13 Oct 2014

IF YOU BELIEVE........

நீ விசுவாசித்தால்.....
 
"நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா என்றார்" (யோவான் 11:40)
 
 
கிறிஸ்துவில் பிரியமானவர்களே...... இந்த இடத்தில் உங்களை சந்திக்கச் செய்த கிருபைகளுக்காய் நம் ஆண்டவரை ஸ்தோத்தரிகின்றேன்!அற்புதத்திற்காய் நம் ஆண்டவரை சந்தித்த ஒவ்வொருவரிடமும் ஆண்டவர் எதிர்பார்த்தது விசுவாசத்தையே என்பதை நாம் அறிவோம்!
 
ருமுறை ஊழியத்துக்கு சென்ற பொழுது, ஒரு சகோதரி என்னை தெருவில் சந்தித்து, "பிரதர் என் தம்பி குடிப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என நான் 3 நாட்களாக உபவாசித்து ஜெபித்து வருகின்றேன், இது மூன்றாவது நாள்" என்றார்கள். நான் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேச ஆரம்பித்தேன். நான் பேசி முடிப்பதற்குள்ளாக, "இவன் எங்க திருந்தப் போகிறான்?" என்று திட்ட ஆரம்பித்தார்கள். நான் "நீங்கள் எதற்காக ஜெபிக்கின்றீர்களோ அதை ஆண்டவர் நிறைவேற்றுவார் என விசுவாசித்து விசுவாச வார்த்தைகளைப் பேசுங்கள்." எனக் கூறினேன். நான் ஜெபிப்பதை ஆண்டவர் கேட்க விரும்புகின்றார், அதே நேரத்தில் நான் பேசுவதையும் கவனித்துக் கேட்கின்றார். (மல்கியா 3:16) இதிலே நாம் கவனமாய் இருக்க வேண்டும்.
 
மது 'பொய்யைப் பற்றிய உண்மை' என்ற கைப்பிரதியிலே ஒரு பாடல் ஒன்று வரும். அது,
 
இங்கே ஒரு சிறிய கதவு
எல்லோரும் அதைப் பூட்டலாம்
அந்த சிறிய கதவு
உங்கள் மூக்குக்குக் கீழே
 
நேக நேரங்களில் பேசாமல் இருந்தாலே அற்ப்புதங்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும். எப்படி ஆண்டவர் நமது விசுவாசத்தை எதிர்பார்க்கின்றாரோ அதைப் போலவே நமது விசுவாச அறிக்கையையும் ஆண்டவர் எதிர் பார்க்கின்றார். ஆண்டவர் என் ஜெபத்துக்குப் பதில் தருவார் என்று விசுவாசித்துவிட்டு, நான் எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசுவேன்' என்றால் எப்படி நாம் அற்புதத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்? எதற்காக நாம் ஜெபிக்கின்றோமோ, அதிலே நாம் பொறுப்புடையவர்களாக இருக்க வேண்டும்.
 
யேசுவுக்கு முன் விசுவாசத்தை அறிக்கை செய்த ஒரு மனிதனை நாம் பார்ப்போமா! அவனது அறிக்கை இயேசுவையே ஆச்சரியப்பட வைத்தது. மத்தேயு 8:8,9ல்,
"நூற்றுக்கு அதிபதி பிரதியுத்திரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப் பட்டவனாயிருந்தும், எனக்கு கீழ்ப் பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனை போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகின்றான், என் வேலைக்காரனை இதை செய் என்றால் செய்கிறான் என்றான்"
வாயிலிருந்து புறப்படும் வார்த்தைக்கு எவ்வளவு வல்லமை இருக்கின்றது என்பதை இந்த நூற்றுக்கு அதிபதி நன்கு அறிந்திருந்தான். இதுவே ஆண்டவரை ஆச்சரியப்பட வைத்தது. நாமும் நமது விசுவாசத்தை அறிக்கையிடுவதில் கவனமாயிருப்போம். விசுவாச அறிக்கை என்றாலே நமது நினைவுக்கு வருவது 23 ம் சங்கீதந்தான்.
 
1. "கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன்........." ஆண்டவர் என் மேய்ப்பராய் //// வழிகாட்டியாய் //// என்னை ஆளுகை செய்பவராய் இருக்கிறார். எனவே நான் தாழ்ச்சியடைவதில்லை, குறைவு பட்டுப் போவதில்லை, மாறாக நான் மேன்மையடைவேன். என்னுடைய எல்லாச் சூழ்நிலையும் இயேசுவின் கட்டுப்பாட்டுக்குள்ளாக இருக்கிறது.
 
2. "அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகின்றார்............." எனக்கு நல்ல வருமானம் வரும் இடத்திற்கு என்னை வழி நடத்துகின்றார். என்னைப் போஷிக்கின்றார், நான் பரிபூரண திருப்தியடையும் படி என்னை ஆசீர்வதிக்கின்றார். எனவே நான் சுகித்திருக்கிறேன். எந்த எதிரியின் பயமும் எனக்கு இல்லை. கவலையும் எனக்கு இல்லை.
 
3. "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி தமது நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதையில் நடத்துகின்றார்........" நான் என் வாழ்க்கையில் சந்திக்கிற எந்த கடினமான  சூழ்நிலையையும் தமது நாம மகிமைக்காக பயன்படுத்துகிறார். (நான் ஏமாற்றப் படும்போதும் //// துன்பப்படும்போதும்) அவர் என் உள்ளத்தைத் தேற்றி,  அவரது நாம மகிமைக்காக என்னை நீதியின் பாதையில் நடத்துகின்றார். (இதை சொல்லும் போதே உங்கள் உள்ளத்தில் சமாதானத்தை உணருவீர்கள்).
 
4. "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்......." உதவி செய்ய ஒருவருமில்லாமல், கஷ்ட்டத்தின் மத்தியில், என்னைப் புரிந்து கொள்ள ஆளில்லாத சூழ்நிலையில் மரண இருளிலே இருந்தாலும், சகலத்தையும் அறிந்திருக்கிற தேவன் என்னோடிருக்கின்ரீர். அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நிற்கின்ற சூழ்நிலையிலும், தேவரீர் உமது வழியைவிட்டு நான் விலகிச் செல்லும் போதும், உமது கோலும் உமது தடியும் என்னை மிகச் சரியான வழியிலே நடத்துகிறது. 
 
5. "என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி, என் தலையை எண்ணையால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது........." நான் அவமானப் படுவதையும், நான் துன்பப்படுவதையும், பட்டினியாய் இருந்து கஷ்டபடுவதையும் கண்டு, சந்தோஷப் பட நினைக்கின்ற என் எதிரிகளுக்கு முன்பாக என் தலையை உயர்த்துகிரீர். மகிழ்ச்சியினால் என்னை நிறம்பி வழியப்  பண்ணுகின்றீர். 
 
6. "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.........." நான் உயிருடன் இருக்கும் வருடங்கள் எல்லாம்  நன்மையினாலும் தேவ கிருபையினாலும் நிறைந்திருப்பேன். நான் நீண்ட ஆயுளோடு இந்த உலகத்தில் வாழுவேன். 
 
இப்படி நாம் பொருளை உணர்ந்து, நமது விசுவாசத்தை அறிக்கை செய்தால், ஆயுள் முழுவதும் நன்மையினாலும் கிருபையினாலும் நிறைந்திருப்போம். விசுவாசத்தை அறிக்கை பண்ணுங்கள் ஆசீர்வதிக்கப் படுவீர்கள்
 
"நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா என்றார்" (யோவான் 11:40)
 
ந்த 11ம் அதிகாரம் முதலில் இருந்து வாசித்தோமானால் நிறைய உண்மைகளை நாம் அறிந்து கொள்ள முடியும். நாம் நமக்கு இங்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளப் போகிறோம். வசனம் 4ல்,
 
"இயேசு அதைக் கேட்ட பொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாய்ருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப் படுவார் என்றார்"
 
னக்கன்பான நண்பர்களே... நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், எந்தப் பிரச்னையை நீங்கள் சந்தித்தாலும், எந்த குறைவுகளில் நீங்கள் இருந்தாலும் அதனாலே ஆண்டவருடைய நாமம் மகிமைப்படும் என்பதை அறியுங்கள். அல்லேலுயா! அறிக்கை செய்யுங்கள்!
 
பெத்தானியாவுக்குப் போய் ஜெபிக்க நாலு நாள் தாமதப்படுத்தினார்!  உங்கள் ஜெபத்திற்கு பதில் தாமதமானாலும் மிகச் சரியான நேரத்தில் ஆண்டவரிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுக் கொள்ளுவீர்கள்!
 
நேராக மார்த்தாளும் மரியாளும் ஆண்டவரை சந்தித்த இடத்துக்கு வருவோம். அவர்கள் என்ன விசுவாச அறிக்கை செய்தார்கள் என்பதைக் கவனிப்போம்!   சத்தியம் உங்களை விடுதலையாக்கும்! வசனம் 21,22ல்,
 
"மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருநதீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாறேன்று அறிந்திருக்கிறேன் என்றாள்"
 
ன்ன ஒரு அருமையான அறிக்கை! இப்பொழுது நீர் ஜெபம் பண்ணினால் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்றாள். சூப்பர்! உடனே (வ23)
 
"இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயித்தெழுந்திருப்பான் என்றார்" 
 
டனே ஆச்சரியப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு 'வாருங்கள் ஆண்டவரே... கல்லறையில் அவனை வைத்த இடத்தைக் காட்டுகின்றேன் என்று கூறிக் கொண்டே இயேசுவுக்கு முன்னே ஓடினாள். ஆனால் வேதாகமத்தில் அப்படி இல்லை. (வ 24)
 
"அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கின்றேன் என்றாள்"
 
ரு அற்புதத்தை எங்கோ கொண்டு சென்றுவிட்டாள். மரியாளாவது சரியான அறிக்கை செய்தாளா எனப் பார்த்தோமானால் அதுவும் இல்லை. வ 35ல்,   
 
"இயேசு கண்ணீர் விட்டார்".
 
ப்பொழுது, வசனம் 39
 
"இயேசு கல்லை எடுத்துப் போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே என்றாள்"
 
ற்புதத்தை எதிர் பார்க்கும் என் அன்பு சகோதர சகோதரிகளே..... நீங்களும் அற்புதத்திற்கு எதிராய் பேசிக் கொண்டிருக்கின்றீர்களா? ஆனாலும் ஆண்டவர் தாம் ஏற்கனவே நிச்சயித்து இருந்ததினால் (வ 4) யாருமே எதிர்பாராத ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். ஆண்டவரே உம்மிடத்தில் அற்புதத்தை எதிர்பார்த்துவிட்டு அதற்கு எதிராய் பேசியதை மன்னியும் என்று ஜெபித்து மனந்திரும்புங்கள். இதை வாசிக்கின்ற நீங்கள் ஒரு அற்புதத்தைச் சந்திப்பீர்கள்!
 
மது ஆண்டவருடைய ஜெபத்தைப் பார்ப்போம்! (வ 41,42)
 
"அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப் போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவி கொடுத்தபடியினால் உம்மை ச்தொத்தரிகின்றேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவி கொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதை சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்"
 
ம்மெல்லாருக்கும் சவால் நிறைந்த ஒரு ஜெபம்! நம்மில் எத்தனை பேர் இப்படி ஜெபிக்க முடியும்? விஷேசமாக ஊழியர்கள்....... ஆண்டவரை விட்டு விலகச் செய்யும் பிசாசு, உலகம் மாம்சத்துக்கு எதிர்த்து நில்லுங்கள். தேவ பிரசன்னத்தினால் நிறைந்திருங்கள்!
 
"சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்" (எபிரெயர் 3:12)
 
மேலும்,
 
"இவைகளைச் சொன்ன பின்பு லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான்......" (வ 43,44)
 
வ்வளவு மகிழ்ச்சி!! மரித்த சகோதரனை இனிமேல் பார்க்க முடியாது என்று அழுது கொண்டு, துக்கத்தோடு இருந்த சகோதரிகளுக்கு எத்தனை மகிழ்ச்சி!! சூழ நின்ற ஜனங்கள் எல்லோரும் வாவ்.....! தேவனைப் புகழ்ந்தார்கள்! இதை வாசிக்கின்ற நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அற்புதத்தை வரும் நாட்களில் பெற்று ஆண்டவரை புகழுவீர்கள்!
 
 ஜெபிப்போமா!
 
ங்களை நேசித்து வழிநடத்தி வருகின்ற எங்கள் அன்பின் பிதாவே! எங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள கிருபை செய்யும்.  குறிப்பாக ................ ........................ ..................... ............... ................... ........................ ..................... ........................ .......................... ........................... ................ ................................ ..................................... .................................... ............................ ........................ .. ..................................... ..........................................  (இங்கே ஆண்டவர் உங்களுக்கு செய்யவேண்டிய அற்புதத்தை சொல்லுங்கள்) இதிலே அற்புதத்தை செய்வதற்காய் நன்றி..... இயேசுவின் மூலம் ஜெபங்களும் பிதாவே.
 
 
 
 

10 Oct 2014

"ALL THINGS ARE POSSIBLE TO HIM THAT BELIEVETH"

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்
 
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! இந்த இடத்தில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்!
 
"விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" மாற்கு 9:23
என்ற வசனத்தின் மூலமாக ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்தவிருக்கும் மாற்றங்களை ஆவலோடு எதிர் பார்க்கின்றேன்!
 
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை நாம் விசுவசித்துதான் பெற்றுக் கொள்ளவேண்டும். எபிரேயர் 6:11ல்,
 
"நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிரவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து..........."

என வேதம் கூறுகின்றது. இதன்படி இயேசுவிடமிருந்து அற்புதங்களை, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டுமானால், நாம் 1. அசதியாய் இருக்கக் கூடாது. 2. விசுவாசம் தேவை. 3. நீடிய பொறுமை தேவை. இந்த வசனமும் நமக்கு விசுவாசம் அவசியம் தேவை என வலியுறுத்துகின்றது.
மேலும் இயேசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் தம்மை அற்புதம் செய்ய வேண்டி சந்திக்க வந்தவர்களிடம் விசுவாசத்தை எதிர்பார்த்தார். மத்தேயு 9:22ல்,
 
"இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்"
 
மத்தேயு 9:29ல்,
 
"அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக் கடவது என்றார்"

 
மாற்கு 9:23ல்,
 
"இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்"
 
யோவான் 11:40ல்,
 
"இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்"
 
மேலும் வேதாகமத்தில், விசுவாசத்தை குறித்து, ரோமர் 8:33; 10:11ல்,
 
"அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை....."
 
ரோமர் 14:23ல்,
 
"விசுவசத்தாலே வராத யாவும் பாவமே"
 
மேலும், எபிரேயர் 11:6ல்,
 
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்......"
நமது விசுவாசத்தைப் பெருக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? அது சம்பந்தமாக, வேறு சில வசனங்களைத் தியானிப்போம்.இயேசு தமது சீடர்களோடு பேசிக்கொண்டிருந்த போது, லூக்கா 17:5ல்,
"அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள்"

இதற்கு முந்தய வசனங்களை நாம் பார்க்கும் போது, இயேசு கிறிஸ்து மன்னிப்பின் அவசியத்தைக் குறித்து பேசிய பொழுது அவருடைய சீடர்கள் மேற்கண்டவாறு கேட்டனர். நமது விசுவாசம் வல்லமையுள்ளதாக சாரமுள்ளதாக இருக்க வேண்டுமானால் நாம் பிறரை மனதார மன்னிக்க வேண்டும். இதன் அர்த்தம் என்னவெனில், 
 
எனக்கு விரோதமாக, துரோகியாக நீ எதை செய்தாலும் எனது அற்புதத்தை இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்ளுவேன் என்பதுதான். என்னை கோபப்படுத்தி  என் விசுவாசத்தை குறைத்து விட முடியாது என்பதுதான்! 
மன்னிக்க முடியவில்லையானால், இயேசு கிறிஸ்து தமது மலைப் பிரசங்கத்தில் மத்தேயு 5:44ல்,
 
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துபவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்"
 
என்ற வசனத்திற்கு கீழ்படியுங்கள். நாம் பிறரை மன்னித்தால்தான் நாம் ஆண்டவரிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சத்தியம் மாறாதது. மத்தேயு 6:12ல், 
 
"எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்"
 
ஆண்டவர் இதை விரும்புகின்றார். நீங்கள் அற்புதங்களைப் பெற்றுக் கொள்ள ஆயத்தப்படுகின்றீர்கள்.            
   
2. நமது விசுவாசம் காணக் கூடியதாக இருக்கவேண்டும்: எங்கள் சிறுவர் ஊழியத்தில், அன்பைக் குறித்து சொல்லிக் கொடுக்கும் போது, உங்கள் அப்பா, அம்மாவிடம் எப்படி உங்கள் அன்பைக் காட்டுவீர்கள்? எனக் கேட்டால், சில பிள்ளைகள் என் அம்மாவிற்கு நான் முத்தம் கொடுப்பேன், சிலர், 'அம்மா சொன்ன வேலைகளை செய்வேன்' சிலர், 'அன்பாக இருப்பேன்' இப்படிக் கூறுவார்கள். இங்கே நம் விசுவாசம் காணக் கூடியதாக இருக்க வேண்டும். மத்தேயு 9:2ல், 
 
"இயேசு அவர்களுடைய விசுவாசத்தை கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன் கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப் பட்டது என்றார்"
 
 
மாற்கு 2:5லும், இதே சம்பவத்தை நாம் பார்க்கின்றோம். கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என வேதம் நமக்கு போதிக்கின்றது. செயல்களின் மூலமாக நாம் நமது விசுவாசத்தைக் காட்டவேண்டும். எனது ஊழியத்தில் நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
 
ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு, வாரத்தில் ஒரு நாள் நான் தவறாமல் ஊழியத்துக்கு செல்லுவது உண்டு. தனித்தாள் ஊழியம். வீடு வீடாக சென்று அவர்களை விசாரித்து, ஆண்டவருடைய அன்பைக் கூறுவேன். அநேகர் குடும்பமாக இரட்சிக்கப் பட்டார்கள்; சிறுவர் ஊழியத்தையும் ஆரம்பித்து செய்து வந்தேன். சுமார் 3௦ பிள்ளைகள் வருவார்கள். ஒருநாள் சில வீடுகளை சந்தித்துவிட்டு, அந்த பகுதியின் மையத்தில் இருந்த ஒரு திண்டில் உட்கார்ந்து எனது ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சகோதரி ஒரு வயதுள்ள ஒரு குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு, "சார்..... இந்தக் குழந்தை காலையில் இருந்தே அழுகின்றது. தயவு செய்து வேண்டுங்கள்" என்றார்கள். சரி நான் உங்கள் வீட்டுக்கே வருகின்றேன் என்று கூறவே, அவர்கள் முன் சென்றார்கள். நான் பின்னாலே சென்றேன். என்னோடு கூட ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளும் வந்தார்கள். குடிசைக்குள்ளே சென்றேன். உள்ளே இன்னொரு குழந்தை இரண்டு வயதிருக்கும், ஒரு கந்தல் துணியில் படுத்திருந்தது. இதுக்கு என்ன? "அவனுக்கும் ஜுரம் சார்...." தொட்டுப் பார்த்தேன் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. தேங்காய் எண்ணை இருக்கிறதா? கேட்டுவாங்கி நெடுமுழங்காலில் ஜெபிக்க ஆரம்பித்தேன். முதலாவது அந்த சிறு குழந்தைக்கு எண்ணை பூசி ஜெபித்தேன். பின்பு அந்த 2 வயதுப் பையனுக்கும் எண்ணை பூசி ஜெபித்தேன். பின்பு சத்தியத்தை சொல்ல ஆரம்பித்தேன். அப்பொழுது ஞாயிறு பள்ளி பிள்ளைகள், "இன்னும் அழுதுகிட்டே இருக்கு பாரு சார்" ஒரு வினாடி திகைத்தேன். பக்கத்திலிருந்த பாட்டிலில் இருந்த எண்ணையை எடுத்து, இயேசுவின் இரத்தம் ஜெயம் என சத்தமாக கூறி, தனது தாயின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்த குழந்தையின் வயிற்றில் (அதுதான் எனக்கு எட்டிய இடத்தில் இருந்தது) தடவினேன். அடுத்த நொடி குழந்தை தன் அழுகையை நிறுத்தியது. அந்த 2 வயதுப் பையனைப் பார்த்தேன் அவன் எழுந்து விளையாடிக் கொண்டிருந்தான். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! எனது ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளின் கண்களிலும் மகிழ்ச்சி! சத்தியத்தை சொன்னேன். ஆண்டவர் நமது விசுவாசத்தைப் பார்க்க விரும்புகின்றார்! கடைசியாக,
 
துதிக்கவேண்டும்: வாக்குத்தத்தத்தை நாம் சுதந்தரிக்க நாம் விசுவாசிகளின் தகப்பன், ஆபிரகாமைப் பின்பற்ற வேண்டும். ரோமர் 4:20,21ல்,
 
"தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப் படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப் படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்"

 
ஆபிரகாமின் 75 வது வயதிலே ஆண்டவர் வாக்குக் கொடுத்தார். இடையிலே சிறிது தளர்வு. மீண்டும் அவன் நம்புவதற்கேதுவான ஏதுக்களைக் (மேலே வானத்தின் நட்சத்திரங்கள், கீழே கடற்கரை மணல்) கொடுத்தார். நானும் எனது ஊழியத்தில் சில ஏதுக்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு அது ஊழியத்திலே நிறைவேறியதைக் கண்டிருக்கின்றேன். வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் சந்தேகப் படாமல்.......". சந்தேகப்படாமல் இருப்பதற்கு அவன் என்ன செய்தான்?  ஆண்டவருடைய வாக்குத்தத்தத்திற்கு எதிராய் தோன்றிய எதையுமே  அவன் எண்ணாதிருந்தான். (ரோமர் 4:19) நாமும் அப்படியே இருக்க வேண்டும். 
உதாரணமாக ஆபிரகாமுக்கு இருந்த பிரச்சனையையே எடுத்துக் கொள்ளுவோம். தற்காலத்தில் குழந்தை இல்லையெனில் டாக்டரிடம் சென்று சரீரத்தை செக் பண்ணி இருக்கலாம். குழந்தையை பெற்றெடுக்கும் அளவிற்கு சரீர நிலை இல்லை எனக் கூறியிருக்கலாம். சிலருக்கு மைன்ட் செட் ஆக வேண்டும் என்று கூறியிருக்கலாம். ஒரு சிலருக்கு குழந்தையே பிறக்காது எனக் கூட கூறியிருக்கலாம். ஆபிரகாம் என்ன செய்தான்? டாக்டர் கூறியது எல்லாம் நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் அதை அவன் எண்ணவில்லை --- பெரிதாக நினைக்கவில்லை. சோர்ந்து போகவும் இல்லை. அதை தடையாக நினைக்கவுமில்லை. மாறாக வாக்குத்தத்தத்தைப் பார்த்தான்.
 
"உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுவேன்" (சங்கீதம் 115:14)
 
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! நீங்கள் இதைப்போல  உங்கள் ஆசீர்வாதத்துக்காக, இருக்கின்ற நிலைமையை மட்டுமே  பார்க்காமல்  ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்த்து ஆண்டவருக்கு மகிமையை செலுத்துவீர்களா?
 
ஆபிரகாம் எப்படி ஆண்டவருக்கு மகிமையை செலுத்தியிருப்பான்? 
 
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிற கர்த்தாவே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். மரித்தவர்களையும் உயிரோடு எழுப்ப வல்லமையுள்ளவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். என்னுடைய பிரச்சனைகளைக் காட்டிலும் பெரியவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். என்னுடைய குறைவுகளை நிறைவாக்க வல்லமை உள்ளவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். கர்த்தாவே நீர் பெரியவர் உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை ஆகவே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். தாயின் கருவிலே என்னைக் கண்டவரே உம்மைத் துதிக்கிறேன். கர்ப்பத்தை உயிர்பிக்க வல்லமையுள்ளவரே உமக்கு மகிமையை செலுத்துகின்றேன். சர்வ வல்லமை உள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம்! இப்படியாக ஆபிரகாம் தேவனுக்கு மகிமையை செலுத்தியிருப்பான்
 
ஜெபிப்போமா?
 
ஆபிரகாமின் தேவனே, ஈசாக்கின் தேவனே யாக்கோபின் தேவனே... உமது பரிசுத்தப் பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தில் தேவ சமூகத்தில் வருகின்றேன். எனது பாவங்களை உமது திருக் குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் மன்னித்து இரத்தத்தினால் கழுவி பரிசுத்தப்படுத்தும். நீர் என் மீது வைத்திருக்கும் உம்முடைய அன்பை எண்ணாமல் உலகத்தின் மீது மனதை செலுத்தியதை மன்னியும். சகலத்தையும் அறிந்திருக்கின்ற உமக்கு முன்பாக நான் பாவஞ்செய்தேன் என அறிக்கையிடுகின்றேன். நீர் அதினதின் காலத்தில் சகலத்தையும் செய்ய வல்லமையுள்ளவர் என விசுவாசிக்கின்றேன். எனது குறைவுகளை நிறைவாக்குகிறபடியால் நன்றி! எங்களையும் எங்கள்  பிள்ளைகளையும் வர்த்திக்கச் செய்கிறபடியால் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபங்களும் எங்கள் பிதாவே.  
    
      கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! பிறருக்கு பிரயோஜனம் உண்டாகும்படி உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்!
 
உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகக்கடவது

7 Oct 2014

GO IN PEACE.....

'நீ சமாதானத்தோடே போ'
"அவர் அவளைப் பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்." மாற்கு 5:34
 
ந்த வாக்குத்தத்திற்க்காய் தேவனை துதிக்கிறேன்! இதை வாசிக்கிற உங்களை ஆண்டவர் சுகப்படுத்துவார். இந்த பெரும்பாடுள்ள ஸ்திரீ சுகமாக்கிய சம்பவம், மத்தேயு 9:20-22 மற்றும் லூக்கா 8:43-48 வசனங்களிலும் இருக்கின்றது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இல்லை. லேவியராகமம் 15:19-30 வசனங்களை வாசித்துப் பார்ப்பீர்களானால் வீட்டுக்கு விளக்கமான பெண் என்னன்ன செய்து தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளவேண்டும் என விளக்கமாக பார்க்கலாம். அந்த நாட்களில் அவளைத் தொடுகின்ற யாராய் இருந்தாலும், தீட்டுப் பட்டவர்களாக எண்ணப்படுவார்கள். தொட்டவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து, குளித்தாலும் சாயங்காலம் வரைக்கும் தீட்டுப்பட்ட நிலைதான். 
 
திரத்தின் ஊரல் நின்றபின் 7 நாட்களுக்குப் பின் 8ம் நாளில் ஆலயத்துக்குச் சென்று பலி செலுத்தி உதிரத்தின் ஊரலின் நிமித்தம் பாவ நிவர்த்தி செய்ய வேண்டும். பின்புதான் அவள் சுத்தமானவளாகக் காணப்படுவாள். ஒரு பெண்ணின் நிலை மிக மோசமான நிலைதான். மாதந்தோறும் இப்படியென்றால் பன்னிரண்டு ஆண்டுகளாக உதிரத்தின் ஊரளினால் பெரும் பாடுபட்டாள். அதனால்தான் வேதம் இவளை பெரும்பாடுள்ள ஸ்திரி என்று அழைக்கிறது.
 
முதலில் வீட்டில் உள்ளவர்களோடு பழக முடியாமல், தனிமைப்படுத்தப் பட்ட வாழ்க்கை. பிள்ளையாய் இருந்தாலும் தொட முடியாது. தான் அமர்ந்த இடத்தில் பிறர் உட்கார முடியாது. எல்லாமே தீட்டாகிவிடும். இவளது நிலை மிக மோசமானதாக இருந்தது. ஏறக்குறைய தன் குடும்பத்தாராலேயே புறக்கணிக்கப் பட்ட / தீண்டத்தகாத நிலைமை. அண்டை அயலார் இவளை கண்டாலே தீட்டு என விலகிச் செல்லும் பொழுது இவள் உள்ளம் எப்படி உடைந்திருக்கும். இதில் சரீர வேதனை வேறு.
 
ந்தப் பெண்ணுமே விரும்பாத நிலை. அதுவும் அந்தக் காலத்தில் உள்ள சமுதாய நிலை மேக மோசமானது. எனவே வைத்தியர்களைத் தேடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. தான் கேள்விப்பட்ட வைத்தியரிடமெல்லாம் சென்றாள். எப்படியாவது தனக்குச் சுகமாக வேண்டும் என்ற வேகம் அவளுக்குள் இருந்தது. எனவே தன் சொத்துக்களை விற்றாவது வைத்தியம் பண்ணவேண்டும் என சொத்துக்களை விற்றாள். எந்த வைத்தியர்களாலும் அவளது நோய்க்கான காரணத்தைக் காண முடியவில்லை. நோய்க்கான காரணத்தைத் தேடவே தன் சொத்தில் பெரும்பகுதியை செலவளித்திருப்பாள்.
 
ந்த நாட்களில் இருமல் என்று டாக்டரிடம் சென்றாலே போதும். பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோசன் டெஸ்ட் என்று பல நூற்றுக்கணக்கான ரூபாய் செலவாகின்றது. மேலும் சுகமாகவில்லை எனில், எக்ஸ்-ரே, ஸ்கேன் மற்றும் எக்கோ எல்லாம் எடுக்க வேண்டும். இப்படி டேஸ்டுக்கே பல ஆயிரங்களை செலவிட வேண்டியது உள்ளது. அந்த நாட்களில் வைத்திய செலவுக்கான இன்ஷுரன்ஸ் கூட கிடையாது.
 
ந்த பெரும்பாடுள்ள ஸ்திரியோ....... தனது சொத்துக்களை எல்லாம் விற்று வைத்தியத்துக்கே செலவு செய்தாள். இன்னும் சுகமாக வில்லை. 
இப்படி பட்ட நேரத்தில் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டாள். அந்த ஸ்திரீக்கு இயேசுவை சொன்ன நபர்களுக்காக தேவனைத் துதிக்கின்றேன். இயேசுவிடம் சென்றால் சுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதை கேட்டவுடன் இவளுக்கு நெஞ்சிலே பால் வார்த்ததைப் போல இருந்திருக்கும். எந்த விதமான நம்பிக்கையும் இல்லாமல் நடை பிணமாக வாழ்ந்த இவளது உள்ளம் இயேசுவை சந்தித்தால், நோய் சுகமாகிவிடும், எதிர் காலம் பிரகாசமாய் இருக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. 
 
ன்றும் கூட நாம் இருக்கும் பகுதியில் எத்தனைபேர் இது தெரியாமல் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களை சந்தித்து இவர்க ளுக்காக ஜெபிப்போமா?  இயேசுவிடம் ஜெபிக்கக் கற்றுக் கொடுப்போமா? நமக்குத் தெரிந்த ஊழியர்களை அழைத்து வந்து இவர்களுக்காக ஜெபிக்க  சொல்லுவோமா? இதை வாசிக்கின்ற சகோதரிகள் இப்படிப்பட்ட அன்பினால் நிறைந்திருக்க வேண்டும். 
 
சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆவலுடன் வருகின்றவர்கள் கூட தனக்கான் ஒரு பாதையை தெரிந்து கொண்டு வருகின்றார்கள். உதாரணமாக நூற்றுக்கு அதிபதி, 'ஒரு வார்த்தை சொல்லும் என் வேலைக்காரன் சொச்தமடைவான்' . இன்னொரு இடத்தில் வந்து கைகளை வையும் அப்பொழுது சுகமாவாள். இங்கே நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சுகமாவேன். 
 
னக்கூட்டம் அவளுக்கு ஒரு தடையாகத் தெரியவில்லை. முண்டியடித்துக் கொண்டு வந்து இயேசுவுக்குப் பின்னாக வந்து அவருடைய வஸ்த்திரத்தை தொட்டாள். அந்த வினாடியே 12 வருடங்களாக பட்ட வேதனை நீங்கி சுகமானதை தன சரீரத்தில் உணர்ந்தாள். அன்பானவர்களே நீங்கள் எப்படிப்பட்ட வியாதியோடு எத்தனை வருடங்கள் பாதிக்கப் பட்டிருந்தாலும் இயேசு கிறிஸ்துவால் உங்களுக்கு சுகத்தைக் கொடுக்க முடியும்.
இயேசு கிறிஸ்து தன்னைத் தொட்டது யார் எனக்  கேட்டபொழுது, பயந்து நடுங்கியபடி முன்னால் வந்தாள். உடனே இயேசு அவளை நோக்கி "மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. சமாதானத்தோடே போ, உன் வேதனை நீங்கி சுகமாயிரு. எவ்வளவு மனசார ஆசீர்வதித்தார் பாருங்கள்!
 
ன்பானவர்களே உங்களில் வியாதியாய் இருப்பவர்களுக்காக நான் ஜெபிக்க விரும்புகின்றேன். இயேசுவின் தழும்புகள் இப்பொழுதும் உங்களை சுகமாக்க வல்லமையுள்ளதாய் இருக்கிறது. வியாதி உங்களை எத்தனை வருடங்கள் பாடாய் படுத்தியிருந்தாலும் சரி.... சுகத்திற்காய் அதிகமாய் செலவழித்திருந்தாலும் சரி..... டாக்டர்களால் கைவிடப் பட்டிருந்தாலும் சரி...... இப்பொழுது இயேசுவை விசுவாசத்தோடு தொட்டீர்களானால் உடனடியாக உங்கள் சரீரத்திலே சுகத்தை உணர முடியும். உங்களைச் சுகமாக்குவதுதான் இயேசுவின் பிரதான தொழில்.     
 
ஜெபிப்போமா?
 
எங்களை அதிகமாய் நேசிக்கின்ற எங்கள் அன்பின் பிதாவே!
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டி இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றேன்! இந்த செய்தியை வாசிக்கின்ற எனது அன்பான சகோதர சகோதரிகளுக்காய் ஜெபிக்கிறேன். பல்வேறு ஆஸ்பத்திரிக்குச் சென்றும் குணமாகாமல், மன வேதனையோடு இருக்கின்றவர்களுக்காக ஜெபிக்கிறேன். அன்று உமது வஸ்திரத்தை தொட்டபொழுது, உம்மிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டுச் சென்று 12 வருட வியாதியை ஒரு நொடியில் சுகமாக்கியதைப்போல இன்று உம்மை விசுவாசத்தோடு தொட முயற்சிக்கின்ற எனது சகோதர சகோதரிகள் மீது உமது வல்லமை இறங்கட்டும். இப்பொழுதே தங்கள் சரீரத்தில் சுகத்தை உணருவார்களாக. இயேசுவே நேற்றும் இன்றும் என்றும் மாறாத வல்லமைக்காக நன்றி செலுத்துகின்றேன். தொடர்ந்து பெலப்படுத்தும். உமக்கே சகல துதி கனம் மகிமையை செலுத்துகின்றோம்  உதவி செய்யும் இயேசுவின் மூலம் ஜெபங்களும் பிதாவே. ஆமென்.
 "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரேன்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;  நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவைமேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்". (ஏசாயா 53:4,5) 

 
 
பிரியமானவர்களே! பிறருக்கு நன்மையுண்டாகும்படி உங்களுக்கு ஆண்டவர் செய்த அற்புதத்தை பதிவிட மறக்காதீர்! நன்றி!!!
Bro. K.Selvin Durai
Cell: 09840836690