30 Sept 2014

TWO CHARACTERS

இரண்டு குணங்கள்

ஆவியின் கனி .................................மாம்சத்தின் கிரியைகள்

1. அன்பு ............................................... வெறுப்பு, சுயநலம், பொறாமை, கோபதாபம்
 
2. சந்தோஷம்...........................................................வருத்தம், மனக்கலக்கம், சோர்வு
                          
3. சமாதானம் ..........................................கவலை ,பயம், கலகம், மோதல், பதட்டம்.
 
4. நீடிய பொறுமை..................................................ஆத்திரம், படபடப்பு, முன்கோபம் 
 
5. தயவு.............................குரூரம், போக்கிரித்தனம், கடினமனம், முரட்டுத்தனம்
 
6. நற்குணம்..............தீமை, கொடுமை, ஒழுக்கக்கேடு, கஞ்சதனம், பேராசை  
 
7.விசுவாசம்.............................. கவனமின்மை, நேர்மையற்ற, திரித்துகூறல்,       
                                                           
                                                                                                                      நம்பகதன்மையற்ற 
 
 8. சாந்தம்...........................................................பெருமை, எதையும் நியாயந்தீர்த்தல் 
 
9.இச்சையடக்கம்................................................................................ஒழுக்கமற்றநடத்தை,
 
                                                                                       விதியை மீறுதல்,  கட்டுப்பாடற்ற.
 
 
 
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! பிறருக்கு நன்மை பயக்கும்படி உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடும்படி வேண்டுகின்றேன்! 

16 Sept 2014

FAITH CONFESSION

விசுவாச அறிக்கை
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். என் பொருளாலும், என் எல்லா விளைவின் முதற்பலனாலும் (மிக சிறந்தவற்றாலும்) கர்த்தரைக் கனம் பண்ணுவேன். அப்பொழுது என் களஞ்சியங்கள் பூரனமாக நிரம்பும், என் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். என் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படும். என் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கிறேன். அவரே காரியத்தை எனக்கு வாய்க்கப் பண்ணுவார்.
வர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தை நினைத்திருக்கிறார். கர்த்தர் எனக்கு ஞானத்தை அருளுகிறார், புத்தியையும் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுகின்றேன். கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும், உற்ச்சாகமாக கொடுக்கிற என்னிடத்தில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். நான் ஆசீர்வதிக்கப் பட்டவன், பெரிய காரியங்களை செய்வேன்.
ன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். கர்த்தரைத் தேடுகிற எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. என் தேவன் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி எங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும். நான் மனத்தாழ்மையாயும், கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடும் நடப்பதால், அதன் அதன் பலனாக ஐசுவரியத்தையும், மகிமையையும், ஜீவனையும் பெற்றுக் கொள்ளுகின்றேன். கர்த்தரின் ஆசீர்வாதமே எனக்கு ஐசுவரியத்தைத் தருகிறது. ஏழைகளுக்கு இறங்குகிற எனக்கு கர்த்தர் திரும்பக் கொடுப்பார்.
(மேலே உள்ள அறிக்கை, இந்த வேத வசனங்களில் இருந்து எடுக்கப்பட்டது. நீதி. 3:9,10; சங்கீதம் 37:5; 105:42; லூக்கா 6:38;  நீதி. 2:6; 1சாமு.26:25; பிலி.4:13; சங்கீதம் 23:1; 34:10 பிலி. 4:19; சங்கீதம் 23:5,6; நீதி. 22:4; 10:22; 19:17)

இயேசுவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!

 
விசுவாசத்தை அறிக்கை செய்வோம் ஆண்டவரின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவோம்!

10 Sept 2014

FORGIVENESS

மன்னிப்பு (மத்தேயு 18:21-35)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
ந்த பதிவை படிக்குமுன் உங்கள் வேதாகமத்தை பக்கத்திலே வைத்துக் கொண்டு, மேலே உள்ள வசனங்களை ஒருமுறைக்கு நான்குமுறை படித்துக் கொள்ளுவது நலம். ஏனெனில், அப்பொழுதுதான் உங்களுக்கு நன்கு புரியும்.
முதலாவது வசனம் 21ல் அப்போஸ்தலர் பேதுரு எத்தனை தடவை மன்னிப்பது என்ற கேள்வியைக் கேட்கின்றார், "ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய் குற்றஞ் செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்?".....
ன்னிப்பு என்பது மனித தன்மையின் உயரிய பண்பு. ஏனெனில் இது கடவுளைப் பிரதிபலிக்கின்றது. தேவன் நம்மை இலவசமாகவே மன்னிக்கின்றார். மேலும் நாம் பிறரை சீக்கிரமாகவே மன்னிக்கவும் எதிர்பார்க்கின்றார். இயேசு கிறிஸ்தவ மனதுருக்கம் மீண்டும், மீண்டும்......., ............., ..............., மீண்டும் மீண்டும் மன்னிக்கும் என போதித்தார்.
சனம் 23-35ல், இயேசு கிறிஸ்து ஒரு ஈவிரக்கமற்ற ஒரு வேலைக்காரனைப் பற்றிய ஓர் உவமையைக் கூறுகின்றார். ஒருமனிதன் ஒரு அரசனிடம் கடன் (இன்றைய மதிப்பின்படி ரூ. 7,32,00,000/-) பட்டிருந்தான். அரசன் உடனே கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நெருக்கியபோது, கடன் வாங்கியவன் இரக்கத்துக்காக் கெஞ்சினான். அவன் கெஞ்சிக் கேட்டதையடுத்து, அரசன் அவன் கடன் முழுவதையும் மன்னித்து அனுப்பிவிட்டான். ஆனால் இந்தக் கடன்காரன், (7,32,00,000/- ரூபாய் மன்னிக்கப்பட்டவன்) தன்னிடம் ரூ.1220/- கடன் வாங்கியவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து, நீ பட்ட கடனை எனக்கு உடனே கொடுத்துத் தீர்க்க வேண்டும் என்றான். அப்பொழுது அவன், இவன் காலில் விழுந்து, என்னிடத்தில் பொறுமையாய் இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்கின்றேன், என்று அவனை வேண்டிக் கொண்டான். இவனோ சம்மதியாமல் போய், அவன் பட்ட கடனைக் கொடுத்து தீர்குமட்டும், அவனைக் காவலில் போடுவித்தான்.
யேசு மிகச் சரியாக 'மன்னிக்காத தன்மை'யைக் கண்டித்தார். நமது பரலோக தேவனிடம் நாமனைவருமே எல்லையில்லா மன்னிப்பைப் பெற்றவர்கள். நமக்கு விரோதமாக செய்யப் படும் சின்ன குற்றங்களைக்கூட வேகமாக மன்னிக்க வேண்டும்.இந்தப் பகுதியில் (மத்தேயு 18ன் பிற்பகுதியில்) உண்மையான மன்னிப்பைப் பற்றி நாம் கற்றுக் கொள்ளுகின்றோம்.
1. உண்மையான மன்னிப்புக்கு எல்லை இல்லை: (18:21,22) நாம் ஏழு தரம் மாத்திரமல்ல, ஏழு எழுபது தரம் மன்னிக்க வேண்டும். யூதர்கள் மூன்று முறை மட்டுமே மன்னித்தனர். யூத மத போதகர்கள், 'ஒருவன் ஒருமுறை குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு, இரண்டாம் முறை குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு, மூன்றாம் முறையும் குற்றஞ் செய்தால் மன்னித்துவிடு. நான்காம் முறை குற்றஞ் செய்தால் மன்னிக்காதே' என போதித்தனர். இங்கே பேதுரு யூத முறைமையைக்காட்டிலும் மேலும் நான்கு முறையைச் சேர்த்து ஏழு தரம் குற்றஞ் செய்தால்.............' எனக் கேட்கின்றார். இங்கே இயேசு கூறுகின்றார், :மன்னிப்புக்கு எல்லையே கிடையாது' ஒரே மனிதன் மீண்டும் மீண்டும் குற்றமிழைத்தாலும் ஏழு எழுபது முறை (நானூற்று தொண்ணூறு முறை) நாம் மன்னிக்க வேண்டும். மன்னித்தல் என்பது நிலையான அடிப்படையாய் இருக்க வேண்டும்.
2. நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவனை நாம் மன்னிக்கும் போது நாம் நம்முடைய பெருந்தன்மையைக் காட்டுகின்றோம்: தேவன் நமது பாவம் என்ற கடனை  நமக்கு  மன்னித்திருக்கிறபடியால், (நமது "கடவுளிடம் மனந்திரும்புங்கள்" என்ற கைப்பிரதியில் நாம் ஒருவருக்கு விரோதமாக குற்றஞ் செய்தால் அது படைத்த கடவுளுக்கு விரோதமாகவும் குற்றஞ் செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளோம்) நாமும் நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவர்களை மன்னிக்க வேண்டும். தேவன் நம்மை மன்னித்ததைப் போல நாம் மன்னிக்க வேண்டும். எபேசியர் 4:32 சொல்லுகிறது.
"ஒருவருக்கொருவர் தயவாயும் மனதுருக்கமாயுமிருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்"
ன்னிப்பு என்னும் விலைக் கிரையம், நம்மைத் தவறாக நடத்தியவர்களிடம் முரட்டுத்தனமாயும், மன்னிக்க மறுக்கும் தன்மையையும் உடையவர்களாய் இருப்பதிலிருந்து, நம்மை விழிப்புடையவர்களாக்குகிறது.
3. மன்னிக்காத தன்மை, மிகக் கடுமையான பின் விளைவுகளைக் கொண்டுவரும்: (18:34,35) மத்தேயு 6:15ல், 
இயேசு, "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால் உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" என்றார்.
நீங்கள் இதை மிக எளிதாக எடுத்துக் கொள்ளமுடியும், ஆனால் நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவர்களை மன்னிக்காவிடில், ஆண்டவருடைய தீர்ப்பு மேலிரங்கும். அது 'மனிதனை' குறை சொல்ல முடியாதபடி இருக்கும்.
நம்மில் ஒவொருவரும் கடவுளுக்குக் கடன்பட்டிருக்கிறோம். நாம் மனந்திரும்பும் போது அவர் மன்னிக்கிறார். ஒரே ஒரு நிபந்தனை........... நாம், நமக்கு விரோதமாக குற்றஞ் செய்தவர்களை மன்னிக்கும் போது மட்டுமே. 
ண்டவரை அறியாத மக்கள், கிறிஸ்தவர்களைப் பார்த்துக் கூறும் ஒரு குறை என்னவென்றால்,  'என்ன தப்புப் பண்ணியிருந்தாலும் இயேசுகிட்ட போய்.... என்ன மன்னியும்..... என்ன மன்னியும்.... அப்படீன்னு சொல்லி மன்னிப்புக் கேட்பீங்க... அவரும் மன்னிச்சுறுவாரு..... தப்புப் பண்ணீட்டு........ தப்புப் பண்ணீட்டு மன்னிப்புக் கேட்ருவீ ங்க....  அவரும் எத்தனை தடவைனாலும் மன்னிப்பாரு....... எங்களுக்கெல்லாம் அது தெரியாது....  நாங்க தப்பே செய்யாமல் வாழத்தான் முயற்சிக்கிறோம்". 
ன்னிப்பதற்கும் ஆண்டவர் ஒரு நிபந்தனை வைத்திருக்கின்றார் என்பதை அறியாமல் கூறுவார்கள். நாம் அடுத்தவர்கள் மீது எரிச்சலுடனும் பொறாமையுடனும், கசப்புடனும், பழிவாங்கும் உணர்வுடன் இருந்தால், சமாதானத்தை உண்டுபண்னும்படியான நடவடிக்கைகளை உடனே நாம் மேற்கொள்ளவேண்டும்.
ணமையாகவே மன்னிக்கப் பட்ட மனிதன், நான் இப்படிப்பட்ட குற்றஞ் செய்துவிட்டேனே என்று அதையே நினைத்துக் கொண்டு அதிலேயே இருக்க மறுக்க வேண்டும். ஆனால், சில வேளைகளில் நினைவுக்குவரும், அதை தடுக்க முடியாது. "மன்னித்து மறந்துவிடு" என நாம் கூற முடியும். அப்படிப் பட்ட வாசகம் வேதாகமத்திலே எங்கும் இல்லை.  ஒரு காரியம் மன்னிக்கப் பட்டதானால், நாம் அதையே நினைத்துக் கொண்டு அதிலேயே தங்கிவிடக் கூடாது. அப்படி இருந்தால் அது மறக்க முடியாத தளும்பாக மாறிவிடும். இதிலே கவனம் தேவை. 
ன்னிப்பு என்பது  பாவம் நிறைந்த குற்றத்தை மறைக்க சாக்குப் போக்கு சொல்லுவதில்லை. நான் மற்றவரை மன்னிக்கிறேன் என்றால், நான் அந்த மனிதர் செய்த பாவத்தை தட்டிக் கழிப்பது ஆகாது. பாவம் எப்போதுமே பாவந்தான். மேலும் உண்மை அன்பு பாவத் தன்மையை எப்பொழுதுமே குறைக்க முயற்சிக்காது. குற்றஞ் செய்தவன் மனந்திரும்பும்படியாய் விட்டுவிடும். ஆனால் மனிப்பு என்பது கசப்பு, கோபம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தல் ஆகியவைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். மேலும் நமக்கு விரோதமாக செய்யப்பட்ட பாவத்தை அனுசரித்து செல்லும். 
இங்கே எனது ஜெபமெல்லாம், ஆண்டவர் இதைப் படிக்கின்ற அன்பு சகோதர சகோதரிகளின் இருதயத்தில் மன்னிப்பு என்னும் நீரூற்றைத் திறக்கும் படியாகவும், நம்மில் ஒவொருவரும் மேலும் மேலும் மன்னிப்பின் ஆவியால் நிறைந்திருக்க வேண்டும் என்பதே. மத்தேயு 18ல் இயேசு கிறிஸ்து 'மனத்தாழ்மை, மனதுருக்கம், மன்னிப்பு' இவைகளைக் குறித்து போதிக்கின்றார்.  
   
இயேசு கிறிஸ்து உங்களை அளவில்லாமல் நேசிக்கின்றார்!
 பின் குறிப்பு: கிறிஸ்துவில் பிரியமானவர்களே! 'மனத்தாழ்மை, மனதுருக்கம், மன்னிப்பு' என்ற தலைப்பில்  சிறிய புத்தகமாக வெளியிடலாம் என நான் ஆலோசிக்கின்றேன்! ஆண்டவருடைய போதனைகள், சுவிஷேசமாக மக்களை சென்றடைய வேண்டுமெனில், ஜெபியுங்கள்!! தாராளமாக கொடுங்கள்! இதனால் வரும் பலன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சேரும்!!
நமது வங்கிக் கணக்கு: 
Zion Revival Ministries,
Indian Bank Otteri Branch,
A/c No: 441176777
IFS Code: IDIB 000O0004
நன்றி!