுங்கு தொலைக்காட்சி தொடரில் வரும் பாத்திரம் (கேரக்டர்) என்றனர்.
வாலிப பருவம் என்பது, ஒரு கிடைத்தற்கரிய ஒரு பருவம். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், நண்பர்களோடு விளையாடவேண்டும். வீட்டிற்கு வந்து சாப்பிட வேண்டும். அப்பா, அம்மா சாப்பிட்டார்களா என்ற கவலை இல்லை.  பணத்தைக் குறித்து எந்தவிதமான கவலையும் இல்லை. அப்பா கொடுக்காவிட்டால், அம்மா கொடுப்பார்கள். எப்பொழுதும் மகிழ்ச்சி, எந்தவித கவலையும் இல்லை, பொறுப்பும் இல்லை. மகிழ்ச்சிதான்.... தங்கச்சிகள்..... பள்ளி, கல்லூரிக்கு சென்றுவந்தபின் வீட்டுப் பாடங்களை முடிப்பது, அம்மாவுக்கு உதவி செய்வது, இப்பொழுது சுட்டுரை, முகநூல் பக்கங்கள், வாட்ஸ் அப் என வலம் வர வேண்டியது. கிறிஸ்த்தவ குடும்பங்களில் வேதவாசிப்பு, ஜெபம் இதையும் கூட்டிக்கொள்ளலாம். பொதுவாக இந்த பருவம்தான் உங்கள் எதிர் காலத்தை நிர்ணயம் செய்கின்றது. 
மேலே உள்ள வசனத்தில் வாசிக்கிறோம், உன் தாயையும் தகப்பனையும் கனம் பண்ணு.....  உன்னுடைய பெற்றோரை கனம் பண்ணு எனக் கூறவில்லை. காரணம் உன் அம்மாவின் அன்பு வேறு, உன் அப்பாவின் அன்பு வேறு. 
அம்மாவின் அன்பு: இது பொதுவாக சரீரத்துக்கு அடுத்ததாக இருக்கும். சாப்பிட்டானா? இன்னும் சாப்பிடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? சாப்பிட்டுவிட்டு போய் படி. கோபம் வந்தால் உடனே தண்டனை; இங்கே வா என்றால் உடனே அழுதுகொண்டே ஓடிப்போய் சேலையை பிடித்துக் கொண்டு நிற்கும். அடித்தாலும் பிடித்தாலும் அம்மா. அம்மாவின் அன்பு, என்வீடு, என்பிள்ளை என்பதிலேயே நிற்கும். அம்மா பிள்ளையை தூக்கினால், இடுப்பிலே தூங்குவார்கள், அல்லது கைகளிலே எடுத்து தனது மார்போடு அனைத்து தூங்குவார்கள். பொருள்: நீ என் மனதுக்கு இனியவன்(ள்) என் மகள் தப்பே செய்திருக்க மாட்டான்(ள்) இப்படி. அப்பாவின் அன்பு அப்படி இல்லை. 
அப்பாவின் அன்பு: இவரது அன்பு கண்டிப்பு. இவர் தன் பிள்ளைகள் இந்த உலகிலே வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கின்றார். உலகில் உள்ள பிரச்சனைகளை தன் மகன்(ள்) கற்றுக் கொண்டு எல்லாவற்றிலும் வெற்றிசிறக்க வேண்டும் என உளமார விரும்புகின்றார். ஆனால் அதை சொல்லிக் கொடுத்து அல்ல, வழிநடத்தி கற்றுக் கொடுக்க விரும்புகின்றார். அது பிள்ளைகளுக்கு வலியை கொடுக்கின்றது, அவருக்கும் வலிக்கின்றது. ஆனால் வேறு வழியில்லை. தண்டிக்கிறார் ஆனால் மனதில் வருந்துகின்றார். வருத்தத்தை வெளியே காட்டிக்கொள்ளுவதில்லை. பிள்ளையை தூக்கும்போது நீ என்னைவிட உயரத்துக்கு வரவேண்டும் / இன்னும் தூரத்தைப் பார்க்க வேண்டும்  என்று தன் தோளின்மேல் தூக்கி சுமக்கின்றார். இது அப்பாவின் அன்பு. சில வீடுகளில் அப்பாவின் அருகிலேயே செல்ல முடியாது. அப்படிப்பட்டவர்தான் அப்பா. எனவே பெரும்பாலான வீடுகளில் அப்பாவைவிட அம்மாவையே பிடிக்கின்றது. (ஒரு சில வீடுகளைத் தவிர, தன் பிள்ளைகளை வைத்துக்கொண்டே, தன் புருஷனைத் திட்டுவது வாடிக்கையாக உள்ளது. பிள்ளைகளின் கண்ணோட்டத்தில் இதை பாருங்கள்... இன்னும் சில சகோதரிகள் அருகில் யார் இருக்கின்றார்கள் என்பதையே பார்க்காமல் தன் புருஷனது காலை வாருவார்கள். முதலில் மனைவி தன் புருஷனை மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். எல்லாப் பிள்ளைகளும் அப்பா, அம்மாவைத்தான் வாழுகின்றார்கள். பிள்ளைகளுக்கு முன்பாகவே, அப்பாவும் அம்மாவும் சண்டைபோட்டால் எப்படி இருக்கும்? பிள்ளைகள் நம்பிக்கை இழக்கின்றார்கள். வாழ்க்கையே சூனியமாகி விடுகின்றது. பிள்ளைகளின் மனதும் கல்லாகிவிடுகின்றது. சிறுவர் ஊழியத்தில் நாங்கள் இப்படிப்பட்ட பிள்ளைகளை, சாதாரண நிலைக்கு கொண்டுவருவது சகஜம்) சரி தலைப்புக்கு வருவோம்!
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தனது மகனது பள்ளி ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதை இங்கு பார்க்கப் போகின்றோம்! ஒரு தந்தை நேரடியாக தன பிள்ளையை நடத்த முடியாத பகுதிகளுக்கு அவர், தனது மகனது ஆசிரியரின் உதவியை  நாடுகின்றார். ஒரு தந்தையின் அன்பை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்! 
"இன்று எனது மகன் தனது பள்ளி வாழ்க்கையை ஆரம்பிக்கின்றான்; சில நாட்களுக்கு அவன் முன்பின் அறிந்திராத புதியவர்களை சந்திப்பான் எனவே ஆசிரியரே! அவனை மென்மையாக நடத்துங்கள்; அவன் பல கண்டங்களைத் தாண்டி வீர, தீரச் செயல்களைப் புரியவேண்டும்; எல்லா வீர தீரச் செயல்களும் போராட்டங்களையும், துன்பங்களையும், கவலைகளையும் உள்ளடக்கியது. இப்படிப்பட்ட வாழ்க்கை வாழுவதற்கு அன்பு ஆசிரியரே நம்பிக்கை, அன்பு, தைரியம் தேவை. இவைகளை எனது அன்பு மகனின் கைகளை பிடித்துக்கொண்டு இதமாக கற்றுக் கொடுங்கள். எல்லா மனிதர்களுமே, நேர்மையானவர்களுமல்ல, உண்மையானவர்களுமல்ல என்பதை இவன் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு ரௌடிக்குள்ளும் ஒரு கதாநாயகன் இருக்கின்றான் என்றும், ஒவ்வொரு அரசியல்வாதிக்குள்ளும் ஒரு அற்பணிப்புள்ள தலைவன் இருக்கிறான் எனவும் கற்றுக்கொடுங்கள்;
உங்களால் முடிந்தால், கீழே கிடந்தது எடுக்கும் 100ரூபாயைக் காட்டிலும், உழைத்து சம்பாதிக்கும் 10 ரூபாய் மிக உயர்ந்தது எனவும் கற்றுக் கொடுங்கள். பள்ளியில், அருமை ஆசிரியரே, ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மேலானது எனக் கற்றுக்கொடுங்கள்.; ஏமாற்றங்களை எப்படி நேர்த்தியாய் எதிர்கொள்ளுவது என்பதை பற்றியும், வெற்றியை எவ்வாறு கொண்டாடுவது எனவும் கற்றுக் கொடுங்கள்; 
அனைத்து மனிதர்களிடமும் மென்மையான போக்கை கையாளவும், கடுமையான மனிதர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்! பொறாமையில் இருந்து ஓடிவிடவும், உங்களால் முடிந்தால் மென்மையாக சிரிப்பது என்பதையும் கற்றுக் கொடுங்கள்; துன்பத்திலும் எவ்வாறு சிரிப்பது என்றும், கண்ணீர் விடுவது (அழுவது) அவமானம் இல்லை என்றும் உங்களால் முடிந்தால் கற்றுக்கொடுங்கள்;  தோல்வியில் கூட ஒரு பெருமை இருக்கமுடியும், வெற்றியில் கூட மனத்தளர்வு இருக்கக்கூடும் என்பதையும் கற்றுக்கொடுங்கள்; எடுத்ததற்கெல்லாம் குறை கூறுபவரை ஏளனமாக பார்க்க கற்றுக் கொடுங்கள்; 
புத்தகங்களின் மேன்மையைக் கற்றுக்கொடுங்கள்; ஆனால் வானத்தில் பறக்கும் பறவைகளையும், மலைகளில் மலரும் மலர்களையும், அதிலே மொய்க்கும் தேனீக்களையும் பற்றி ஆழ்ந்து சிந்திக்க அவனுக்குப் போதிய நேரங்கொடுங்கள்; அநேகர் இவையெல்லாம் தவறு எனக் கூறினாலும் தன் சொந்த கருத்துக்களில் நம்பிக்கை வைக்க கற்றுக் கொடுங்கள்; 
எல்லோரும் செய்வதுபோல கூட்டங்களுக்குப் பின் சென்றுவிடாமல், என் மகனைப் பெலப்படுத்துங்கள்! ஒவ்வொருவரையும் கவனித்துக் கேட்க கற்றுக் கொடுங்கள்; ஆனால், கெட்டவர்களை உண்மை என்ற சல்லடையில் சலித்து நல்லவற்றை தெரிந்துகொள்ள கற்றுக் கொடுங்கள்; 
அவனது அறிவையும், திறமையையும் மேலான விலைக்கு விற்க, ஆனால் தனது இதயத்தையும், ஆத்துமாவையும் விற்றுவிடாமல் இருக்க உங்களால் முடிந்தால் கற்றுக்கொடுங்கள்; மனஉரத்தை பெற்றுக் கொள்ள பொறுமையையும், பொறுமையின்மையாய் இருக்க தைரியத்தையும் கற்றுக் கொடுங்கள்; தன் மீது உயர்ந்த நம்பிக்கைவைக்கவும் கற்றுக் கொடுங்கள். ஏனெனில், எப்பொழுதும் மனுக்குலத்தின் மீதும், தேவனின் மீதும் உயர்ந்த நம்பிக்கை வைக்கும்படியாக. இது நான் உங்களுக்கு கொடுக்கும் ஒரு ஒழுங்குமுறை. ஆனால் ஆசிரியரே, உங்களுக்கு எது சிறப்பாகத் தெரிகிறதோ, அதையே இந்த சிறுவனுகு கற்றுக்கொடுங்கள். ஏனெனில் இது என் மகன். 
ஆபிரகாம் லிங்கன் ஒரு ஜெப வீரன் என்பதை நன்கு அறிவீர்கள்! என் அன்பு தம்பி, தங்கையரே! தகப்பனின் அன்பு இப்படித்தான் இருக்கும். எனது அப்பாவாலதான் எனக்கு பிரச்சனை என்று நினைத்துக்கொண்டிருக்கிற வாலிபரே! அவர் வேலை செய்யும் இடத்துக்கு சென்று பாருங்கள்! அவருடைய உழைப்பை பாருங்கள்! உங்களை போஷிக்கும்படியாக, உங்களுக்கு நல்ல உடுப்பு எடுத்து கொடுக்க உங்களை படிக்க வைக்க அவர் படும் பாடுகளைப் பாருங்கள்! நீங்கள் நிச்சயமாகவே புரிந்து கொள்ளுவீர்கள் அவர் அன்பை. 
இன்னும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்: உங்களால் உங்கள் குடும்பத்தில் பகிர்ந்து கொள்ள முடியாத எதையும் செய்யாதீர்கள்! அப்படி செய்தால் நீங்கள், உங்கள் தாய், தந்தைக்கு துரோகம் செய்கின்றீர்கள்! தமிழில் இவ்வாறு கூறுவார்கள்! 'சொந்த செலவிலே சூனியம் வைத்தான் என்று' அதுபோலதான். உங்கள் எதிர்கால நன்மைகள் உங்கள் பெற்றோரின் கைகளில்தான் இருக்கின்றது! அதைத்தான் வேதமும் உறுதியாக, தெளிவாக சொல்லுகின்றது. நிலைத்து நிற்கும் நன்மைகளும் அவர்களிடமிருந்துதான்! 
நான் ஊழியம் செய்த இடத்தில், ஒரு கிறிஸ்தவ வாலிப மகள், தனது பாட்டியை முன்பு வைத்துக்கொண்டே, தனது பாட்டி அவளை நம்புவதில்லை என புகார் கூறினாள். எப்படி? என்று கேட்டேன். அவள் கூறியது, நான் பக்கத்தில் உள்ள மார்க்கெட்டில் வேலை செய்கின்றேன். எனக்கு என சொந்தமாக ஒரு கைபேசி வைத்துக்கொள்ள எனது பாட்டி என்னை அனுமதிப்பதில்லை. ஏனெனில் நான் கெட்டுப்போய்விடுவேனாம்! என்றாள். மட்டுமல்ல, நீங்களே சொல்லுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு கைபேசி வாங்கிக் கொடுத்திருக்கின்ரீர்களா? இல்லையா? எனக் கேட்டாள். "எனது பிள்ளைகள் கைபேசி வைத்திருக்கின்றார்கள்! (இந்த சம்பவம் நடந்த பொழுது எனது மூத்த மகள், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது பெண், +2 படித்துக் கொண்டிருந்தாள்) மூத்தவள் படித்த கல்லூரியில் கைபேசி அனுமதி இல்லை. எனவே வீட்டில்தான் இருக்கும். அடுத்தவள், வீட்டில் இருந்த தொலைபேசியில்தான் பேசுவாள். எங்களுக்கு (எனது மனைவிக்கும்) முன்பாகத்தான் தொலைபேசியில், தன் நண்பர்களோடு, (மாணவியர் மட்டும் படிக்கும் பள்ளி) தங்கள் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள், கேள்விபதில்கள், வீட்டுப்பாடங்களில் வரும் சந்தேகங்கள் ஆகியவைகளைக் குறித்து விவாதிப்பாள். பெரியவள், செல்பேசியை உபயோகிப்பாள். எங்கள் பிள்ளைகள் மீது ஒரு வினாடி கூட எங்களுக்கு சந்தேகம் என்பதே வந்ததில்லை. "இப்படிப்பட்ட பிரச்சனை எங்களுக்கு வந்ததே இல்லை" என்றேன். 
பொதுவாக பெற்றோர்கள், தாங்கள் சந்திக்கின்ற பிரச்னையை வைத்தே தங்களது பிள்ளைகளை நடத்துவார்கள்! உனது அம்மாவை எங்கே? என்றேன். அவள், "எங்களுடன் இல்லை" என்றாள். நீ தவறாக உன் செல்பேசியை பயன்படுத்தமாட்டேன் என்று உன் பாட்டிக்கு காண்பித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்றேன். அவள் சென்ற பின் அவள் பாட்டியிடம், "ஒன்று வாங்கிக் கொடுங்கள், அவள் அதை தவறாக பயன் படுத்த மாட்டாள்" என்றேன்.
உங்கள் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் ஆகியவைகளை, கவனமாக உபயோகியுங்கள். வாழ்த்துகின்றேன்...
ஜெபிப்போம்!
அன்பின் பரலோகப் பிதாவே, நீர் எனக்கு கொடுத்திருக்கின்ற எனது பெற்றோருக்காக நான் கோடானுகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன்! பெற்றோருடனும், உற்றார் உறவினர்களோடு இணங்கி வாழ நீர் கொடுத்திருக்கின்ற வாய்ப்புகளுக்காக நன்றி! தொடர்ந்து எனது பெற்றோரின் மூலமாக எனக்கு நீர் தருகின்ற நன்மைகளுக்காக நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் பிதாவே. ஆமென்! ஆமென்!! ஆமென்!!!

11 Jun 2019

100% GOD!!


கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கள் யாவருக்கும் நல் வாழ்த்துக்கள்! 
உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் 100க்கு 100 ஆண்டவராக இருக்கின்றார் என்ற நல்ல செய்தியை உங்களுக்கு இதன் மூலம் அறிவிக்கின்றேன்!
நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கு முன்பு எவைகளில் எல்லாம் தோல்வி அடைந்திருந்தீர்களோ, அல்லது உங்கள் உறவினர்கள் உங்களுக்கு வரவேண்டிய நன்மையைக் கெடுத்திருந்தார்களோ   அவைகளை எல்லாம் உங்களுக்காக மீண்டும் தோண்டி எடுத்து ஆசீர்வதிக்க இருக்கின்றார்!  
இதை படிக்கின்ற உங்களுக்கு, இந்த நாட்களில் உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் இடைப்படுவார். உங்கள் விசுவாசத்தை இயேசுவின் (வார்த்தையின்) மேல் வைத்துவிடுங்கள்!
முதலாவது, ஈசாக்கு: இவனது எதிரிகள் மனிதர்கள். ஆதி. 26:12-15ல், 
"ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; 
அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு,
அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப் போட்டார்கள்"
ஈசாக்கின் தகப்பன் மூலமாக, ஈசாக்குக்கு வந்த அத்தனை ஆசீர்வாதங்களையும் கெடுத்து போட்டார்கள்! 
என் அன்பு நண்பனே! உன்னுடைய வாழ்க்கையிலே உன் தகப்பன் உனக்கு செய்த நன்மைகளை உன் சுற்றத்தாரே அழித்துவிட்டார்களோ, சக மனிதர்களால் வஞ்சிக்கப்பட்டிருக்கிண்றீர்களோ! கவலைப்படாதீர்கள், உங்களை நீங்களே தேற்றிக் கொள்ளுங்கள்! உங்கள் தேவன் இன்றும் ஜீவிக்கின்றார். அவர் மாறாதவர், அவர் பெரியவர், அவர் உங்கள் பட்சம் இருந்து, உங்களுக்கு மீண்டும் மீட்டுத்தருவார். 
அந்த காலத்தில் துரவுகளில் இருந்துதான், தங்கள் ஆடுமாடுகள், ஒட்டகங்கள் ஆகிய அனைத்துக்கும், தங்களுக்கும் தேவையான குடிநீரும் பெற்றுக்கொண்டார்கள். ஈசாக்கும், அவனது ஆடு, மாடுகளும் உயிர்வாழக்கூடிய அடிப்படையான ஆசீர்வாதத்திலேயே கையைவைத்தார்கள். எவ்வளவு மோசமான மனிதர்கள் மத்தியில், வாழ்ந்து வந்தான். வசனம் 26:18ல்,
"....ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப் போட்டவைகளுமான துரவுகளை மீண்டும் தோண்டி,......"
மனிதர்களால் தூர்த்துப் போடப்பட்ட உங்கள் குடும்ப ஆசீர்வாதங்கள் அனைத்தும், மீண்டும் ஆண்டவரே தோண்டி எடுப்பார்! உங்கள் தகப்பனாரின் பிரயாசத்தின் பலன் மீண்டும் உங்களை வந்து அடையும்! மனிதர்களால் உங்கள் குடும்பத்துக்கு வந்த அத்துனை தீமைகளையும், நன்மையாய் இந்த நாளில் மாறப்பண்ணுகிறார்! நீங்கள் பலுகி பெருகும்படி ஆண்டவர் உங்களுக்கு ஒரு இடத்தையும் உண்டாக்குகிறார்! கர்த்தரை துதியுங்கள்! அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு அவர் நல்லவராகவே இருக்கின்றார்! 
அடுத்து, சிம்சோன்:
இவனது எதிரி இவனது சொந்த பலவீனம், ஆம், இவன் ஒரு பொம்பளை பொறுக்கி! இவனை ஒரு திட்டத்தோடு மனோவாவின் வீட்டில் பிறக்கச் செய்தார். ஒரு பாடல் வரிகள், இப்படியாக வருகின்றது,
"சிம்சோனைப்போல் சிநேகம் கொள்ளாதே"
பெண்களின் மீது நாட்டம்! நியா.14:4ல்,
"அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்திரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்;....."
இங்கே கர்த்தர் அவனது பெலவீனத்தையே பயன்படுத்தி, தனது திட்டத்தை நிறைவேற்றினார்! 
ஆண்டவரின் திட்டம், அவன் பெலிஸ்தியரை ஒடுக்குவதின் மூலமாக நிறைவேற ஆரம்பித்தது! பெண்ணின் சகவாசம் எப்படி முடியும் எனவும் ஒரு விடுகதையின் மூலமாக அவனுக்கு தெரியப்படுத்தினார். அதை அவன் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை! 
அதைப்போலவே, எனக்கன்பான நண்பரே, உங்கள் பெலவீனம் என்ன? சிலருக்கு, சிம்சோனின் பெலவீனம், சிலருக்கு குடிப்பழக்கம், சிலருக்கு பணஆசை, சிலருக்கு சுயம், சிலருக்கு சோம்பேறித்தனம் பெலவீனம்!  
ஆண்டவர் சிம்சோனை அப்படியே விட்டுவிடவில்லை! அவனுடைய பெலவீனம் அவனது கண்களை மறைத்தது! கண்களை இழந்தான்; மொட்டையடிக்கப்பட்டான்; மிக கடுமையாக தண்டிக்கப்பட்டான். ஆனால் ஆண்டவர் அவனை அப்படியே விட்டுவிடவில்லை! அவனது தோல்வியை வெற்றியாக மாற்றினார்! நியா.16:22ல், 
"அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு, திரும்பவும் முளைக்கத்தொடங்கியது"
அல்லேலூயா!.... ஆண்டவர் கைவிட்டுவிடவே இல்லை. மனிதர்கள் தூற்றித்திரியலாம், ஆண்டவர் கை விடவே மாட்டார்! மீண்டும் மயிர் முளைக்கத் தொடங்கியது. உங்கள் சொந்த பெலவீனத்தின் நிமித்தம் நீங்கள், உங்கள் வாழ்க்கை வீணாய் போய்விட்டது என்று நினைக்கிண்றீர்களா? சோர்ந்து போகாதிருங்கள்! சிம்சோனின் மயிர் மீண்டும் முளைக்கத் தொடங்கியது!! உங்கள் வாழ்க்கை மீண்டும் துளிர் விடுகின்றது!! ஆண்டவர் உங்கள் வாழ்க்கையின் மூன்று காலங்களையும் ஆளுகை செய்கிறார்!! கடைசியாக, யோபு:
உங்கள் வாழ்க்கையில் எனக்கு ஏன் இந்த பிரச்சனை? இந்த பிரச்சனை யாரால் வந்தது? என்று யோசித்து நேரத்தையும், காலத்தையும் விரயமாக்காமல், இதை எப்படி மேற்கொள்ளலாம் எனப் பாருங்கள்! முதல் கேள்விக்கு, நிச்சயமாக பதில் கிடைக்காது. இரண்டாம் கேள்விக்கு, பதிலாக யாரையாவது பிசாசு காட்டினான் என்றால், நீங்கள் அந்த நபரை பகைப்பீர்கள்! இது தேவ சித்தத்துக்கு எதிரானது. யோபு, தன் பிரச்னைக்கு காரணம், கர்த்தர்தான் என முழுமையாக விசுவாசித்தான். இதை யோபு 1:21ல், பார்க்கலாம்.
"....கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்  என்றான்"
சரி விடயத்துக்கு வருவோம்! யோபு 33:29,30ல், 
"இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்திலே பிரகாசிப்பிக்கிறதற்கும், 
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்" 
இந்த வசனத்தை ஒருமுறைக்கு இரு முறை வாசியுங்கள்! இப்பொழுது புரிந்திருக்கும் என நான் நினைக்கின்றேன்! 
தமிழில், வாய்ப்பு ஒருமுறைதான் கதவைத் தட்டும் என கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்! நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டிய வாய்ப்பை கோட்டை  (தவற)  விட்டு விட்டீர்களானால், இந்த வசனங்களின்படி, நீங்கள் சரியான ஆசீர்வாதங்களைப் பெற்று கொள்ளும்படியாக ஆண்டவர் பலமுறை உங்கள் வாழ்க்கையில் வாய்ப்பைக் கொண்டுவருகிறார்!! எனவே நீங்கள் சென்றுபோன நிகழ்வுகளையே (கோட்டை விட்ட) சிந்தித்துக் கொண்டிராமல், ஆண்டவரால் கொண்டுவரப்படுகின்ற அடுத்தடுத்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! இது உங்கள் வாழ்க்கையில் பலமுறை நடைபெறும்!!!
ஜெபிப்போம்! 
நேற்றும் இன்றும் என்றும் மாறாத எங்கள் பரம  பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. நீர் எங்கள் வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு கடவுளாய் இருக்கின்றபடியால் ஸ்தோத்தரிக்கின்றோம்! இந்த செய்தியை வாசிக்கின்ற அனைத்து சகோதர சகோதரிகளையும் நீர் மேலே வாசித்த சத்தியத்தின்படி, வழிநடத்தி ஆசீர்வதிப்பதற்க்காய் நன்றி! இந்த செய்தியின்படி அநேக சாட்சிகள் எழும்பி உமது நாமத்தை மகிமைப்படுத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் நல்ல பிதாவே. ஆமென், ஆமென். 

17 Feb 2019

YOUR FATHER IN HEAVEN CERTAINLY GIVE GOOD GIFTS TO YOU....

நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
உங்கள் ஜெபம் வல்லமையுள்ளதாக, ஆண்டவரிடம் இருந்து பதிலைப்பெற்றுக் கொள்ளுவதாக மாறும்! 
நமது சீயோன் பங்காளர் ஒருவர் அடிக்கடி இயேசு கூறியதை ஏன் வாக்குத்தத்தமாக போடக்கூடாது? எனக் கேட்பார். ஆண்டவர் இதைச் சொல்லுகின்றாரோ அதுதான் வாக்குத்தத்தமாகும்.  நானே ஆண்டவரே இதை இந்த மாத வாக்குத்தத்தமாக எடுத்துக்கொள்ளுகின்றேன் என ஜெபிப்பது இல்லை. நீண்ட மாதங்களுக்குப் பிறகு, இந்த வருட வாக்குத்தத்தமாக இயேசு தான் சொன்ன பொன்மொழியையே வாக்குத்தத்தமாக கொடுத்திருக்கின்றார். 
"ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:11)
பொல்லாதவர்களாகிய நீங்கள்...... பொல்லாதவன் என்றால் வேதாகம பொருளின்படி கொடியவன், கெடுமதியாளன் இப்படி பொருள் படும். இது சான்றோர் கூறும் வசைச்சொல்லாகும். வேதாகமத்தில் தென்னந் தெரிசலாக ஓரிரு இடங்களில் இந்த சொல் காணக்கிடக்கின்றது. இயேசு கூறிய தாலந்து உவமையில் பொல்லாத ஊழியக்காரனான இவனை புறம்பான இருளிலே தள்ளுங்கள் எனக் கூறுகின்றார். 
மத்தேயு 18:32ல், மன்னிக்காத ஊழியக்காரனைப் பார்த்து பொல்லாதவன் என்று அழைத்தார். (அதுவும் ஒரு உவமைதான்/எடுத்துக்காட்டுதான்) இங்கே ஆண்டவர் உங்களைப்பார்த்து பொல்லாதவர்கள் எனக்கூறுகின்றார். இயேசுவே கூறிவிட்டார், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எண்ணுகின்றார்கள். நான் பொல்லாதவள்(ன்) என்று நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளும்போது, உங்கள் பொல்லாத தன்மை, நீங்கள் சாட்சியாக இருக்கவேண்டிய இடத்தில், அதாவது புறமதஸ்தர் மத்தியில் வெளிப்படுகின்றது. இன்னும் சிலர் மிக மோசமாக நடந்து கொண்டு, இயேசுவே என்னை பொல்லாதவன்(ள்) என கூறி இருக்கிறார் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளுகின்றார்கள்! நற்செய்தியை புறஜாதியாரிடம் என்னைப்போல் அறிவித்தீர்களானால் அப்பொழுது தெரியும், முதலாவது கிறிஸ்தவர்களிடம் போய் சொல்லு என கூறுவதைக் கேட்கும்பொழுது. எவ்வளவு மோசமாக வேத வசனத்தை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்ரீர்கள். இன்னும் சில ஊழியர்களே இதுதான் தாழ்மை என்கின்றனர். இதை எங்கே போய் சொல்ல, சரியான லூசுங்க.....
அதே இடத்தில் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா எனவும் கூறுகின்றார். பிறர் மத்தியில் இயேசுவுக்கு சாட்சியாக நடந்து கொண்ட பின், 'பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் நாமம் மகிமைப்படுகின்றது' என ஆண்டவருக்கு மகிமையை செலுத்தி இருக்கின்றீர்களா? 
நான் என்ன செய்யவேண்டும்? நான் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்வியின் அடிப்படையில் மட்டும் அநேகர் வேதத்தைப் படிக்கிண்றீர்கள். ஆண்டவர் என்ன செய்திருக்கின்றார் என்ற அடிப்படையிலும் வேதத்தைப் படிக்கவேண்டும். வேதத்தைப் படிக்கும்போது சில வசனங்கள் உங்கள் உள்ளத்தில் பயத்தை கொண்டு வருகின்றதா? அதிலேயே நின்று ஆண்டவரை விளக்கித் தரும்படி கேளுங்கள். அந்த பயத்தோடு நீங்கள் அடுத்த வசனத்துக்கு போய்விட்டர்களாகில் வார்த்தையாகிய இயேசுவோடு உங்கள் ஐக்கியம் என்னவாகும்? உங்கள் உள்ளம் வசனத்தோடு சமரசமாய் எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தெரியாதவைகளை சந்திக்கும் போது சற்று பயம் வருவது இயற்கை. எனவே வசனத்தை விளங்கிக்கொண்டால் உள்ளத்திலே சந்தோசம், சமாதானம். 
உங்கள் பரம பிதா........
"அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 
அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனால் பிறந்தவர்கள்" (யோவான் 1:12,13)
தேவ பிள்ளைகள் என்பது அதிகாரம், இந்த அதிகாரத்தை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என ஆண்டவர் எதிர்பார்க்கிறார். ஆண்டவர் தமது சீடர்களே இதை செய்திருக்கலாம், தன்னை எழுப்பினார்கள் என நினைத்த வேத பகுதியை பார்ப்போம். மத்தேயு 8:23-26ஐ பாருங்கள்.
"அவர் படவில் ஏறியபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின் சென்று ஏறினார்கள். அப்பொழுது, (அப்பொழுது என்ற வார்த்தை, அவரோ நித்திரையாய் இருந்தார் என்ற வரிக்கு முன்பு வந்திருக்க வேண்டும்)  படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று அவரோ நித்திரையாய் இருந்தார். அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர் அற்ப விசுவாசிகளே ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அற்ப விசுவாசிகளே என ஆண்டவர் அழைத்ததற்கு காரணம், நீங்களே காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தி இருக்கலாம் என்ற தொனியில் கூறினார்.
ஆண்டவர் தமது உறவின் மூலமாகவே உங்களை ஆசீர்வதிக்க விரும்புகின்றார். என எழுதியதில் இருந்து, சிலர் நான் உபவாச ஜெபத்துக்கு எதிரி என நினைக்கின்றனர். (இதற்கு முந்தய பதிவுகளை பார்க்கவும்) இதை மறுக்கின்றாற்போல ஆண்டவர் இந்த வாக்கைத் தந்திருக்கின்றார். உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?  அதாவது நான் உபவாசித்து ஜெபித்தேன், ஆகையால் ஆண்டவர் என்னை ஆசீர்வதித்தார் என நீங்கள் சாட்சி கூற கேட்டிருப்பீர்கள். அல்லது நீங்களே கூறியிருப்பீர்கள். அதை கேட்கின்றவர்கள், நானும் 10 நாட்கள் உபவாசித்து ஜெபித்தால்தான் ஆண்டவர் கொடுப்பார் என நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது என்பதை இங்கு குறிப்பிடுகின்றேன்.  அது வேதத்துக்கு புறம்பானது. என்னுடைய பரம பிதா என்னை ஆசீர்வதித்திருக்கிறார், தகப்பன், மகன்(ள்) என்ற உறவின் மூலமாகவே ஆசீர்வதிக்கப்பட்டேன் என்பதே மிக உயரிய சாட்சி. உபவாசித்தும் பெற்றுக்கொள்ளலாம், இதை மறுக்கவில்லை. எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தரும் எனக் கேட்டவர்களும் உண்டு, எனது விசுவாசத்தை வர்த்திக்கச் செய்யும் என கேட்டவர்களும் உண்டு!
ஒரு மனிதனுக்கு இரு கைகளை போன்றது, ஜெபமும், வேத வாசிப்பும். இரு கைகளை வைத்து நேர்த்தியாக வேலை செய்ய முடியும். ஆண்டவரோடு உள்ள ஐக்கியத்தை வலுப்படுத்துவதே ஜெபமும் வேத வாசிப்பும்தான். தந்தையும் மகனுமாய் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் பொழுதே உறவு வலுப்படும். உங்கள் ஜெபம் அந்தரங்கத்தில் இருக்கட்டும்; பதில் வெளியரங்கமாய் வரட்டும். 
வேதாகமத்தில் இருவர் தங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை பெற்றுக்கொண்டதை தியானிப்போம். 
"இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஒய்வு நாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையா என்றார்" (லூக்கா 13:16) 
இந்த கூனிக்கு அற்புதம் செய்த கர்த்தர் அவளது ஜெபத்தையோ உபவாசத்தையோ பார்க்காமல் அவளை ஆபிரகாமின் குமாரத்தியாக பார்த்தார். அது ஒன்றுதான் ஆண்டவர் அவளிடம் பார்த்த ஒரே தகுதி. அற்புதம் நிகழ்ந்தது. 
இன்னொரு சம்பவம், லூக்கா 19:9ல், 
"இயேசு அவனை நோக்கி இன்று இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாய் இருக்கிறானே"
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் ஒன்று இருக்கின்றது. அது, இவன் மனந்திரும்பி தனது பாவத்துக்கு பரிகாரம் அறிக்கை செய்த பொழுதே ஆண்டவரால் இவன் வீடு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டது. இவன் கிரியை செய்தபின் அல்ல, மனந்திரும்பியவுடனே ஆசீர்வதிக்கப்பட்டான். அதை போலவே நீங்கள் அந்த இளையகுமாரன் மனந்திரும்பியத்தைப் போல மனந்திரும்பும்போதே ஆசீர்வதிக்கப் படுகிண்றீர்கள். உங்களது கிரியையைப் பார்த்து ஆசீர்வதிக்கவில்லை, (உபவாசம், மற்றும் எந்த கிரியையும் அல்ல) உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவை வைத்து ஆசீர்வதிக்கின்றார். ஆபிரகாமுக்கு உண்டான அத்தனை ஆசீர்வாதங்களும் உங்கள் அனைவருக்கும் உரியது. கலாத்தியர் 3:6-9ல், 
 "அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 
ஆகையால் விசுவாசமார்க்கத்தார் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னதாக கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. 
அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகின்றார்கள்" 
வசனம் 14ல், 
"ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும் படியாகவும், ........."
ஆபிரகாமோடுகூட நீங்களெல்லாரும் ஆண்டவருடைய ஆசீராதங்களுக்கு சுதந்திரவாளிகளாய் இருக்கிண்றீர்கள். எல்லாமே பணம் அல்ல, மனம். ஆண்டவருடைய பார்வையில் உங்களை நீங்களே பாருங்கள், ஆசீர்வதிக்கப்படுவீர்கள். கடைசியாக,
தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளை கொடுப்பது அதிக நிச்சயம் என்று முடிக்காமல், நிச்சயமல்லவா? என்ற கேள்வியோடு முடித்திருக்கின்றார். இதன் அர்த்தம் என்ன? நன்மையானவைகளை கொடுப்பது அதிக நிச்சயம் என்று உங்களிடம் பலமாக, உறுதியுடன் கூறுகின்றார். இதை நீங்கள் உங்கள் மனதில் சொல்லிப்பாருங்கள். இப்பொழுது தெரியும் உறுதியாக கூறுவதை நீங்கள் அனுபவிப்பீர்கள். இதைப்படிக்கின்ற உங்களது ஜெபம், வல்லமையுள்ளதாக, அற்புதங்களை அதிசயங்களைக் கொண்டுவருவதாக இருக்கும். 
மாறாத வசனத்தின் மீது உங்கள் விசுவாசத்தை வைக்கும்போது, உங்கள் விசுவாசம் அசைக்கப்படுவதில்லை. மனிதர்கள் மீது விசுவாசத்தை வைக்கும்போது நீங்கள் ஏமாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. பொதுவாக விசுவாசம் என்பது இயேசு, செய்து முடித்தவைகளில் வைப்பது, நம்பிக்கை என்பது எதிர்காலத்தின் மீது வைப்பது. உங்கள் ஜெபத்தைக் கேட்டு இனிமேல் ஆண்டவர் செய்வார் என்பது நம்பிக்கை. கடைசியாக,
இந்த வசனம் ஆங்கிலத்தில் எப்படி பொருள் கொள்ளுகின்றது என்று பார்த்துவிடுவோம்.💃👍
“And if you hardhearted, sinful men know how to give good gifts to your children, won’t your Father in heaven even more certainly give good gifts to those who ask him for them” Matthew 7:11
இதன் அர்த்தம் என்னவெனில், இதன் முந்தைய வசனங்களை படித்தீர்களானால், இயேசு, ஜெபத்துக்கு ஆண்டவர் பதிலளிப்பார் என்றும், நீங்கள் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை அப்படியே கொடுப்பார் எனக் கூறி, (இப்பொழுது ஆங்கில வசனத்தின் மொழிபெயர்ப்பு அல்ல, விளக்கம்...) ஒருவேளை நான் கூறுவதை ஏற்க மறுக்கின்ற கடின மனத்துடையவர்களாய் நீங்கள் இருந்தால், ஒரு பாவம் செய்கிற மனுஷன் (ஒரு அவிசுவாசி) தனது பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை எப்படி கொடுக்க வேண்டும் என்று அறிந்திருக்கின்றானே, பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பரம பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகின்ற உங்களுக்கு நன்மையான ஈவுகளை கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?
ஜெபிப்போம்! ஜெயம் பெறுவோம்!!
அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உங்களிடத்தில் வருகின்றோம், இந்த உமது நாமத்தின் மேல் விசுவாசம் என்னை மகனாக / மகளாக தெரிந்து கொண்டிருப்பதற்காய் நன்றி! இந்த அருமையான உறவுக்காய் நன்றி!! எவ்வளவு மகிமையான உறவை எங்களோடு நீர் ஏற்படுத்தி இருக்கிறீர்! உம்மை அறியாதிருந்த நிலையிலும் இயேசுவை எங்களுக்காக சிலுவையில் பலியாக்கினீரே நன்றி!!! எங்களிடம் பொறுமையாய் இருந்ததற்காய் நன்றி!! உற்சாக மனத்தோடுகூட உமது வேலைகளை செய்யவும், சாட்சியின் மூலமாக இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்த கிருபை செய்யும். வியாதிப்பட்டவர்களுக்காக ஜெபிக்கின்றேன்! இப்பொழுதே உமது காயங்கள் சுகமாக்குவதற்காய் நன்றி! குறைவுகளை நிறைவாக்கும். பலமும் அல்ல, பராக்கிரமம் அல்ல, உம்முடைய ஆவியினாலே ஆவதற்காய் நன்றி! எங்கள் தேசத்திலே எழுப்புதலைக் கட்டளையிடுவதற்காய் நன்றி! வயல் நிலங்கள் அறுப்புக்கு விளைந்திருப்பதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் கர்த்தாவே. ஆமென், ஆமென். 

17 Jan 2019

POWER OF GOD

அன்பு நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு வாரமும் ஓர் பதிவை இடலாம் என எண்ணி, இப்பொழுது தொடர்ந்து 3 வாரங்களாக பதிவிடுகின்றேன்! உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைத்தளத்தை அறிமுகம் செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!
தேவ வல்லமை 
ஜோனி என்ற இளம் பெண்ணுக்கு நீச்சல் என்றால் கொள்ளை பிரியம். நீரில் குதிப்பது என்பது அவளுக்கு மிக மிக விருப்பம். தனது வீட்டருகே இருந்த நீச்சல் குளத்தில் அவள் நீச்சல் மற்றும் டைவ் அடித்தல் என கற்றுக்கொண்டாள். தான் ஒரு நல்ல டைவ் அடிக்கும் வீராங்கனையாக வரவேண்டும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்க வேண்டும் என மிகுந்த விருப்பமுடையவளாக அவள் இருந்தாள்.
ஒரு நாள் சில நண்பர்களோடு வெளியூர் சென்றாள். அந்த ஊரில் இருந்த கடற்கரைக்கு சென்றாள். அங்கே இருந்த சூழ்நிலை கடலில் நீச்சலடிக்க வேண்டும் என்ற வாஞ்சை வந்தது. புதிய இடம். தண்ணீருக்குள் எங்கே என்ன இருக்கிறது எனத் தெரியாது. நண்பர்கள் அனைவரும் கடலுக்குள் இறங்கவே, இவளும் நண்பர்களோடு நீச்சல் அடித்தாள். மிகுந்த உற்சாகமாய் இருந்தது. அருகில் இருந்த ஒரு பாறையில் ஏறி கடலுக்குள் டைவ் அடித்தாள். அவ்வளவுதான், அவள் டைவ் அடித்த இடத்தில் கடல் ஆழம் குறைவாய் இருந்தபடியால், அவளுடைய தலை தரையில் மோதியது. அவளது முதுகு தண்டுவட நரம்பு பழுதாகி, அவளது எஞ்சிய காலம் முழுவதையும் சக்கர நாற்காலியில் கழிக்கச் செய்தது. அவள் மிகுந்த மனசோர்வும், கோபமும் கொண்டாள். அவளுடைய கோபம் முழுக்க தேவன் மீதுதான்
"கடவுளே ஏன் எனக்கு இதைச் செய்தீர்? எனக்காக நீர் என்ன செய்திருக்கின்ரீர்? என ஜெபித்தாள். ஆண்டவர் அவளை ஆயுள் காலம் முழுவதும் சுகமாக்க வில்லை என்றாலும், வேதவாசிப்பிலும், ஜெபத்திலும் ஈடுபட்டாள். எனவே ஆவிக்குரிய பிரகாரமாக வளர்ந்தாள். 
இவ்வாறு தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள், "எனக்கு வேறு வாய்ப்பு இல்லாததால், நிலைமையை ஏற்றுக் கொள்ளுதல், நம்பிக்கை கொள்ளுதல் மேலும் அர்ப்பணித்தல் இவைகளின் மூலமாக, உணர்வு பூர்வமான விடுதலையை கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து, பெற்றுக் கொள்ளுகிறேன், பெற்றுக்கொண்டாள்.    
லூக்கா 1:26-38 வரை உள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள்! இதில் இன்னொரு இளம் பெண்ணைப் பார்க்கின்றோம். இவளும் ஏற்றுக் கொண்டாள், நம்பிக்கை வைத்தாள், தேவனுக்கு ஒப்புக்கொடுத்தாள். இவளுடைய வாழ்க்கையை கர்த்தர் முன்னுக்கு கொண்டுவந்தார்.
1. தேவ செயலுக்கு, மரியாளின் எதிர் விளைவு, ஜொனியின் எதிர்விளைவோடு ஒத்துப்போகிறதா? அல்லது போகவில்லையா?
2. நீங்கள் எந்த குறிப்பிட்ட வழிகளில் தேவ வல்லமை உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என விரும்புகிண்றீர்கள்?
கவனத்தில் கொள்ளுங்கள்:
லூக்கா 1:26-38 பகுதியில் உங்களோடு பேசும் அடிக்கோடிடவும், மனனம் செய்யவும். 
ஆண்டவரின் வரையறையில்லாத வல்லமையை அறிந்து கொள்ளுவதற்கு உதவியைக் கேளுங்கள். அவர் தெரிந்தெடுக்கும் வழி முறைகளை பயன்படுத்தவும், அல்லது பயன்படுத்தாதிருக்கவும் இயேசுவை கேளுங்கள்.
மேலும் படியுங்கள்: சங்கீதம் 31:14-24 (பக்கம் 687); யாக்கோபு 1:1-5 (பக்கம் 313); 2 கொரிந்தியர் 12:7-10 (பக்கம் 225)
ஜெபிப்போம்!
அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம், எந்த 
சூழ்நிலையிலும் உமது அன்பு எங்கள் ஒவொருவரையும் வழி நடத்துவதற்காய் நன்றி! தேவ திட்டம் எங்கள் வாழ்நாளில் நிறைவேறுவதற்காய் நன்றி! எங்கள் வாழ்க்கையில் அநேகரை நீதிக்குட்படுத்த வழி நடத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் பிதாவே. ஆமென், ஆமென். 

8 Jan 2019

GOD: YOU ARE AFTER MY HEART

நண்பர்கள் யாவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே  வாழ்த்துகின்றேன்.....
".......ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்கு சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக் குறித்து சாட்சியும் கொடுத்தார்" (அப்.13:22)
இந்த வசனத்தினாலே உங்களை ஆசீர்வதிக்க பிதாவாகிய தேவன் சித்தமானார்! 
நற்செய்தியாளருக்கான ஒரு கூட்டத்திலே, ஆண்டவர் ஏன் சவுலைத் தள்ளி தாவீதை அரசனாக தெரிந்து கொண்டார்? என கேட்கப்பட்டது. ஒருவர் தாவீதை என் இதயத்துக்கு ஏற்றவன் என கர்த்தர் சொன்னார் என்று கூறினார். உடனே அருகில் இருந்தவர், அது அவன் பாவத்தில் விழுவதற்கு முன்னாக கூறினார். இவர்களின் உரையாடலை கெட்ட பொழுது, பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளே கிரியை செய்வதை உணர்ந்தேன். அதனுடைய விளைவுதான் இந்த செய்தி. இதன் மூலமாக உங்கள் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படும். முதலாவது,
"பொய் சொல்ல தேவன் ஒரு மனிதனல்ல; மனம் மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல;...." (எண். 23:19)
இந்த வசனத்தின் பிற்பகுதியை எடுத்துக்கொண்டோமானால், மனம் மாற அவர் மனிதன் அல்ல. அதாவது ஒன்றை சொல்லிவிட்டு, 'இத தப்பா சொல்லிவிட்டேன், இதை மாத்து' என கூறுகின்ற தேவன் அல்ல. அவர் சொன்னால் சொன்னதுதான். அவருடைய கூற்று, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றுக்கும் பொருந்தும். எப்படி உங்களை தனது பிள்ளைகளாக்கி அதிகாரத்தையும் கொடுத்தாரோ, அதைப்போல மாறாததுதான் இதுவும். ஆண்டவருடைய இருதயத்துக்கு ஏற்றவன் பாவம் செய்துவிட்டான். 
பாவம் செய்வதிலும் மிக மோசமான நிலைமை என்னவென்றால் செய்த குற்றம் உணர்த்தப்படும் போது, நான் செய்தது சரிதான் என வாதாடுவதுதான். இங்கே நாத்தான் என்ற தீர்க்கதரிசியை ஆண்டவர் அனுப்பினார். இந்த சம்பவம் 2சாமுவேல் 12:1-12 வரை காணக் கிடக்கின்றது. பாவத்தை உணர்த்தி தண்டனையையும் உடனே வழங்கினார். ஒருவருடைய பாவம் உணர்த்தப்படும்போது அவருடைய எதிர் செயல் என்ன என்று பார்த்தோமானால் நலமாயிருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் என்ன? உங்கள் தவறுகளை, குற்றங்களை ஆண்டவர் உணர்த்தும் போது, அதை நீதிகரித்துக் கொண்டு இருக்கிண்றீர்களோ! அது பாவம் செய்ததைக் காட்டிலும் மோசமான நிலைமையில் இருக்கின்றீர்கள் என பொருள். தாவீதின் எதிர் செயல் என்ன? 2சாமு. 12:13ல், 
"அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில் நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என்றான்"
இந்த இடத்தில் நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயம் என்னவெனில், பாவம் உணர்த்தப்படும் போது, நான் ஆண்டவருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என உள்ளத்தில் நினைக்கும் போதுதான் அது உண்மையான மனந்திரும்புதலாக இருக்கும். இங்கே தாவீது நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என்றான். (செய்த குற்றத்துக்கு மனம் வருந்துவது, இந்த உலகத்தில் பிறந்த எல்லோரும் செய்வதுதான். ஆனால் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என்று உள்ளத்தில் நினைக்கும்போதுதான் அவனது மனந்திரும்புதல் ஆரம்பமாகி, இயேசுவின் இரத்தத்தினால் உள்ளம் கழுவப்படுவதில் முடிகின்றது). 1யோவான் 1:7-9 வரை வாசித்துப் பாருங்கள். சாக்லேட் என்று சொன்னால், வாய் இனிக்காது. அதை தின்ன வேண்டும். அப்பொழுதுதான் ருசி என்னவென்று அறிந்து கொள்ள முடியும். மேலே உள்ள வசனங்களை வாசித்து கீழ்ப்படிந்தால், பலன்: பாவமன்னிப்பின் நிச்சயம், அதினால் வருகின்ற சமாதானம், மகிழ்ச்சி இதற்க்கு ஈடு இணையே இல்லை, இது கிறிஸ்தவர்கள் மட்டுமே அனுபவிக்கும் பேராசீர்வாதமாகும். சங்கீதம் 51ல், தாவீது கண்ணீர்விட்டு கதறுகின்றான். 
இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழுகின்ற உங்களுக்கு, மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. அது என்னவெனில் இயேசு கிறிஸ்துவின் பாடும் மரணமும். பாவம் செய்தது நீங்கள், அடிவாங்கியது/பலியானது (தண்டனை வாங்கியது) எல்லாம் இயேசுகிறிஸ்து. பழைய ஏற்பாடு காலத்தில் நீங்கள் பாவ நிவாரண பலியிட வேண்டும். இப்பொழுதோ இயேசு உங்களுக்காக பலியாகி இருக்கின்றார். மகன்/மகள் என்ற உறவை ஏற்படுத்தி இருக்கிறார். உபவாசம் இருந்தாவது, பத்சேபாளுக்கும் தனக்கும் பிறந்த குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என முயற்சித்ததுதான். தாவீதுக்கு கொடுத்த தண்டனையைப் போல உங்களுக்கும் கொடுத்துவிட்டார் என நீங்கள் நினைத்தீர்களானால், உங்களைப் போல ஒரு முட்டாள் இருக்க மாட்டார்கள். 
இப்படிப்பட்டவனாக தாவீது இருப்பான் என்று முக்காலத்தையும் அறிந்த கர்த்தருக்கு நன்கு தெரியும். தாவீதைப்போல நீங்களும் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்பீர்களானால், உங்களையும் எனது இருதயத்துக்கு ஏற்றவன்/ஏற்றவள் என்று ஆண்டவர் கூறுவார்.  

தாவீது இன்னும் எப்படி கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்றவனாக இருந்தான்? இந்த பகுதி உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். அது 1சாமு. 26:11ல், 
"நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மேல் போடாதபடிக்கு கர்த்தர் என்னை காக்கக் கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்....." 
சவுல் இஸ்ரவேலின் இராணுவத்தைக் கொண்டு தாவீதை வேட்டையாடியதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது தாவீதுக்கு ஒரு வாய்ப்பு. தூங்கிக்கொண்டிருந்த சவுலை கொல்லுவதற்கு வாய்ப்பு வந்த பொழுது, தாவீது மேற்கண்டவாறு கூறுகின்றான். கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவரை நான் கொல்லுவதில்லை என தனக்கு வந்த வாய்ப்பை மறுத்தான். எதிரியாக இருந்தாலும், கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் என்றான். கர்த்தரை கனம் பண்ணி தனக்கு வந்த வாய்ப்பை மறுத்தான். இன்று உங்கள் நிலைமை எப்படி இருக்கிறது? கிறிஸ்தவ ஊழியரைக் குறித்து உங்கள் நிலைமை என்ன? எஜமான் தன் அறுப்புக்கு கூலியாட்களை அனுப்புங்கள் என்று ஜெபித்துக்கொண்டே, அருகில் இருக்கும் ஊழியரோடு உங்கள் ஐக்கியம் எப்படி இருக்கிறது? ஊழியரின் நடவடிக்கை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீங்கள் விலகி இருப்பது நல்லது. பொதுவாக ஊழியருக்காக ஜெபித்தீர்கள் எனில் ஊழியரிடம் இருக்கும் குற்றம், குறைவுகளைப் பார்க்காமல், நல்ல விடயங்களை பார்த்து, ஆண்டவருக்கு மகிமையை செலுத்துவீர்கள். இன்னும் சொல்லப்போனால், விசுவாசிகள் அனைவருமே அபிஷேகம் பெற்றவர்கள்தாம். எனவே பிற விசுவாசிகளுக்கு விரோதமாக (பரிசுத்தவான்களுக்கு) விரோதமாக செயல்படாதிருங்கள்! பிற விசுவாசிகளில் குற்றம் காணும்போது என் வழி இயேசு வழி எனக் கூறி, போய்க்கொண்டே இருங்கள்! ஆண்டவருடைய இருதயத்துக்கு ஏற்றவராக இருப்பீர்கள்! 
சீமேயியின் விடயத்தில், 2சாமு. 16:5-13 வரை வாசித்துப்பாருங்கள்! அப்சலோமிடம் ராஜ்ய பாரத்தை இழந்து, மிகவும் சோர்ந்து போய் தனது மக்களோடு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, சீமேயி என்பவன் கெட்டவார்த்தைகளால் தாவீதை திட்டி, கற்களை எரிந்து அவமானப்படுத்தினான். தாவீது பொறுத்துக்கொண்டான். 2சாமு.19:14ல், மீண்டும் ராஜாவாக திரும்பி வருகின்றான். இப்போது முன்பு தூஷித்த சீமேயி தாவீதுக்கு முன்பாக போய் தாழ விழுந்து, மன்னிப்பு கேட்கின்றான். (வசனம் 18-20) "அப்பொழுது செரூயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்திரமாக: கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை  அதற்காகக் கொல்ல வேண்டாமா? என்றான். (2சாமு. 19:21) தாவீது, சவுலைக் குறித்து கூறிய அதே வார்த்தைகளை உபயோகித்து கேட்கிறான். இப்பொழுது அதிகாரம் கையிலே..... தூஷித்தவன் தரையிலே...... இப்பொழுது தாவீது அவனை மனதார மன்னித்தான். எனக்கான நண்பர்களே நீங்கள் மன்னிக்கும் போது, பிதாவாகிய தேவனால் மன்னிக்கப்படுகிண்றீர்கள்! என்பதே விடயம். மேலும் நீங்கள் சந்திக்கின்ற எந்தப் பிரச்சனையானாலும், அதை ஆண்டவர் தம் கையில் எடுத்து, உங்களுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! அடுத்து தாவீதின் விசுவாச அறிக்கை: 
பெலிஸ்தியர்கள், இஸ்ரவேலுக்கு விரோதமாக படையெடுத்து வந்தபோது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீது என்ற இளைஞன் பட்டாளத்தில் பணி புரியும் தனது அண்ணன்மாரை பார்க்க வந்தபொழுது, யுத்த களத்தின் முன்னணியில் கூறிய வார்த்தைகள்தான் இது. "கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார் என்றான்" (1சாமு.17:47) மற்றவர்கள் தாவீதை அதைரியப் படுத்திய பொழுது, பயமுறுத்திய பொழுது அவன் தனது முந்தைய அனுபவங்களை (சிங்கம், கரடியைக் கொன்ற நிகழ்வு) அவர்களுக்கு தெரியப்படுத்தினான். கர்த்தர் தனக்கு வெற்றியை தருவார் என்று விசுவாசித்தான், வெற்றி சிறந்தான்! என் அன்பு நண்பர்களே, ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் இந்த சத்தியங்களின்படி உயர்த்தி ஆசீர்வதிப்பாராக. 
ஜெபிப்போம்! 
அப்பா பிதாவே, இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம். இப்பொழுதும் உமது வாக்குத்தத்தங்கள் அனைத்தும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஆம், என்றும் ஆமென் என்றுமிருப்பதால் நன்றி! வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகளோ அழிந்து போகாது என்று சொன்ன வாக்குக்காய் நன்றி! இதன் மூலம் எங்களை தொடர்ந்து நடத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் பிதாவே. ஆமென், ஆமென். 
பின் குறிப்பு: இந்த வலைத்தளத்தை உங்கள் பிற நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்! வாரந்தோறும் ஒரு பதிவையாவது செய்யவேண்டும் என நினைக்கின்றேன்! நன்றி!!