16 Aug 2020

DO YOU KNOW ONE THING?


உங்களுக்கு ஒன்று தெரியுமா?

கிறிஸ்துவில் அன்பான நண்பர்கள் யாவரையும் வாழ்த்துகின்றேன்! மேலே உள்ள தலைப்பில் ஒரு முக்கியமான விடயத்தைப் பகிற்ந்து கொள்ளுகின்றேன்!!

"எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்" (லூக்கா 16:13)

அறிந்தோ அறியாமலோ எல்லாக் காலத்திலும் பணத்துக்கு, உடைமைகளுக்கு எல்லாவற்றைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் மக்களிடையே இருந்திருக்கின்றது. அதனாலேதான் கர்த்தர் மேலே உள்ள வசனத்தைக் கூறியுள்ளார். (தமிழில் கூட 'காசேதான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா' எனப் பாடிவைத்தான். ஆனால் இந்தப் பாடல், பைபிள் வசனத்துக்கு முறன்பாடானது, கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.)

எனவேதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்து பேசியதை விட, பணத்தைக் குறித்து அதிகம் பேசியுள்ளார். பாதுகாப்பைக் குறித்து பேசும்போது, ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவி, ஊழியக்காரர்களின் செயல்பாட்டைக் கூறும்போது, ஐந்து தாலந்து, இரண்டு தாலந்து, ஒரு தாலந்து எனப் பணத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசினார். மேலும் பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்து பேசும்பொழுது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன், நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டவன் எனப் பேசினார். பல்வேறு விடயங்களை, பேசும்போது பணத்தை ஒப்பிட்டுப் பேசினார். காரணம் மக்கள் பணத்தின் மீது ஈர்ப்புடன் இருக்கின்றார்கள் என்பதுதான்.

பணம் பாதாளம் வரைப் பாயும் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பணம் நித்தியமான வீடுகள்வரை ஏறும். 

இதைஎல்லாம் வாசிக்கும்போது, நீங்கள் பண ஆசையுள்ளவர்களாக இருங்கள் என நான் வற்புறுத்துவதைப் போன்றிருக்கும். விரிவாக விளக்கம் தேவை எனில் ஐசுவரியம் VS பண‍ஆசை என்ற ரூபாய் 10 மதிப்புள்ள புத்தகத்தைக் கேட்டு எனக்கு எழுதுங்கள். கீழே விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றேன்! லூக்கா16:9ல்,

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக்கா16:9)

நீங்கள் மரித்து அல்லது மறுரூபமாகி பரலோகத்திற்குச் செல்லும்போது, உங்களை நித்தியமான வீடுகளுக்கு வரவேற்க இங்கே உங்கள் செல்வத்தினால் நண்பர்களைச் சம்பாதியுங்கள். பிரதர்! சிஸ்டர்!! நீங்கள் போதும் என்ற மனதுடனே கூடிய தெய்வ பக்தியிலேயே வாழ்ந்துவிட்டேன், எனவே ஊழியத்திலே விதைக்கவில்லே, நண்பர்களைச் சம்பாதிக்கவில்லை என்று சொல்லுவீர்களாகில், உங்களை வரவேற்க நண்பர்கள் என்று யாரும் நித்தியமான வீடுகளிலே இருக்கமாட்டார்கள்! எனக்குப் பரலோகம் போனாலே போதும் புரோ! அந்த அளவிற்கு பரலோகத்தை சபைகள் பூட்டி வைத்திருக்கின்றன என அறிகின்றேன். இயேசு என்னை வரவேற்றால் போதும் எனக் கூறுவீர்களானால், மேலே உள்ள வசனத்தின் பொருள் என்ன? எனக்கு மோசேயைத் தெரியும், தாவீதைத் தெரியும் எனக் கூறுவீர்களானால், உங்களுக்கு அவர்களைத் தெரியும், ஆனால் அவர்களுக்கு உங்களைத் தெரியாது.  

எனக்குச் சிறுவர் ஊழியத்திலே சிறிது பழக்கம் இருக்கின்றபடியினால் ஒரு சிறிய நாடகம், சரியா!

தாவீதை எடுத்துக் கொள்ளுவோம். அவரைப் பார்ப்பதற்கு பத்து நாட்களாக வரிசையில் காத்திருந்து, சந்திக்கின்றீர்கள். அவர்,

'நீங்கள் எந்த நாட்டிலிருந்து வருகின்றீர்கள்? என்ற விசேடம்?'

'ஐயா உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன்! வேதாகமத்தில் படித்திருக்கிறேன்!! எங்கள் ஊழியர்கூட உங்களைப் பற்றி, நீங்கள் எழுதிய பாடல்களைக் குறித்து நிறைய கூறியிருக்கின்றார்'

அவர், 'வாழ்த்துக்கள்! இங்கே வந்து என்னைச் சந்தித்ததில். இன்னும் நிறையப்பேர் 20 நாட்களாக என்னைச் சந்திக்க வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்! போய் வாருங்கள்!! ஒரு நிமிடம்.... இங்கே உங்களை வரவேற்பதற்கு நண்பர்களைச் சம்பாதிக்கவில்லையா?'

எனவே உங்களுக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் எனக் கூறுவதை விட்டு விட்டு, உங்களது உலகப்பொருட்களினாலே இன்னும் இரட்சிக்கப்படாத நண்பர்களைச் சம்பாதிக்க முயலுங்கள்!! ஊழியத்திலே விதையுங்கள். விதைக்கின்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! உங்களை வரவேற்க நித்தியமான வீடுகளில் பெருந்திரளான கூட்டம் ஆயத்தமாயிருக்கும்!! ஆதலால்தான் பணம், நித்தியமான வீடுகள்வரைக்கும் ஏறும். இயேசுவும் கூடப் பரலோகத்தைவிட பணத்தைப் பற்றி அதிகம் பேசியுள்ளார். சத்திய வசனத்தின் படி வாழுங்கள். கடைசியாக, 2இராஜாக்கள் 4:1ல்,

"தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்."

இந்தக் குடும்பத்தின் சூழலைப் பாருங்கள்! இது மிகவும் கடுமையானது! கொடுமையானது!! பணம் எவ்வளவுதூரம் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மதிக்கப்பட்டது என்பதையும் இந்த வசனத்திலிருந்து அறிகின்றோம்! 

ஊழியத்திலே விதையுங்கள்! ஆசீர்வதிக்கப்படுவீர்கள்!! 

ஜெபிப்போம்!

அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம்! "விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்" என்று 2கொரிந்தியர் 9:10ல், எழுதியிருக்கிற பிரகாரம் ஆசீர்வதியும்! இதைப் படிக்கின்ற நண்பர்கள் அனைவரையும் கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை யாவறிலுமிருந்து விடுதலை செய்து ஆசீர்வதிப்பதற்காய் நன்றி! கிரமமாய் விதைக்கவும், அறுவடையை அபரிமிதமாகப் பெற்றுக் கொள்ளவும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் பிதாவே. ஆமென், ஆமென், ஆமென் 

ஐசுவரியம் VS பணஆசை 

என்ற புத்தகத்தைப் பெற, G PAY: 9840836690 மேலும் எமது மின் அஞ்சல் முகவரி: SELVIN12ZION@GMAIL.COM நன்றி! நன்றி!! நன்றி!!!

8 Aug 2020

COMMUNION SERVICE @ OUR HOUSE ON COVID - 19 LOCK - DOWN


இராப்போசனம்  / நற்கருணை

உலகளாவிய தொப்புள் கொடித் தமிழ் உறவுகள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்!

நீண்ட நாட்களுக்குப் பின், வலைத்தளத்தின் மூலமாக உங்களைச் சந்திக்கச் செய்த தேவனைத் துதிக்கிறேன்! 

நற்கருணை ஆராதனையில் பங்கு  பெற்று இயேசுவின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தைப்  பாணம் பண்ணி இயேசுவின் மரணத்தை நினைவு கூறுகின்ற உங்களை வாழ்த்துகிறேன்!!

1கொரிந்தியர் 11:26ல்,

"ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்"

ஆதாம் ஆண்டவருடைய கட்டளையை மீறியபொழுது, ஆதியாகமம் 3:17ல்,

"பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்"

இங்கே ஆண்டவர் ஆதாமை சபிக்கவில்லை ஏனெனில் அவன் ஆண்டவரால் சிருஷ்டிக்கப்பட்டவன், மகனைப் போல. எனவே அவனது மீறுதலினால் வரும் விளைவுகளைப் பற்றி இங்குக் கூறுகின்றார். பூமி சபிக்கப்பட்டதினால், அவனுடைய வாழ்க்கை கடினமாகும் எனக் குறிப்பிடுகின்றார். 

காயீன் தன் சகோதரனான ஆபேலைக் கொலை செய்தபொழுது, ஆதியாகமம் 4:11,12ல்,

"இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியிலே நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்."

இங்கே காயீன் ஆண்டவரிடமிருந்து நேரடியாகச் சாபத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றான். நற்கருணை ஆராதனையில் இயேசுவின் இரத்தத்தையும் பாணம் பண்ணும்போது, உங்களால் இந்தப் பூமி ஆசீர்வதிக்கப்படுகின்றது! காயீனால் இந்த பூமி பெற்ற சாபம் நிவர்த்தியாகின்றது. அடுத்த முறை நற்கருணையில் பங்கு   பெரும்போது, என்னால் இந்தப் பூமி (உங்கள் தோட்டம், துரவு) ஆசீர்வதிக்கப்படுகின்றது என்ற விசுவாசத்தோடு பங்கு பெறுங்கள்!! 

மாம்சமும், இரத்தமும்: 

மத்தேயு 16:17ல், 

"இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரமாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்"

எமது ஊழியத்திலே நாம் அதிகமாக விரும்புவது, அனேக வெளிப்பாடுகளை உள்ளடக்கியதாய் எமது பிரசங்கம் இருக்க வேண்டும் என்பதுதான். பேதுருவின் மூலமாக வந்த வெளிப்பாடு எப்படி இயேசுவை உற்சாகப்படுததியதோ, அதைப் போல எமது பிரசங்கத்திலே பிதாவின் வெளிப்பாடுகள் நிறைந்ததாய் இருக்க வேண்டும். மட்டுமல்ல, இயேசுவிடமிருந்து உடனே வாக்குத்தத்தத்தைப் பேதுரு பெற்றுக் கொண்டதைப் போல, எமது சத்தத்தைக் கேட்கின்ற யாவரும் ஆண்டவரிடமிருந்து வாக்குத்தத்தத்தைப் பெற்று தங்கள் வாழ்க்கையிலே உயர்வடைய வேண்டும். அடுத்த முறை நீங்கள் நற்கருணை ஆராதனையில் பங்கு பெறும்போது, என்னையும் எமது ஊழியத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள்! மேலும், எபிரேயர் 2:24ல்,

"ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்காயிருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் மாம்சத்தையும் உடையவரானா்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,....."

இராப்போஜனத்தில் பங்குபெறும்போது, அவருடைய மரணத்தை நினைவு கூறுகின்றோம். அவருடைய மரணம், பிசாசை அழித்துவிட்டபடியினால், நமது வாழ்க்கையில் பிசாசுக்கு எந்த அதிகாரமும், வல்லமையும் இல்லை என்பதையும் நினைவு கூறுகின்றோம். அடுத்த முறை பங்கேற்கும்போது இந்தச் சத்தியத்தை மனதில் வையுங்கள்! 1கொரி.15:50ல்,

"சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை"

புதிய ஏற்பாடு முழுவதும் நமது உள்ளம், மனம், ஆத்துமா இவைகளைப் பற்றியே பேசுகின்றது. இயேசுவும் கூட மனந்திரும்புங்கள் என்றே பிரசங்கித்தார். உங்கள் ஆத்துமா வாழும்போது, உங்கள் வாழ்க்கையே ஆசீர்வதிக்கப்படுகின்றது. பிறனுக்கானவைகளையும் நோக்குவோம்!! கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கின்றோம். இன்று அனேகர் தங்கள் பாவ சுபாவம் போகவிலலையெனப் பேசுகின்றனர். அது போகாது, நாம் அதைச் சிலுவையிலே அறைந்திருக்கிறோம்!! அல்லேலுயா!!!!

உங்களை ஏதோ ஒரு நிச்சமில்லாதவற்றை விசுவாசிக்க வேதம் அழைக்கவில்லை. மிகவும் உறுதியான வசனம் நமக்கு உண்டு. அப்படிப்பட்ட வேதத்தின் வெளிச்சத்திலே நாம் நடக்கின்றோம். வாழ்த்துக்களுடன்....

ஜெபிப்போம்!

அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம்! நாங்கள் பாவிகளாய் இருக்கையில் உம்முடைய அன்பை, உமது திருக்குமாரனாகிய இயேசுவை சிலுவையிலே அடிக்க ஒப்புக் கொடுத்ததிலிருந்து அறிகின்றோம்.... நீங்கள் எங்கள்மீது வைத்திருக்கின்ற மாறாத அன்பிற்காக உமக்கு நன்றி!! இராப்போஜனத்தின் மூலமாக இயேசு எங்களுக்காக, பாவங்களை மன்னிக்க, எங்களைச் சுகமாக்க, ஐசுவரியவான்களாக்க, எங்கள் வாழ்க்கையில் பிசாசின் சகல வல்லமைகளையும் அழிக்கச் சிலுவையில் மரணித்தார் என்பதை நினைவு கூறுகின்றோம். இதன் மூலமாகப் பூமி ஆசீர்வதிக்கப்படுவதற்காய் நன்றி! இயேசுவின் நாமத்தில் ஜெபங்கேளும் பிதாவே! ஆமென், ஆமென், ஆமென்....

ஊழிய அழைப்புக்கு

selvin12zion@gmail.com

Cell: +91 9840836690 & +91 8939018488