14 Oct 2022

I will remember their sins no more - WHY?



 கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கள் யாவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

வழக்கமாக வெளியிடும் நமது ஈஸ்கட்டோஸ் மாதப்பத்திரிக்கை தொடர்ந்து நான்கைந்து மாதமாக வெளியிடமுடியவில்லை. அரசாங்கத்தில் பத்திரிக்கையைப் முறைப்படி பதிவு செய்யவே இந்தக் காலதாமதம். நீண்ட நாட்களாக, உங்களோடு தொடற்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. எனவே பத்திரிக்கை வருமளவும், இந்த வலைத்தளத்தில் ஆண்டவர் தரும் செய்திகளை வெளியிடலாமென முடிவெடுத்தேன். மேலும் இந்த வலைதளத்தை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், விசுவாசிகள் யாவரோடும் பகிற்ந்து கொள்ளுங்கள்! உங்கள் மின்அஞ்சல் முகவரியைக் கொடுத்து, SUBSCRIBE செய்வீர்களாகில், உங்கள் மின்அஞ்சலுக்கே நாங்கள் வெளியிடும் செய்திகள் உங்களை வந்தடையும். தொடர்ந்து வாசியுங்கள்! ஆசீர்வதிக்கப்படுவீர்கள்! உங்கள் மனம் புதிதாகும், நீங்கள் மறுரூபமாவீர்கள்!! (எபேசியர்1:3; ரோமர் 12:2)

"ஏனெனில் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எபிரேயர் 8:12)

எனக்கன்பானவர்களே இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகின்றேன்! ஏன் பாவங்களையும் அக்கிரமங்களையும் நினைப்பதில்லையெனக் கேட்டால், அவர் இரக்க குணம் உள்ளவர் எனப் பொதுவாக எல்லாரும் கூறவர். நாம் வேறுவிதமாக இதை இங்கே பார்க்கப்போகின்றோம்.

முதலாம் உடன்படிக்கையின் கீழே ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணத்தையும், நியமங்களையும் கொடுத்தார். உபாகமம் 4:13ல், 

"நீங்கள் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்"

உபாகமம் 5:1-3ன் படி, இந்த உடன்படிக்கை ஓரேபிலே, இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டது.

உபாகமம் 9:9-11 இந்த வசனத்தை ஏன் இங்குக் குறிப்பிடுகின்றேன் எனில் தேவன் 10 கற்பனைகளைக் கற்பலகைகளில் எழுதினார் என்பதை வலியுருத்தி கூறத்தான்.

புறஜாதிகளும் நியாயப்பிரமாணத்தை, கற்பனைகளைக் கைக்கொள்ளுகின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரோமர் 2:14,15ல்,

"அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப் பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 

அவர்களுடைய மனசாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றக் கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்."

ஒருமுறை சிந்தாதிரிப்பேட்டை, ஐந்து குடிசைப்பகுதியில் சிறுவர் வேதாகம பள்ளி நடத்த ஆயத்தம் செய்து, பிள்ளைகளை அழைத்துக் கொண்டிருந்தேன். சில வாலிப பெண்கள் என்னிடம் நீ என்ன சொல்லிக் கொடுப்ப? பொய் சொல்லாத, கெட்டவார்த்தை பேசாத, திருடாத, விபச்சாரம் செய்யாத..... இதைத்தானே..... எனக்கு என்ன பதில் சொல்லுவது என்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்துவிட்டேன். 

மேலே அந்தப்பிள்ளைகள் கூறியதைப் போல, இப்படிப்பட்ட கருத்துக்களை, அறிவுரைகளை நீங்கள் எங்கும் (பள்ளிகளில், வீட்டில், ஒரு சில கிறிஸ்தவ சபைகளில், இன்னபிற இடங்களில் கதைகள் மூலமாக) கேட்கலாம். 

புனித வேதாகமம் உங்களை வேறு அடிப்படையில் வாழும்படியாக அழைக்கின்றது. 

புது உடன்படிக்கையை மறந்து, பழைய உடன்படிக்கையின் கீழே வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்கும் இயேசுவை அறியாதவர்களுக்கும் இடையில் வாழ்க்கையில் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போய்விட்டது. நாமனைவரும் புதிய உடன்படிக்கையின் (புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்) கீழ் வாழ்கின்றோம் என்பதை மனதில் இருத்துங்கள்!

புது உடன்படிக்கையைக் குறித்து நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து முதன் முதலாகப் பேசுகின்றார். பெரிய வியாழன் அன்று இரவு தனது சீடர்களோடு பந்தியிருந்தபோது, இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகின்ற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது எனக்கூற, எல்லோரும் பானம் பண்ணினார்கள். இதை மத்தேயு 26:28; மாற்கு 14:24; லூக்கா 22:20; 1கொரிந்தியர் 11:25  ஆகிய வசனங்களில் வாசிக்கலாம். 

பழைய உடன்படிக்கையில், இஸ்ரவேலர்கள் பாவ நிவாரணபலி, குற்ற நிவாரணபலி இப்படிப் பட்ட பலிகளைச் செலுத்தி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டார்கள். இப்பொழுதோ, நாம் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுவின் இரத்தத்தினால் உள்ளம் கழுவப்படுகின்றோம். (1யோவான் 1:7) இப்பொழுது நமது நிலைமை எனன? ரோமர் 7:6ன்படி,

"இப்பொழுதோ நாம் பழமையான எழுத்திபடியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத் தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலை யாக்கப்பட்டிருக்கிறோம்."

ரோமர் 7:4ல்,

"அப்படிப்போல, என் சகோதரரே நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்."

ஞானஸ்நானத்திலே நீங்கள் எப்படி பாவத்துக்குச் செத்தீர்களோ, அதைப் போல நீங்கள் கிறிஸ்துவை (மேலே உள்ள வசனத்தின்படி) ஏற்றுக் கொ்ண்டபொழுது, கிறிஸ்துவின் சரீரத்தினாலே..... நியாயப்பிரமாணம், நியமம், கற்பனைகள், கட்டளைகளுக்கு மரித்திருக் கின்றீர்கள். 

கிறிஸ்தவர்கள் ஏன்  நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளத் தேவையில்லை?

எபேசியர் 2:15ல்,

"சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, ...."

நியாயப்பிரமாணம் ஒழிக்கப்பட்டுவிட்டது. 

2. சிலுவையிலே வெற்றி சிறந்தார். கொலோ. 2:14ல்,

"நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் (கற்பனையைக்) குலைத்து அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து; சிலுவையின் மேல் ஆனியடித்து;" 

பழைய உடன்படிக்கை ஊழியம், புதிய உடன்படிக்கையில் இருக்கின்ற ஊழியத்தின் வித்தியாசத்தைக் கூறுமிடத்து, 2கொரி.3:6,7ல்,

"புது உடன்படிக்கையின் ஊழியக்காரரா யிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவராக்கினார், அந்த உடன்படிக்கை எழுத்துக்குறியதாயிராமல், ஆவிக்குறியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக் கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே....."

மேலேயுள்ள வசனங்களின்படி, உடன்படிக்கை, கற்பனைகளுக்கான ஊழியம் அனைத்தும் மரணத்துக்கு ஏதுவானது என அறிகின்றோம்.

இயேசு கூறிய உவமைக் கதையில், பரிசேயன், ஆயக்காரன் ஜெபத்தைப் பார்ப்பீர்களானால், நான் வாரத்தில் 2 நேரம் உபவாசிக்கின்றேன், எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுக்கின்றேன் எனக் கூறி ஜெபித்தான். இது நியாயப்பிரமாணத்தின்படி முற்றிலும் சரியானது. அவன் அப்படி ஜெபித்ததில் தவறே இல்லை. இரண்டுபேருடைய ஜெபத்தின் பதில் என்ன? ஆயக்காரனே நீதிமானாக்கப் பட்டவனாய் வீட்டுக்குத் திரும்பினான். இதிலிருந்து, நீதிமான் ஆகவேண்டுமானால் நியாயப் பிரமானத்தைக் கடைப்பிடி என்பதுதானே. என் நீதிக்குத்தக்கதாகத் தேவன் எனக்குப் பலனளித்தாரெனச் சங்கீதக்காரன் கூறுகின்றான். ரோமர் 9:32ல்,

"என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்." 

முந்தய வசனத்தைப் பார்த்தால், நீதியை அவர்கள் அடையவில்லை. ரோமர் 3:20ல்,

"இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகின்றபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை."

பவுல், பேதுருவைப் பார்த்துக் கூறியது இங்கே.....கலாத்தியர் 2:15ல்,

"புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவ தில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியை களினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்." 

ஆதித்திருசபை ஏன் உபத்திரவப்படுத்தப்பட்டது?

கலாத்திய சபையிலே விருத்தசேதனம் (நியாயப்பிரமாணம்) உள்ளே வந்தபொழுது, பவுல் கூறுகிறதை சற்று கவனியுங்கள். 5:11ல்,

"சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்காகத் துன்பப்படுகிறேன்? அப்டியானால், சிலுவையைப் பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே." 

நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்து தேவனிடத்தில் நீதிமானாக வேண்டும் என வாழ்ந்து கொண்டிருந்த ஒரு யூத சமுதாயத்தில், கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நிறைவாயிருக்கின்றார் என்று பிரசங்கித்ததின் விளைவே உபத்திரவத்தை ஆதித்திருசபைக்குக் கொண்டுவந்தது.

சரி புரோ..... இப்பொழுது நாங்கள் எப்படி வாழுவது? நியாயப்பிரமாணமும் இல்லை, கட்டளையும் இல்லை, நாங்கள் எப்படி கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும்? எனக் கேட்பது எனக்கு நன்றாகத் தெரிகின்றது. இயேசுவைப் பற்றும் விசுவாசத்தில் வாழ வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போக நாங்கள் விரும்பவில்லை.புகைப்பிடிக்காதே, கைபேசியை நோன்டிக் கொண்டிருக்காதே, உட்கார்ந்து படி, பொய் சொல்லாதே, லாகிரி வஸ்துக்களை உபயோகிக்காதே என்றெல்லாம் சொல்லக்கூடாதா? 

இப்பொழுது என் நிலைமை என்ன?????

ரோமர் 7:6ல், "இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாக, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்."

எபிரேயர் 8:9,10ல், 

"அவர்களுடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு வரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப்பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப் போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே. நானும் அவர்களைப் புறக்கணித்தேன்  என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்."

எபிரேயர் 10:16ல் இதே வசனம் அப்படியே இருக்கின்றது. 

அதாவது (புது உடன்படிக்கையில்) உங்கள் மனதிலே பிதாவாகிய தேவன் தமது பிரமாணங்களை எழுதியிருக்கின்றார். உங்கள் விருப்பத்தோடே கலந்துவிட்டேன் என்கிறார். 

பிலிப்பியர் 2:13ல்,

"ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்."

மேலே உள்ள வசனங்களை நீங்கள் விசுவாசிப்பீர்களானால், உங்களுக்குள் தோன்றுகின்ற விருப்பமே தேவனது பிரமாணம். 

தலைப்புக்கு வருவோம்!! 

எபிரேயர் 10:11

"அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதை சொல்லுகிறார்." 

1கொரிந்தியர் 15:56

"மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்."

இந்த வசனத்தின்படி பாவம் நியாயப்பிரமாணத்தினாலே பெலன் கொள்ளுகின்றது. நியாயப்பிரமாணமே இல்லை என்கிறபோது, பாவம் எங்கே இருந்து வரும்?? ஆகவே உங்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்கிறார். 

வாழ்த்துக்களுடன்,

உங்கள் சகோதரன்.... 

கா. செல்வின்துரை. கைபேசி 9840836690.

6 Jun 2022

I'm HOLY

 


அன்பு நண்பர்கள் யாவருக்கும் வணக்கம்!

நேராக நாம் செய்திக்குள்ளே செல்லுவோம். இந்தச் செய்தி, உங்கள் மனதைப் புதிதாக்கும், நீங்கள் மருரூபமாவீர்கள்!(ரோமர் 12:2) உங்கள் நண்பர்களுக்கு நமது KARUNYAS.BLOGSPOT.COM என்ற இந்த வலைத்தளத்தை அறிமுகம் செய்யுங்கள்! இதுவும் ஒரு ஊழியமே!!

பரிசுத்தம் என்றால் என்ன?

வேதாகமத்திலே முதன்முறையாக யாத்திராகமம் 13:2ல் பரிசுத்தம் வருகின்றது. 

இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறானைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது.

மேலே உள்ள வசனத்திலிருந்து, தனக்காக ஒன்றைத் தெரிந்து கொள்ளுவது, பிரித்து வைப்பது, பிரத்தியேகப்படுத்துவது எனப் பரிசுத்தம் பொருள்படுகின்றது. ஆதியாகமம் 2:3ல் தேவன் ஏழாம் நாளைத் தனக்காகப் பிரித்தெடுத்து, பிரத்தியேகப்படுத்தினார் (பரிசுத்தப் படுத்தினார்). இன்னும் இதை எளிதாகக்கூறவேண்டுமானால், எல்லாருடைய வீடுகளில் நடக்கின்ற சம்பவந்தான். உங்களுடைய சிறுவயதில் சாப்பிடுகிற தட்டைத் தனியாக எடுத்து வைத்திருப்பீர்கள். அதைப் போல டம்ளரிலும். சாப்பிடுவதற்கு பிளேட்டை எடு என்றால் இருக்கிற 4,5 பிளேட்டுகளில் உங்களுக்கான பிளேட்டை எடுத்து அம்மாவிடம் கொடுப்பீர்கள் அல்லவா! அதே போல அப்பாவுக்குத் தனி பிளேட், தனி டம்ளர். அப்பாவைத் தவிற வீட்டில் உள்ள வேறுயாரும் உபயோகிப்பதில்லை. மற்ற தட்டுகளுடன்தான் இருக்கின்றது, ஆனால் பிரத்தியேகப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் போல இந்த உலகத்தில் நாம் வாழ்ந்துவந்தாலும் நாம் தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். (பிரத்தியேகப்படுத்தப்பட்டவர்கள்) 1கொரிந்தியர் 6:11ல்,

உங்களில் சிலர் இப்படிப்பட்டவர் களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப் பட்டீர்கள், நீதிமான்களாக்கப் பட்டீர்கள். 

இரண்டாவதாக, 

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் யோவான் 17:17

மேலே உள்ள வசனம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஜெபித்த ஜெபம்! வேத வசனத்தை நாம் பரிசுத்த ஆவியானவருடைய ஒத்துழைப்போடு படிக்கும்போது, நம் எல்லாரையுமே பரிசுத்தமாக்குகிறது. பேதுரு 1:16ல்,

நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

மேலே உள்ள வசனம் எங்கே எழுதியிருக்கிறது? 

லேவியராகமம் 11:45ல்,

நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர் நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக. 

லேவியராகமம் 11:41-44 வரை வாசிப்பீர்களானால், தரையில் ஊருகின்ற சகலபிராணிகளையும் புசிக்கலாகாது என அறிகின்றீர்கள். அதாவது பாம்பு, பல்லி, பூரான், ரயில் பூச்சி இப்படிப்பட்ட தரையில் ஊருகின்ற சகலபிராணிகளையும் புசிக்கலாகாது என அறிகின்றீர்கள். புசித்தால் தீட்டு, புசிக்காவிட்டால் பரிசுத்தர். இதன்படி பார்த்தால் சீனாக்காரன் ஒருவனும் பரிசுத்தமாகவே முடியாது. மேலும் பாவத்துக்கு எதிர்ச்சொல் நித்திய ஜீவன் என்பதைப் போல, பரிசுத்தத்திற்கு எதிர் சொல் தீட்டு எனவும் அறிகின்றீர்கள். பழைய ஏற்பாடு சரீரத்தைக் குறிப்பது, புதிய ஏற்பாடு மனம், ஆத்துமாவைக் குறிக்கின்றது என்பது நம் அனைவருக்குமே நன்கு தெரியும். சரி புதிய ஏற்பாட்டில் இந்த வசனம் கையாளப்படுவதற்குக் காரணம்? இங்கே எதன் அடிப்படையில் கூறப்படுகின்றது? 1பேதுரு 1:14-16ஐ வாசித்துப்பார்த்தால், 

நீங்கள் உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து  

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.

நான் பரிசுத்தர் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

இங்கே பரிசுத்தர்.... பரிசுத்தராயிருங்கள் என்பதற்கு ஆங்கிலத்தில் HOLY இதுதான் உண்மைப் பரிசுத்தம்!! (பிரத்தியேகப்படுத்தப்படுதல்)

மூன்றாவதாக,

யோவான் 13:19ல்,

அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக என்னை நானே பரிசுத்தமாக்குகின்றேன்.

என ஜெபிக்கின்றார். பரிசுத்தரே பரிசுத்தத்திற்காக ஜெபிக்கின்றாறா? அல்லது தன்னைத் தானே பரிசுத்தமாக்குகின்றாறா? தமிழில் எல்லாவற்றுக்குமே பரிசுத்தந்தான். மேலே உள்ள வசனத்தில் முதலில் வருகின்ற பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி.... இந்த இடத்தில் HOLY. என்னை நானே பரிசுத்தமாக்குகின்றேன் என்ற இடத்தில் CONSECRATE பண்ணுகின்றேன். அதாவது அற்பணிக்கின்றேன். அதாவது நாமெல்லாரும் பரிசுத்தவான்களாய் வாழும்படிக்கு பிதாவுக்குத் தம்மைத் தாமே அர்பணித்தார்!   

பரிசுத்தத்தைக் குறித்த சத்தியத்திலே உங்கள் மனம் புதிதாகியிருக்கின்றது, நீங்கள் மருரூபமாயிருக்கின்றீர்கள்!! ஜெபிப்போம் !!!

எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே, இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம், இதைப் படிக்கின்ற ஒவ்வொருவரையும் நீர் பரிசுத்தப்படுத்தியிருக்கின்றீர்! பிரத்தியேகப் படுத்தியிருக்கின்றீர்!! அதற்காக நன்றி! சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்ற வசனத்தின்படி எங்களை விடுதலையாக்கியிருப்பதனால் நன்றி! எங்களைப் போன்று சத்தியத்தை சரியாக அறியாத சகோதர, சகோதரிகளுக்காய் ஜெபிக்கின்றோம்!  இந்தச் சத்தியம், உலகெங்கும் இருக்கின்ற தமிழ்தாய் உறவுகளைச் சென்றடைய கிருபை செய்வீராக. இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே.   ஆமென், ஆமென்.

பின் குறிப்பு: நண்பர்கள் யாவரோடும் இந்த வலைத் தளத்தைப் பகிருங்கள்! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்துபோல, அவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்!! நன்றி, நன்றி.....

12 Feb 2022

YOU ARE FREE UNDER GOD'S FAVOR AND MERCY


 கிறிஸ்துவில் பிரியமானவர்களே!

இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!!

ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பாவத்தைக் குறித்து பதிவிட்டுள்ளோம்!! அதைவிட சற்று விளக்கமாக இந்தப் பதிவில் பார்க்கலாம். உங்கள் மின் அஞ்சல் முகவரியைக் கொடுத்துச் சந்தாக்  கட்டவும். எப்பொழுதெல்லாம் இங்கே தேவச்செய்தியைப் பதிவிடுகின்றோமோ, அப்பொழுதெல்லாம் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தடையும். ஏசாயா59:1ல்,

"இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கைக்குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை". 

ஏசாயா 59:2ல்,

"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது". 

மேலே உள்ள வசனங்களை ஆதாரமாகக் கொண்டு, தடாக்குப்பத்திலே, ஒரு கிறிஸ்மஸ்க்கு முந்தைய வாரத்திலே தெருமுனைக்கூட்டத்தில் செய்தியளித்து ஜெபித்தபோது, அனேக மக்கள் இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டார்கள். அந்த நினைவுகளோடு தொடர்ந்து, 

பாவம் என்றால் என்ன?

ஆதியாகமம் 3:1-7 வசனங்களை வாசித்துப்பாருங்கள். ஆதாம் ஆண்டவரின் சொல்லை மீறினான். மீறுதல், பாவம், கண்கள் திறக்கப்பட்டது. கீழ்படியாமை வேறு, பாவம் வேறு. அறிவு வந்தபின்தான் தாங்கள் நிர்வாணிகள் என்பதை அறிந்துகொண்டார்கள். எனவே அறிவே பாவம் எனத்தீர்கிறோம். யோவான் 9:41ல்,

"இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

இரண்டாவதாக, இவர்கள் விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்கள் என்று அறிந்தும், ஆண்டவர் தேடிவந்தாரே!  அதுதானே ஆண்டவரின் அன்பு!! அன்பு சகல பாவங்களையும் மூடும் அல்லவா! பின் எப்படி பாவம்????.....

ஆண்டவர் கூறியதை எல்லாம் மறுத்து ஏவாளிடம் கூறிய சாத்தானால் வந்தது. பழத்தைச் சாப்பிடக் கூடாது..... சாப்பிடலாம். நீங்கள் அவரைப் போலாவீர்கள். ஏவாளின் உள்ளம் கறைபட்டுப்போயிற்று. ஆண்டவரைக் குறித்த தவறான எண்ணங்கள்தான் பாவம்.

பாவத்தின் விளைவு? ஆதி. 3:14-17 வாசித்துப்பாருங்கள்! சாபம். அதிலும் ஆண்டவர் ஆதாமை நேரடியாகச் சபிக்கவில்லை. பூமியைச் சபித்தார். இப்பொழுது மோசேயின் மூலமாக நியாயப்பிரமாணம் வருகின்றது. ரோமர்5:14 ல்,

"அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் (பாவம்) ஆண்டுகொண்டது. (அதாவது பாவஞ்செய்யாத உங்களையும் ஆண்டுகொண்டது) மோசேக்குப் பின் நிலைமை இன்னும் மோசமாகப் போய்விட்டது. மோசேயினால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபடியினால், ரோமர் 7:9ல்,

"முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை (நியாயப்பிரமாணம்) வந்தபோது பாவம் உயிர்கொண்டது. நான் மரித்தவனானேன்".

ரோமர் 5:19ல்,

"அன்றியும் ஒரே மனுஷனுடைய (ஆதாம்) கீழ்ப்படியாமையினாலே அனேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய (இயேசுவின்) கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்".

மேலே உள்ள மூன்று வசனங்களின் மூலமாக நீங்கள் குற்றமனசாட்சியிலிருந்து விடுவிக்கப்படுகின்றீர்கள். 

பாவம் எப்படி மன்னிக்கப்படுகின்றது? லேவியராகமம் 4ம் அதிகாரத்தில், பாவம் எப்படி மன்னிக்கப்பட்டது என்பதைக் குறித்து அறியலாம். ஒரே குற்றத்தைத் தெரிந்து செய்தால், தெரியாமல் செய்தால், சாதாரணமனிதர்கள் செய்தால், பணம் படைத்தவர்கள் செய்தால், ஆசாரியன் செய்தால் என்று பல்வேறு பலிகளை பாவ நிவாரணபலியாகச் செலுத்த வேண்டும். ஆனால் புதிய ஏற்பாட்டில்,1யோவான் 1:7ல்,

".....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

1யோவான் 1:9

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார்".

நீங்கள் இயேசுவிடம் எதையும் மறைக்காமல் அறிக்கையிட்டால், எல்லா அநியாயத்தையும் மன்னித்துத் தமது இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்க அவர் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். இப்படித்தான் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது. இதன் பின்தான் உண்மையான சத்தியம் தொடங்குகிறது.

பாவத்துக்குச் சாகுதல்: 1பேதுரு2:24ல்,

"நாம் பாவத்துக்குச் செத்து, நீதிக்குப்பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்".

பாவத்துக்கு நீங்கள் எப்போது செத்தீர்கள்?  ரோமர் 6:2-5 வசனங்களை வாசித்தீர்களானால் இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றபொழுது அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, இயேசுவின் மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட ஆடக்கம்பண்ணப்பட்டோம்.

அதாவது, ஞானஸ்நான ஆராதனை என்றாலே அடக்க ஆராதனைதான். தண்ணீரில் மூழ்கும்போது, பாவத்துக்குச் சாகின்றீர்கள். தண்ணீரிலிருந்து மேலே வரும்போது புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு பிழைக்கின்றீர்கள் எனப் பொருள்படும். ஞானஸ்நானம் பெற்றவர்கள் அனைவரும் பாவத்திற்கு செத்திருக்கின்றார்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்குகின்றது.

இதே வாசிக்கின்ற யாராவது இன்னும் ஞானஸ்நானம் எடுக்காதிருந்தால் ஞானஸ்நானம் எடுக்க ஒப்புக் கொடுங்கள். பாவத்துக்குச் செத்ததற்கு அதுதான் அடையாளம். உங்களில் சுகவீனர் யாவரும் குணமாவீர்கள். 1கொரி.10:2ல்,

"எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்".

இஸ்ரவேல் ஜனங்கள் யாவரும் எகிப்தாகிய பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, சிவந்த சமுத்திரத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். கிறிஸ்தவ வாழ்க்கை அதன் பிறகுதான் வனாந்திரத்தில் ஆரம்பமாகின்றது. மேலே உள்ள வசனங்கள் இரண்டும் பாவத்துக்கு நீங்கள் செத்ததைக் குறிப்பிடுகின்றது.

பாவத்தின் எதிர்சொல் என்ன? ரோமர் 6:23ல்,

"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடையகிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்".

இதிலிருந்து பாவத்தின் எதிர்ச் சொல் பரிசுத்தமல்ல; நித்திய ஜீவன் என்று அறிந்துகொள்ளுகின்றீர்கள். யோவான் 3:16ல்,

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

யோவான் 3:18ல்,

"அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டாயிற்று".

மேலே உள்ள வசனங்களை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களெனில், ஒரு சத்தியத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியும். எப்பொழுது இயேசு என்ற நாமத்தின்மீது விசுவாசமுள்ளவர்களானீர்களோ அப்பொழுதே பாவத்தின் ஆளுகையிலிருந்து விடுபட்டு, நித்திய ஜீவனின் ஆளுகைக்குள் வந்துவிட்டீர்கள். 

நாமத்தின் மீது (இயேசு என்ற பெயரில்) விசுவாசம் வைக்கும்போது, பிள்ளைகள் ஆகின்றீர்கள், பாவத்தின் ஆளுகையிலிருந்து விடுபட்டு, நித்திய ஜீவனின் ஆளுகைக்குள் வந்துவிட்டீர்கள். (யோவான்3:16)

பாவத்தின் வல்லமை உங்களிடத்தில் செயலிழக்கிறது: ரோமர்8;2ல்

"கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

பாவம்=>மரணம், பாவம்=>மரணம், பாவம்=>மரணம் இப்படியே போய்க்கொண்டிருந்த உங்கள் வாழ்க்கையில், கிறிஸ்துவின் ஜீ்வனின் பிரமாணம் இந்தச் சுற்றுவட்டத்திலிருந்து உங்களை வெளியே எடுத்துவிட்டது. இப்பொழுது பாவமும் இல்லை, மரணமும் இல்லை. ரோமர் 6:14ல்,

"நீங்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது"

பாவம் உங்களிடத்தில் தோற்றுப்போகின்றது.

1யோவான்3:9ல், 

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவதஞ்செய்ய மாட்டான்".

யோவான் 1:12ன்படி நீங்கள் தேவனால் பிறந்திருக்கின்றீர்கள். அவருடைய வித்து, வசனம் உங்களுக்குள் இருக்கிறபடியால் உங்களால் பாவஞ்செய்ய முடியாது. தலைகீழாக நின்றாலும் முடியாது. இதையே சங்கீதக்காரன் தாவீது, சங்கீதம் 119:11ல்,

"நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்துவைத்தேன்".

மேலே உள்ள வசனங்களின்படி பாவம் உங்களிடத்தில் தனது வல்லமையை இழந்துவிட்டது. 

அமெரிக்க தேசத்திலே, நியூயார்க் பட்டணத்திலே, அதிகாலையில் அநேகர் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதிலே வில்சன் என்ற நபரும் ஒருவர். இவர் ஒரு தெருவிலே திரும்பும்போது, சிலர் ஒரு திருடனை துரத்திக் கொண்டு ஓடிவந்தனர். பிடியுங்கள், பிடியுங்கள்..... இவர் விழிப்படைவதற்குள் திருடன் இவரைத் தாண்டி ஓடினான். இவரும் துரத்த ஆரம்பித்தார். திருடன் துரிதமாக ஓடவே இவர் ஓட்டத்தில் பின்தங்கினார். தனது கோட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியால் காலை நோக்கிச் சுடவே தவறுதலாகத் திருடனது இடுப்பிலே பட்டுச் சுருண்டுவிழுந்து செத்தான். போலீஸ் இவரைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். தீர்ப்பில் நீதிபதி, வில்சனைக் குற்றவாளி எனத்தீர்த்து, தூக்குத் தண்டனை விதித்தார். இவர் சிறையிலே அடைக்கப்பட்டார். இவருக்காக வாதாடிய வக்கீல், இவரது சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தார். வழக்குச் செய்திகளை, செய்தித்தாளில் வாசித்திருந்த ஜனாதிபதி உடனே இவரை விடுதலை செய்து, சிறைச் சாலை அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். கடிதம் சிறைச்சாலை வார்டனுக்கு வந்து சேர்ந்த உடனே, கடிதத்தை எடுத்துக்கொண்டு, வில்சன் இருந்த செல்லுக்குச் சென்று விடுதலையை அறிவித்தார். ஆனால் வில்சனோ ஜனாதிபதியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். மீண்டும் வழக்கு, நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த மன்னிப்புக் கடிதம், வில்சன் ஜனாதிபதி அருளிய மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், விடுதலைப் பத்திரமாகி விடுதலையைக் கொடுத்திருக்கும். ஏற்றுக் கொள்ளாதததினால், இக்கடிதம் சாதாரணகடிதமாகக் கருதப்பட்டு, வில்சனுக்கு இந்த நீதிமன்றம் தூக்குத்தண்டனையை அளிக்கின்றது எனத் தீர்ப்பளித்தது.

தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் நாளிலே, வில்சனைப் பார்த்துசொல்லப்பட்டதுதான் அனைவருக்குமான செய்தி. 

'நீ செய்த குற்றத்திற்காகத் தண்டனையை அடையவில்லை, ஜனாதிபதி அருளிய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாததினால் தண்டனை அடைகின்றாய்'

நீங்கள் கிறிஸ்தவர் அல்லாத பட்சத்தில், உங்களுக்கு ஒரு நற்செய்தி! உங்கள் தவறுகள்/குற்றங்கள்/பாவங்களுக்கான தண்டனையை இயேசு ஏற்கனவே சிலுவையில் ஏற்றுக் கொண்டு, உங்களை விடுதலையாக்கி இருக்கின்றார். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டு முன்வருவீர்களானால், நீங்கள் மன்னிக்கப்படுகின்றீர்கள், விடுதலையாக்கப்படுகின்றீர்கள். 

ஜெபிப்போம்!

எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே! இயேசுவின் நாமத்தினாலே உமது சமூகத்தில் வருகின்றோம்! எங்கள் பாவங்களை எல்லாம் நீர் ஏற்றுக் கொண்டு, தண்டனையை நீர் சிலுவையிலே பெற்று எங்களைப் பாவத்திலிருந்தும், அதனால் வந்த சாபத்திலிருந்தும் இயேசுவின் இரத்தத்தினால் கழுவி, மீட்டுக் கொண்டீரே நன்றி ஐயா! இந்த உலகத்தில் இன்னும் கோடிக்கணக்கானபேர் பாவநிவர்த்திக்காகப் பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்களே, அவர்களுக்கெல்லாம் இந்த நற்செய்தி போய்ச் சேருவதாக. அவர் தமது ஆத்துமவருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார் என்று எழுதியிருக்கிறபடி நடைபெறுவதாக. இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென்.

9 Feb 2022

VICTORIOUS CHRISTIAN LIFE

 கிறிஸ்துவில் பிரியமான நண்பர்கள் யாவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!!

வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை:

முதலாவது உங்களுக்குப் பின்னால் இருக்கும் மரப்பாலத்தை எரித்துவிட வேண்டும். இதிலே நீங்கள் 50% வெற்றியடைகின்றீர்கள். உங்கள் பழைய பாவ வாழ்க்கைக்கு இருக்கும் தொடர்பை /நினைவை, மரபாலத்தை எரி்த்துவிட வேண்டும். நீங்கள் தொடர்ந்து இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படுகின்ற செய்திகளை வாசித்திருப்பீர்கள் எனில், ஒரு சத்தியத்தை அறிந்திருப்பீர்கள்! உங்களது கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வாக்குத்தத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். வாக்குத்தத்தத்தை அடிப்படையாக வைத்து வாழும் வாழ்க்கை வாழும்போது, நீங்கள் நடந்தாலும் சோர்ந்துபோகமாட்டீர்கள், ஓடினாலும் இளைப்படைய மாட்டீர்கள்!! பொருள் என்னவெனில், நீங்கள் எதிற்கொள்ளும் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றியை ருசிப்பீர்கள்!! 

வெற்றியை ருசித்த சில பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் வாழ்க்கையிலிருந்து அவர்களின் குணாதியத்திலிருந்து ஒரு சில விஷயங்களைப் பார்ப்போம். உங்கள் மனம் புதிதாகும், மருரூபமாவீர்கள், வாழ்த்துக்கள்!

முதலாவது நமது விசுவாசிகளின் தகப்பன் ஆபிராமின் வாழ்க்கை. ஆண்டவர் ஆபிராமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நீங்கள் ஆதியாகமம் 12:1-3வசனங்களில் இருந்து அறியலாம். 'நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ' இப்படி கட்டளையிட்ட ஆண்டவர், வசனம் 7ல், 

"கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார்...."

ஆபிராமின் முதல் மீறுதல். வ8ல், அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய்....."

இரண்டாவது மீறுதல். பின்பு பஞ்சம் பிழைக்க எகிப்துக்குப் புறப்பட்டுப் போனான். 

குற்றம் - 1: ஆபிராம் ஒரு பயந்தாங்கொள்ளி. தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மனைவியாகிய சாராயை தனது சகோதரி என்று சொல்லச் சொன்னான். இப்பொழுது இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இதை இப்பொழுள்ள சூழ்நிலையில் இதைத் தன் மனைவியிடம் கூறியிருந்தால் அவள் என்ன சொல்லியிருப்பாள்? 'நீ என்ன பொட்ட மாதிரி பேசுர..... அறிவில்ல..... கொல்லுவான்  என்றால் சாவு..... நான் நிச்சயமாக உடன்பட மாட்டேன்..... பொசகெட்டவன்..... என்று திட்டியிருப்பாள். 

ஆபிராம், பார்வோனிடத்தில் தனியாக இவள் என் சகோதரியெனக் கூறியிருக்கலாம். ஆனால் தன் மனைவியிடமே கூறுகிறான் பாருங்கள். தன்னுடைய பொய்யிக்குத் தன் மனைவியை உடந்தையாக்கினான் பாருங்கள்! உயிருக்குப் பயந்தவன்.

குற்றம்:2. தவறாக வந்த சம்பாத்தியம் (வ16).

இப்பொழுது ஆண்டவர் செயல்படுகின்றார்..... அதாவது வாக்குத்தத்தம் செயல்படுகின்றது. (ஆண்டவர், வாக்குத்தத்தம், வார்த்தை, வசனம் எல்லாமே ஒன்றுதான்) பார்வோன் செயல்பட்டிருந்தால் வாக்குத்தத்தம் எப்படி நிறைவேறும்? மாகா வாதை..... பார்வோன் நினைத்தாலும் செயல்படமுடியாதபடி. இதோ உன் மனைவி இவளை அழைத்துக் கொண்டுபோ.... 

வாக்குத்தத்தமானது, உங்கள் தவறுகள், மீறுதல்கள், பாவங்கள் இவைகளில் இருந்தெல்லாம் தூக்கி எடுத்து, வெளியேற்றித் தான் இருக்கிற இடத்துக்கு உங்களை ஈர்த்துக் கொள்ளும்.

மீண்டும் ஆபிராமுக்குப் பிரச்சனை, ஐசுவரியத்தினால் வருகின்றது. லோத்துவுக்கும் ஆபிராமுக்கும் இடையில். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆபிராம் என்ன சொல்லுகிறார் பாருங்கள்! ஆதியாகமம் 13:9ல்,

".....நீ என்னைவிட்டுப் பிரிந்து போகலாம்; நீ இடது புறம் போனால் நான் வலது புறம் போகிறேன்; நீ வலது புறம் போனால், நான் இடது புறம் போகிறேன் என்றான்".

இப்படி ஆபிராம் விட்டுக் கொடுக்க என்ன காரணம் என்று நினைக்கின்றீர்கள்? வாக்குத்தத்தம், ஆபிராமுக்குக் கொடுக்கப்பட்டதே ஒழிய லோத்துவுக்கு அல்ல. எந்தப் பக்கத்தைத் தெரிந்து கொண்டாலும், வாக்குத்தத்தம் வழிநடத்தும் என்ற விசுவாசத்தின் அடிப்படையிலேயே லோத்துவுக்கு விட்டுக் கொடுத்தான். இப்படிப்பட்ட ஆபிராமைத்தான் ஆண்டவர் விசுவாசிகளின் தகப்பனாக்கினார். இன்றும் இயேசுவை ஏற்றுக் கொண்டு வருகிறவர்கள் கூட ஆபிரகாமின் சந்ததியாகின்றார்கள். ஆபிராமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் இன்றுவரை செய்ல்படுகின்றது, இன்னும் வேகமாகச் செயல்படும். உங்கள் வாழ்க்கையிலும் பல தலைமுறை கடந்து செயல்படும். என்ன முடிவெடுக்க வேண்டும் எனத் திகைத்துப் போய் இருக்கின்றீர்களா? இதற்காக எந்த வசனத்தை விசுவாசிப்பது எனத் தேடிக்கொண்டு இருக்கின்றீர்களா? உங்கள் வாழ்க்கை வாக்குத்தத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தால், ஏதாவது ஒரு முடிவெடுங்கள்! வாக்குத்தத்தம் இரும்பைக் காந்தம் கவருவதுபோல உங்களைத் தன்னிடத்தில் (தேவசித்தத்துக்கு) இழுத்துக் கொள்ளும். தைரியமாக முடிவெடுங்கள்.

இதுவரை ஆபிராமின் மீறுதல்கள், குற்றங்கள், முடிவெடுத்தமை குறித்து தியானித்தோம். உங்கள் மனம் புதிதாகியிருக்கிறது. மருரூபமாகி இருக்கின்றீர்கள்!! 

இனிமேல் பிறரால் வந்த பிரச்சனையில் வாக்குத்தத்தம் எவ்வாறு செயல்பட்டது எனப் பார்க்கலாம். 

இதற்கு யோசேப்பின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுவோம். யோசேப்பின் 17 வயதிலேயே, அவனது வாழ்க்கையில் தேவன், தான் நடத்தப்போகும் விஷயங்களைச் சொப்பனங்கள் மூலமாக வெளிப்படுத்தினார்.  

முதல் சொப்பனத்தைக் கூறியபொழுதே, அவனது சகோதரர்கள் பகைத்தார்கள், அடுத்த சொப்பனத்தை தனது தகப்பனுக்கும் சேர்த்து அறிவித்தான். அவனது சகோதரர்கள் அதிகமாய் பகைத்தார்கள், பொறாமை கொண்டார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத வாலிபனாய் இருந்தான். அவன் கூறியதே அவனுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுத்தது. 

தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார்கள். குழியில் தூக்கிப் போட்டார்கள். பின்பு மீதியானியர் கையிலே 20 வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டார்கள். மீதியானியர் அவனை எகிப்தின் அரசன் பார்வோனின் பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். பார்க்கிற வேலை அடிமை வேலை, ஆனாலும் கூட இருந்ததோ கர்த்தர் (ஆதியாகமம் 39:2) சொப்பனங்களைக் (வாக்குத்தத்தத்தை) கொடுத்த கர்த்தர். எனவே அந்த அடிமை வேலையையும் ஆசீர்வதித்தார். இவன் செய்வதெல்லாவற்றையும் ஆண்டவர் வாய்க்கப்பண்ணினார் என்று அறிந்த எஜமானனான போத்திபார், தன் வீட்டுக்கு விசாரனைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் யோசேப்பின் கையில் ஒப்புவித்தான். 

யோசேப்பின் அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் அவனுக்குப் பிரச்சனையைக் கொண்டுவந்தது. போத்திபாரின் மனைவி யோசேப்போடு கள்ளத்தொடற்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாள். ரொம்ப நாளாக யோசேப்பிடம் பேசினாள். இவனோ எஜமான விசுவாசம் உடையவனாகவும், தேவபயம் நிறைந்தவனாகவும் இருந்தான். இதையும் அவனிடம் தினமும் கூறிக்கொண்டே வந்தாள். ஒரு நாள் வற்புறுத்தவே, தன் ஆடையைக் கூட அவளது கையில் விட்டுவிட்டு ஓடிப்போனான். என்னைப் பலவந்தம் செய்தான் என்று போத்திபாரிடம் யோசேப்பைக் குற்றஞ்சாட்டினாள். கோபமடைந்த போத்திபார் யோசேப்பை சிறையில் வைத்தான். ஆதியாகமம்39:21, "கர்த்தர் யோசேப்போடே இருந்து....." யோசேப்பு உண்மையாய் இருந்தான் என்பதனால் அல்ல, கர்த்தரிடத்தில் வாக்குத்தத்தம் பெற்றவனாய் இருந்தான். ஆகவே சிறைச்சாலையிலும் கர்த்தர் யோசேப்போடே இருந்தார். கர்த்தர் அவனுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் மூலமாகக் கர்த்தரு அவனோடே கூட இருந்தார். கர்த்தர் கூட இருந்தால், மனிதர் கண்களிலே தயவு கிடைக்கும். சிறைச் சாலையிலும் அதே நடந்தது.  

யோசேப்பினுடைய விசுவாசத்தைப் பாருங்கள்! (வ.40:8) 

".....அதற்கு யோசேப்பு சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குறியதல்லவா?....." 

தேவனுடைய ஊழியமாகப் பார்த்தான். சிறையிலிருந்து விடுதலையாக வேண்டும் என விரும்பினான். எனவேதான் பானபாத்திரக்காரரிடம் என்னுடைய நிலைமையை அரசனுக்கு எடுத்துச் சொல்லி, என்னை விடுதலையாக்குங்கள் என்றான். 

ஒருவேளை அந்தப் பானபாத்திரக்காரன், பார்வோனிடம் சொல்லி யோசேப்பை விடுதலையாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும். ஆண்டவருக்கு நன்றி சொல்லி, 'விட்டதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம்' என்றபடி ஒரே ஓட்டமாய் தன் தகப்பனைத் தேடி ஓடியிருப்பான். ஆண்டவரால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் என்னவாகியிருக்கும்?.....

மேலும் இரண்டு வருடங்கள் சிறை. ஏற்ற வேளை வந்தது. முந்தைய நாள் இரவு காவற்கிடங்கில் தூங்கியவன், இன்று அரண்மனையில் தூக்கம். மேலும் ஒன்பது வருடங்கள் சென்றன. வயலில் அறுத்த அரிக்கட்டுக்கள் யோசேப்பின் அரிக்கட்டை வணங்கியது, சூரியனும், சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் யோசேப்பை வணங்கியது. யோசேப்பின் எல்லாச் சூழ்நிலையிலும், வாக்குத்தத்தம் நிலைத்து நின்று செயல்பட்டது.

யோசேப்பின் வாழ்க்கையில் தனது சகோதரர்களால், போத்திபாரின் மனைவியால் வந்த துன்பங்கள், அநியாயங்கள் எத்தனை எத்தனை. எல்லாவற்றிலும் ஆண்டவருடைய வாக்கு வெற்றியைக் கொடுத்து, தான் இருந்த இடத்துக்குக் கவர்ந்து கொண்டது. எனக்கன்பானவர்களே! பிரியமான நண்பர்களே!! உங்களுக்கு என்ன கொடுமைகள், துன்பங்கள் பிறரால் நிகழ்த்தப்பட்டாலும், அல்லது நீங்களே தவறான முடிவுகளை எடுத்துச் செயல்பட்டாலும், அல்லது நீங்களே தவறான முடிவுகள் எடுத்துச் செயல்பட்டாலும் ஆண்டவருடைய வாக்குத்தத்தம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறியே தீரும்!! பிரச்சனைகளின் மத்தியில் யோசேப்பைப் போலப் பொறுமையாய் இருங்கள்!! வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு சுடர்களைப் போலப் பிரகாசியுங்கள்!! சிறையிலிருந்து சிங்காசனத்துக்குச் செல்லுவீர்கள்!! இயேசுவின் நாமம் உங்களின் மூலமாக மகிமைப்படும்!!!

பிரச்சனையைச் சந்திக்கும்போது உங்கள் உள்ளம்/மனம் எங்கே செல்லுகின்றது என்பது மிக முக்கியம். அவராலதான் இந்தப் பிரச்சனை, இவராலதான் இந்தப்பிரச்சனை அல்லது என்னாலதான் இந்தப்பிரச்சனை என்று என் நினைத்தால் நீங்கள் OUT. பிரச்சனை எதுவானாலும் வாக்குத்தத்தம் நிறைவேற இவைகளெல்லாம் உங்கள் வாழ்க்கையில் சம்பவிக்கின்றது என நீ்ங்கள் நினைத்தீர்களானால், உங்கள் வாழ்க்கை ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையாக அமையும், இனி உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது வேத வசனத்தின் மீது நில்லுங்கள்!!

மேலும் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்! ஆண்டவர் வாக்குத்தத்தம் கொடுக்கும்போது, இவன் படித்தவன், இவன் படிக்காதவன், இவன் ஏழை, இவன் பணக்காரன், இவன் பட்டணத்தில் வசிக்கின்றான், இவன் குக்கிராமத்தில் வசிக்கின்றான், இவன் பயப்படுகின்றவன், இவன் தைரியசாலி, இவன் பலமுள்வன், இவன் பலவீனன், இவன் பாவி, இவன் பரிசுத்தவான், இவன் தகுதியில்லாதவன், இவன் தகுதியானவன் என்றெல்லாம் பார்க்காமல், ஈசாயின் கடைசி மகனான தாவீதை, (முகத்தைப் பார்க்காமல் உள்ளத்தைப் பார்த்து) சாமுவேலைக் கொண்டு இஸ்ரவேலின் மன்னனாக அபிஷேகித்தாரோ அதைப் போல, தேவனால் வாக்குத்தத்தமானது தமது பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. ஊழியத்துக்கு ஆண்டவர் தகுதியைப் பார்த்து அழைப்பதில்லை, அழைத்துத் தகுதிப்படுத்துகிறார். 

ஜெபிப்போம்!

எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே! இயேசுவின் நாமத்தில் உமது சமூகத்தில் வருகின்றோம்!! ஆபிரகாமின் தவறான முடிவுகளிலிருந்து உமது வாக்குத்தத்தம் அவனை வெளியேற்றி மிகச் சரியான உயர்வுக்குள் நடத்தியதைப் போல, நாங்கள் எடுத்த தவறான முடிவுகளிலிருந்து நீர் எங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் எங்களை மீட்டு வழிநடத்தி ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். இந்த நாளிலே இதைப் படிக்கிற யாவரையும் இப்பொழுதே வழிநடத்துவதாக. எங்கள் நீர் எங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு சுடர்களைப் போலப் பிரகாசிக்கக் கிருபை செய்யும். எங்கள் வாழ்நாளெல்லாம் வாக்குத்தத்த வழிகாட்டுதலில் நிலைத்து நிற்கக் கிருபை செய்யும். பிறரால் இழைக்கப்பட்ட அநீதியிலும், இழிவாக நடத்தப்பட்டபோதிலும் யோசேப்போடே வாக்கை நிறைவேற்றினீர். எங்களைத் தவறாக நடத்தியவர்களை இயேசு எங்களை மன்னித்ததைப் போல மனதார மன்னிக்கின்றோம். ஆபிரகாம், யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வழிகாட்டினீர் நன்றி இயேசுவே! வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழும்படியாக எங்களை அழைத்த நீர் உண்மையுள்ளவர்! இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் பிதாவே, ஆமென், ஆமென்.



2 Jan 2022

FATHER - SON

பிதா - மகன் 

நண்பர்கள் யாவருக்கும் 2022 அன்பின் வாழ்த்துக்கள்!

இந்தத் தேவச்செய்தி, ஈஸ்கடோஸ் என்ற எமது மாதப் பத்திரிக்கையில் வெளிவந்து அனேகமாயிரம் பேருக்கு ஆசீர்வாதமாக இருந்தது. உங்களுக்கு இந்தப் பத்திரிக்கை வேண்டுமானால், உங்கள் முகவரியை 9840836690 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி வையுங்கள்.  அனுப்பி வைக்கப்படும்! நமது ஊழியத்துக்கு ஆண்டவர் கொடுத்த வாக்கின் அடிப்படையில் இந்தச் செய்தி.

எபேசியர் 1:3 

"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குறிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்"

இந்த வாக்கின்படி, உங்களை ஆண்டவர் சகல ஆசீர்வாதத்தினாலும் ஆவியில் ஆசீர்வதித்திருக்கிறார். ஆவியிலே ஆசீர்வாதம் உங்கள் சரீரவாழ்க்கைக்குள் வரும்படியாகவே இந்தச் செய்தி!! அல்லேலுயா!!!

ஆவியிலே ஆசீர்வதிக்கப்பட்ட நீங்கள் உங்களது ஆத்துமா / மனம் புதிதாகும்போது, உங்கள் சரீரவாழ்க்கையில் ஆசீர்வாதம் பிரவேசிக்கின்றது. ஆசீர்வாதம் என்று பெயர் வைத்திருப்பவர் அல்ல, உண்மையாக ஆண்டவர் உங்களுக்கு வைத்திருக்கின்ற ஆசீர்வாதம்!

ஆசீர்வாதம் என்றால், கண்ணுக்குத் தெரியாதது. ஐஸ்வரியம், பணம், நீடிய வாழ்வு, சுகம், பெலன் என்பதெல்லாம் உங்கள் சரீரத்திலே அனுபவிப்பது. பார்க்கக்கூடியது. 3 யோவான் 2ல்,

"பிரியமானவனே, உன் ஆத்துமா (மனம்) வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்".

தமிழர்கள் வாழ்த்தும்போது, உன் மனம்போல வாழுங்கள் என வாழ்த்துவதை நீங்கள் கேட்டிருக்கலாம், பார்த்திருக்கலாம். அதுதான் மேலே உள்ள வசனம். ஆவிக்கும், சரீரத்துக்கும் இடையில் உள்ள மனம் (ஆத்துமா) வாழ வேண்டும், அல்லது புதிதாக வேண்டும். ரோமர்12:2ல்,

"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்"

உங்கள் மனம், உள்ளம், MIND புதிதாகிறதினாலே நீங்கள் மறுரூபமாகின்றீர்கள்! மறுரூபமாகும்போது, ப்பூ இவ்வளவுதானா?! என நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சனையைப் பார்த்து நீங்கள் கூறுவீர்கள். 

இங்கே தலைப்புக்கு வருவோம்! பிதா-மகன். 

அனேகர் கேட்கும் கேள்வி, புரோ..... பைபிள் எல்லாம் ஒன்றுதானே ஏன் வேதாகமத்தை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனப் பிரித்துப் பார்க்க வேண்டும்? 

இந்தக் கேள்விக்கு மிக முக்கியமான பதிலையும் ஆசீர்வாதங்களையும் பார்க்கப்போகிறோம்.  உங்கள் ஜெபவாழ்க்கை, ஆவிக்குறிய வாழ்க்கை ஒரு புதிய பரிணாமத்தைப் பெறும். மேலும் பழைய ஏற்பாட்டில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விடயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள விருக்கின்றீர்கள்! அதுதான் RELATIONSHIP. பிதா-மகன் என்ற உறவு.

பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையில் உள்ள உறவு. இங்கே மத்தேயு3:17ல்,

"அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது".

பிதா-குமாரன் என்ற உறவு இவர்கள் இருவருக்குமே தெரிந்த ஒரு விஷயந்தான். இங்கே "இவர்" எனக் கர்த்தர் உரைத்ததிலிருந்து அன்று ஞானஸ்நானம் பெற வந்த அனைவருக்கும் இதை அறிவிக்கின்றார். இவர் என் நேச குமாரன்.  

இயேசுவுக்கு வந்த சோதனை: ஞானஸ்நானம் எடுத்தபின் பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்திரத்துக்கு ஆவியானவராலே வழிநடததப் படுகின்றார். அங்கே மூன்று சோதனைகள் இயேசுவுக்கு. மூன்றில் இரண்டு நீர் தேவனுடைய குமாரனேயானால்..... மத்தேயு4:3ல், 

"அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்".
மத்தேயு 4:6ல்,

"நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்"
இதேபகுதி, லூக்கா 4:3ல்,

"அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்".

லூக்கா4:9ல், 

"அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல்  அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரமேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.

இங்கே இயேசுவின் உள்ளத்தில் பிசாசுச் சந்தேகத்தை விதைக்கின்றான். எனக்கன்பான நண்பர்களே, இயேசுவுககுக் கொடுத்த சோதனையை உங்களுக்கும் கொண்டுவருகின்றான். யோவான்1:12ல்,

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்".

எப்பொழுதுமே நீங்கள் தேவனுடைய பிள்ளைகள்தான். இதிலே உங்களுக்குச் சோதனை உண்டு. எப்படிப்பட்ட சோதனை? 

எஜமானனே, எஜமானனே என் இயேசு இராஜனே என் எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே..... 

மனந்திருந்திய மைந்தன் புத்தி தெளிந்தபோது, எஜமானன் எனத் தன் தந்தையைப் பார்த்திருப்பானானால், திரும்ப வீட்டுக்குச் சென்றிருக்கவே மாட்டான். ஏனெனில் எஜமானன் ஈவு இரக்கம் இல்லாமல் வேலை வாங்குபவன். அன்பை எஜமானிடம் எதிர்பார்க்க முடியாது.  (இதற்கு விதிவிலக்கும் உண்டு) இது ஒரு மாயமான தாழ்மை. பரம பிதாவோடு நீங்கள், தகப்பன்/மகன்/மகள் என்ற உறவுக்குள் இல்லையானால், அப்படி நினைக்க முடியாத பட்சத்தில் இருப்பீர்களானால், பிசாசின் வஞ்சகத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். சரி செய்யுங்கள்!

நமது இரட்சகருக்கு பல்வேறு இடங்களில் இந்த பிதா-மகன் என்ற உறவிலே சோதனை வந்தது. (இயேசுவைச் சிலுவையில் அடிக்க ஒப்புகொடுத்தது தேவ சித்தமாக இருந்தாலும்), இந்த உறவும் ஒரு காரணம் என்பதை அறிவீர்களா? இதை லூக்கா22:70ல்,

"அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால் நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். 22:71ல்,

"அப்பொழுது அவர்கள் இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினால் கேட்டோமே என்றார்கள்".

மருரூபமலை அனுபவம்: இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்போது எப்படி பிதா தனது குமாரனாகிய இயேசுவை, பிறர் அறிய அறிக்கையிட்டாரோ, அதைப் போல இன்னும் சிலுவை மரணத்துக்கு ஒரு வாரந்தான் இருக்கின்றது என்ற நிலையில் பிதாவின் குரல் வருகின்றது. மத்தேயு 17:5ல்,

"அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
லூக்கா9:35ல்,

"அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செலிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று". 

அங்கே இயேசுவோடுகூட ஞானஸ்நானம் எடுத்தவர்களுக்கு கூறப்பட்டது. இங்கே இயேசுவின் சீடர்களுக்குக் கூறப்படுகின்றது. இதை வாசிக்கின்ற உங்களையும் சேர்த்துத்தான் அன்றே பிதாவாகிய தேவன் வானத்திலிருந்து பேசினார். இயேசுவுக்கு, அவர் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போம். இயேசு தனது ஊழியததின் முடிவுக்கு வந்தபொழுது ஆண்டவர் அவரது ஊழியத்தை அங்கீகரிக்கும்படியாக, மெச்சிக் கொள்ளும்படியாக இந்தச் சப்தம் இருந்தது.  

பிசாசானவன், சிலுவையிலும் இயேசுவை விடவில்லை. சுற்றிலும் இருந்த மூலமாக அவரது உள்ளத்தை உடைக்க முயற்சித்தான். இதோடு உன் சோலி முடிந்தது, எனப் பொருள்படும்படியாக. மத்தேயு 27:40ல், 

"தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்".
மத்தேயு 27:43

"தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்".
 

எனக்கன்பான நண்பர்களே, இயேசுவுக்கு வந்த சோதனையைப் பாருங்கள்; ஊழிய ஆரம்பத்திலிருந்து சிலுவையின் முடிவு பரியந்தம் பிசாசு, இயேசுவுக்கு விரித்த வலை, இயேசுவானவர் தேவகுமாரன் இல்லை என்பதுதான்.

இயேசு கிறிஸ்து, பிறர் தன்னை தேவனுடைய குமாரன் என அறிந்திருக்க வேண்டும் என விரும்பினார். அதைக் கீழே உள்ள வசனங்களிலிருந்து அறியலாம். மத்தேயு 22:42ல்,

"பரிசேயர் கூடிவந்திருக்கையில் இயேசு அவர்களை நோக்கி;

22:42 "கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்".

இந்த இடத்தில் அவர்கள் இயேசு தேவனுடைய குமாரன் என்று சொல்லியிருந்தால் ஆண்டவர் வேறுமாதிரியாகப் பேசியிருப்பார். இவர்கள் தாவீதின் குமாரன் எனக்கூறவே, உரையாடல் அடுத்த வசனத்துக்குப் போகின்றது. 

மத்தேயு22:43 "அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருப்பது எப்படி?"

22:44 "நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே".

22:45 "தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

பரிசேயர், இயேசுவை தாவீதின் குமாரன் என்று சொல்லவே, தாவீதே கிறிஸ்துவை ஆண்டவர் என்று சொல்லியிருக்க எப்படி குமாரனானார். நான் தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படுவதைவிட தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படவே விரும்புகின்றேன் என்பதுதான் இந்த வசனங்களின் பொருள். இதற்கு நீங்கள் பழைய ஏற்பாட்டில் போய்த் தேடினீர்கள் என்றால், மிகச்சரியான விளக்கத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு அது வெளிப்படுத்தப்படவில்லை. ஆகவே அடுத்த வசனம்,

22:46 "அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாதிருந்தது. அன்று முதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்வி கேட்கக் துணியவில்லை".

உண்மையிலேயே இயேசுகிறிஸ்துதான் ஆரம்பத்தில் கேள்வி கேட்டது. முடிவோ அவரிடத்தில் கேள்வி கேட்க யாரும் துணியவில்லை. இதைப் போல உங்களிடத்தில் கேள்வி கேட்கத் துணியாதிருந்தால் எப்படி இருக்கும்?

இன்னொறு பகுதி, இது ஆச்சரியமானது!! மாற்கு3:11ல்,

"அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.

3:12 "தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்".

உங்களிடமிருந்து பெற விரும்பிய ஒன்றை இயேசு கிறிஸ்து பிசாசிடமிருந்து பெற விரும்பவில்லை. ஆகவே நீங்கள் பேறு பெற்றவர்கள்.

மத்தேயு14:33அப்பொழுது படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்".

கடலில் நடந்து, மூழ்கிய பேதுருவை கரம் நீட்டித் தூக்கி, இருவரும் படவிற்கு வந்தபொழுது, இயேசுவின் வல்லமையையும், அற்புதத்தையும் கண்டபொழுது தேவகுமாரன் என்று சொல்லி அவரைத் தொழுதுகொண்டார்கள். சரி, அடுத்த பகுதிக்குக் கடந்து செல்லுவோம்.....

இது ஒரு முக்கியமான பகுதி, மத்தேயு 16:13 - 17

"பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள்: சிலர்  உம்மை யோவான்ஸ்நானகன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கத்தரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்".

இந்தப் பதிலைக் கேட்டவுடன், இயேசுவுக்கு உள்ளம் உற்சாகத்தால் நிறம்பி வழிகின்றது. இந்தப் பதிலை இயேசுவே எதிர்பார்க்கவே இல்லை. 

17 "இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்". எனக்கூறி, உற்சாகத்தால் நிறைந்து பரிசுகளை வாரி வழங்கினார். 

18 "மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை.

இன்றைய ரோமன் கத்தோலிக்க மக்கள் எங்களது முதல் போப்பாண்டவர் பேதுரு; இயேசுவின் வாக்கின்படி உருவான உண்மையான சபை எங்கள் சபைதானெனக் கூறிக் கொண்டிருக்கின்றனர். பேதுரு மீது அல்ல. பிதா-மகன் என்ற வெளிப்பாட்டின் மீதுதான் ஆண்டவர் சபையைக் கட்டுகின்றார். மேலும் பழைய ஏற்பாட்டில் பிதா-பிள்ளைகள், புத்திரர்கள் என்ற உறவே இல்லை.

19 "பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். 

இவைகளெல்லாம் பேதுருவுக்கு இயேசுவால் கொடுக்கப்பட்ட வெகுமதிகள்!! இதை விசுவாசிக்கிற உங்களுக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கின்றார். 

அன்பு நண்பர்களே! இந்த உலகத்தில் உள்ள திருசபைகள் அனைத்தும் கட்டப்படுவது, கிறிஸ்து ஜீவனுள்ள குமாரனாகிய கிறிஸ்து என்ற உறவு (பிதா-குமாரன்) மற்றும் வெளிப்பாட்டின் அடிப்படையில் தான். ஆண்டவர் எவ்வளவு தூரம் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். உங்கள் மனம் புதிதாகியிருக்கிறது! நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய பிதாவின் மகன்/மகள் என்ற உறவை நினைவில் கொள்ளுங்கள், பிசாசுக்கு விட்டுக் கொடுத்துவிடாதிருங்கள்!!!

ஜெபம்! லூக்கா 11:1-2ல்,

"அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும் என்றான்.

அதற்கு அவர்: நீங்கள் ஜெபம் பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக;

முதன் முறையாக யெகோவா தேவனை, பிதா என அறிமுகப்படுத்தி ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கிறார். இங்கே நீங்கள் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். பிதா-மகன் என்ற உறவு நெருக்கமான உறவு. யாராலும் பிரிக்க முடியாத உறவு. அப்பாவிடமிருந்து, ஆசீர்வாதங்களை, வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளுகின்ற உரிமையுள்ள உறவு. இந்த உலகத்தின் பிரச்சனைகளை எப்படி எதிற் கொள்ள வேண்டும்? எனக் கற்றுக் கொடுக்கும் உறவு.

ஒரு உதாரணத்தை உங்களுக்குச் சொல்லுகின்றேன்..... உங்கள் குடும்பங்களிலே எத்தனைபேர் உங்கள் அப்பாவைக் காட்டிலும் அதிகமாகப் படிததுள்ளீர்கள்? எனக்குத் தெரிந்து உங்களில் 99.99% அப்பாவைக் காட்டிலும் அதிகமாகப் படித்துள்ளீர்கள். காரணம், தன்னைக் காட்டிலும் தனது மகன், மகள் மேன்மையான நிலைக்கு வர வேண்டும் எனப் பாடுபடும் உறவு!அதே நேரத்தில் அப்பாவின் அன்பு புரிந்து கொள்ள முடியாததாயும் உள்ளது. 

சமீப காலத்தில், கூலிக்காரர் ஒருவருடைய மகள் தனது ஐ.ஏ.எஸ் பரீட்சையிலே பாஸான பின், தன் தந்தையின் கட்டை வண்டியிலே அவரை உட்கார  வைத்து, தெருவெங்கும் இழுத்துச் சென்ற சம்பவத்தைச் சமூக வலைத்தளங்களிலே நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இந்தக் கைவண்டியில் மூட்டைகளை ஏற்றி, இழுத்துதான் என்னை எனது அப்பா படிக்க வைத்தாரென அந்த ஊருக்கு அவள் அறிவித்தாள். அப்பாவின் அன்பு!!

இப்பொழுது உங்கள் மனம் புதிதாகி இருக்கின்றது. நீங்கள் மருரூபமாகி இருக்கின்றீர்கள்! பழைய ஏற்பாட்டிலே இயேசு என்ற நாமமே இல்லை. பரிசுத்த ஆவியைக் குறித்த தகவல்களும் இல்லை. இங்கேயோ, தேவன், பிதா (தந்தை) என்று அறியப்படுகின்றார்.  கடைசியாக,

மத்தேயு 27:54ல், 

"நூற்றுக்கு அதிபதியும், அவனோடே கூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். நூற்றுக்கு அதிபதி ஒரு ரோமன், புற ஜாதியான். இவன் அறிக்கையிடுகிறான், இயேசுவை நோக்கி மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன். புற ஜாதியாராகிய நமக்கு இரட்சிப்பு வந்ததிலே எந்தவித ஆச்சரியமுமில்லை. உறவுக்குக் கை கொடுப்போம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!!

ஜெபம்!

அன்பின் தகப்பனே, இயேசு தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகின்றோம்!  பேதுருவுக்குக் கொடுத்த பரிசுகளை எங்களுக்கும் தந்திருப்பதற்காய் நன்றி! இவைகளைப் பயன்படுத்தி ஆத்தும அதாயம் செய்ய எங்களுக்குக் கிருபை செய்யும்! இயேசுவின் மூலம் பிதாவே! ஆமென், ஆமென். 

25 Jul 2021

KEYS OF KINGDOM OF HEAVEN - TO YOU

அன்பு தமிழ்த்தாய் உறவுகள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!!!

பரலோகராஜ்யத்தைப் பற்றிய செய்திகள்  மத்தேயு எழுதிய சுவிஷேசபுத்தகத்தில் மட்டுந்தான் இருக்கின்றது. முதன்முதலாக யோவான்ஸ்நானகன் பிரசங்கித்தபொழுது, மத்தேயு 3:2ல், "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது" என்று பிரசங்கம் பண்ணினான். இயேசுவும் கூட முதல் பிரசங்கத்தில் மத்தேயு 4:17ன்படி, "அதுமுதல் இயேசு மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்." தமது சீடர்களுக்கும் பரலோகராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிக்க சொன்னார். இதை மத்தேயு 10:7ல் பார்க்கலாம். இயேசுவும் தனது மலைப்பிரசங்கத்தில், மத்தேயு5:3ல், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." மத்தேயு 5:10ல், நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." இயேசுகிறிஸ்துவின் பிரசங்கத்திலிருந்து, பரலோகராஜ்யம் உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது எனப் பார்க்கின்றோம். இதிலிருந்து பரலோகம் வேறு; பரலோகராஜ்யம் வேறு என்றும் அறிகின்றோம். பரலோக இராஜ்யம் இந்தப் பூமிக்கு உரியது.

 யாருக்கெல்லாம் பரலோகராஜ்யம் சொந்தம்? ஆவியில் எளிமையுள்ளவர்கள், நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்கள் (கிறிஸ்தவர்கள்) மற்றும், மனந்திரும்பியவர்கள் (இயேசுவை ஏற்றுக் கொள்ளும்போது) பரலோகராஜ்யத்தை விளக்கும் விதமாக ஆண்டவர் 9 உவமைகளைக் கூறியிருக்கிறார்.

உவமை 1. மத்தேயு 13:24-30வரை வாசித்துப் பாருங்கள். இந்த வசனங்களின்படி, பரலோகராஜ்யம் ஒரு விவசாயிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. இவன் கோதுமை எது களைகள் எது என்பதைக் குறித்த சரியான அறிவுடையவனாய் இருந்தான். களைகளுக்கு நெருப்பையும், கோதுமைக்கு களஞ்சியத்தையும் ஆயத்தம்பண்ணி வைத்திருந்தான்.

உவமை 2. மத்தேயு 13: 31,32. கடுகு விதைக்கு ஒப்பானது. பரலோகராஜ்யத்தின் சுவிஷேசத்தை விதைக்கும்பொழுது, அது முளைத்து, வளர்ந்து ஆகாயத்துப் பறவைகள் வந்து அடையத்தக்கதான விருட்சமாகின்றது. மிகப்பெரிய ஆசீர்வாதமாக அனேகருக்கு மாறுகின்றது. 

உவமை 3. மத்தேயு 13:33 இங்கே புளித்த மாவு.... கொஞ்சம் புளித்த மாவு, எப்படி 3படி மாவிலே அடக்கி வைக்கும்போது, எல்லா மாவையும் புளிக்க வைக்கின்றதோ, அதைப் போல இராஜ்ஜியத்தின் சுவிஷேசம் (வேத வசனங்கள்) தேசங்கள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும். உப்பப்பண்ணும், மனந்திருப்பும்படி செய்யும்.

உவமை 4. மத்தேயு 13:44 இங்கே பொக்கிஷம். இந்தப் பொக்கிஷத்தைக் கண்டு, தனக்குள்ளான எல்லாவற்றையும் விற்று அதைக் கொள்ளுகின்றான். பரலோகத்தின் மேன்மையை அறிந்தவனுக்கு எல்லாமே தூசிக்கு சமமாகின்றது.

உவமை. 5 மத்தேயு 13:45 வியாபாரிக்குச் சமம். நல்ல முத்தைப் பார்த்தவுடன் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று முத்தை வாங்குகின்றான். மற்ற எதுவுமே இவன் கண்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. சுவிஷேசத்தைக் கேட்பவர்கள் இனிமேல் இப்படிப்பட்ட முடிவை எடுப்பார்கள். (குலப்பெருமை, கோத்திரப்பெருமை, ஆண்ட பரம்பரை இப்படி எந்த ஒன்றும் தடையாக இருக்காது) விசுவாசிக்கிற ஊழியர்கள் பாக்கியவான்கள்.

உவமை 6. மத்தேயு 13:47 வலைக்கு ஒப்பானது. இது சகலவிதமான மீன்களையும் பிடிக்கும். நல்லவை மட்டும் சேர்க்கப்படும். ஆகாதவை எறிந்து போடப்படும். களைகள் எப்படி நெருப்பிலே போடப்பட்டதோ, அதைப் போல. இது உலகத்தின் முடிவிலே நடக்கும்.

உவமை 7. மத்தேயு 18:23-35 ராஜாவுக்கு ஒப்பானது. விசாலமான மனம். மனதுருக்கம். மன்னித்தான். பரலோக ராஜ்யத்தில் மன்னிக்கிறவர்கள்தான் இருப்பார்கள். 

பரலோகராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதற்கு எது தடையாக இருக்கின்றது?

மத்தேயு 19:20-23. இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம். அந்த வாலிபன் கேட்ட கேள்வி, இன்னும் என்னிடத்தில் என்ன குறைவு உள்ளது எனக் கேட்டான். இதைப் போல அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் ஜெபத்திலே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இடியெனப் பதில் வருகின்றது, நீ பூரண சற்குணனாய் இருக்க விரும்பினால், ..... பண ஆசை ஒரு காரணம், ஒரு தடை.

மத்தேயு 23:13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. இங்கே பரலோகராஜ்யத்திற்குள் போகத் தடையாய் இருப்பது, நியாயப்பிரமாணம்.

உவமை 8. மத்தேயு 25:1-13 பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பானது. இந்தப் பத்துபேருமே கிறிஸ்தவர்கள்தான். மணவாளன் இயேசுவின் வருகையைக் குறித்து போதிக்கப்பட்டவர்கள்தான்.  5 கன்னிகைகளைக் குறித்த கவலை இல்லை. எனென்றால் அவர்கள் மணவாளனோடு மகிழ்ச்சிக்குள்ளாகப் போய்விட்டார்கள். மற்ற 5 கன்னிகை களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவைளை முக்கியப் படுத்துகிறோம்: 1. பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மணவாளன் வரத் தாமதித்தபொழுது, அனைவரும் தூங்கிவிட்டனர். இதிலிருந்து அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு நேரம் இருந்தது. அப்பொழுது எண்ணெயைக் குறித்துக் கேட்டிருக்கலாம். ஏன் எண்ணெயை எடுத்துவந்தீர்கள்? ஒருவேளை மணவாளன் வரத் தாமதமாகிவிட்டால், தீவட்டி அணைந்து போய்விடக் கூடாது என நினைத்து எண்ணெயைக் கொண்டுவந்தோம் எனக் கூறி இருக்கலாம். உடனே இவர்களும் எண்ணெயை ஆயத்தப்படுததி இருக்க முடியும். இங்கே சபைக்கு வருகின்ற பிற விசுவாசிகளோடு பேசுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஒரு விசுவாசமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வழி பிறக்கும். 

என்ன புடவை? நகை? சுடிதாரா? சல்வார் கம்மீஸா? எந்தக் கடை? என்பதில் கவனத்தைச் செலுத்தினாலும், அவர்களது விசுவாசத்தையும், வாழ்க்கை முறையையும் கவனியுங்கள். 

2. கவனம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். மணவாளன் வரத் தாமதமானால் இந்த எண்ணெய் போதுமா? தன்னுடைய வேலையில் கவனம். நீதிமொழிகள் 31:27ல், ".....தன் வீட்டுக் காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்." தன் வேலையில் ஜாக்கிறதையாய் (கவனமுள்ளவனாய்) இருப்பவன், நீசருக்கு முன்பாக நில்லாமல், இராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். விழிப்புள்ளவர்களாய் இருந்தால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். 

உவமை 9. மத்தேயு 25:14-30 இங்குப் பிரயாணமாய் போகின்ற ஒரு மனுஷன். தாலந்துகளைப் பெற்ற வேலைக்காரர்கள். உங்களுக்கு ஆண்டவர் கொடுத்து இருக்கின்ற திறமைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் தொழிலிலே, ஊழியத்திலே, வேலையிலே, பிறருக்கு உதவி செய்வதிலே பயன்படுத்துங்கள். அப்பொழுது நீங்கள் பரலோக ராஜ்யத்துக்குள் இருப்பீர்கள், அல்லது பரலோக ராஜ்யம் உங்களுக்குள் இருக்கும். 

யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான்? அல்லது பெரியவனாயிருப்பான்?

மத்தேயு 18:1,3,4 மனந்திரும்பி சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்துக்குள் பிரவேசிக்க மாட்டீர்கள். பரலோகராஜ்யத்தின் ENTRY TICKET சிறுபிள்ளைப்போலாகுதல். மத்தேயு 19:14ல்,

இயேசுவோ: சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி.....

நான் ஏற்கனவே மனந்திரும்பி இருக்கின்றேன். எனவே பரலோகராஜ்யத்துக்குள் இருக்கின்றேன் என விசுவாசிக்கின்றேன். பரலோகராஜ்யத்துக்கு உள்ளே இருப்பதற்கும், வெளியே இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

வேதம் உங்களுக்குப் பல்வேறு இராஜ்யங்களைக் குறித்து பேசுகின்றது. இங்கே பரலோகராஜ்யம், தேவனுடைய ராஜ்யம் இவைகளை மட்டும் பார்க்கலாம். பரலோகராஜ்யம் - KINGDOM OF HEAVEN, தேவனுடைய ராஜ்யம் - KINGDOM OF GOD. பரலோக ராஜ்யத்தைப்போலவே தேவனுடைய ராஜ்யமும் இங்குதான் இருக்கின்றது. இதை லூக்கா 17:20,21ல், 

"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

இதோ இங்கே என்றும், அதோ அங்கே என்றும் சொல்லப்படுவதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம்  உங்களுக்குள் இருக்கிறதே என்றார்."

ரோமர் 14:17ல், தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. புசிப்பும் குடிப்பும் சரீரத்தைச் சார்ந்தது. நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமும் உள்ளத்தைச் சார்ந்தது. தேவனுடைய ராஜ்யத்தின் ஒரு பகுதிதான், பரலோகராஜ்யம். உங்கள் உள்ளத்திலே மேலே உள்ள மூன்றும் இருந்தால் நீங்கள் பரலோகராஜ்யத்தில் இருக்கின்றீர்கள். இறுதியாக,

மத்தேயு 16:19ல், 

"பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்."

இந்த வசனத்தில் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன் எனக் கூறுகின்றார். திறவுகோல் எதற்குப் பயன்படும்? பூட்டைத் திறக்கவும், பூட்டவுமே பயன்படும். நிச்சயமாகக் கட்டுவதற்கும் கட்டவிழ்ப்பதற்கும் பயன்படாது. இந்த வசனத்தின் முதல் பகுதி வேறு; இரண்டாம் பகுதி வேறு.

இயேசு, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்ற வெளிப்பாட்டைக் கூறியவுடன், இதை நீ உன்னுடைய யோசனையினாலும், அறிவினாலும் நீ பெற்றுக் கொள்ளவில்லை, பரலோகத்தில் உள்ள பிதாவே உனக்கு வெளிப்படுத்தினார் என்று கூறி, பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன் என வாக்குக் கொடுக்கின்றார். மத்தேயு 13:52ல் எழுதியிருப்பதைப் போல, பரலோகராஜ்யத்துக் கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகனைப் போல, பொக்கிஷத்தை எடுத்துக் கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனாக ஊழியம் செய்யும்படிக்கு திறவுகோல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் செய்தியைக் கேட்க, வருகின்ற ஆத்துமாக்களை சமாதானத்தினாலும், நீதியினாலும், பரிசுத்த ஆவியால் உண்டாகும் மகிழ்ச்சியினாலும் நிறப்புவார். அதாவது பரலோகராஜ்யத்துக்குள் பிரவேசிப்பார்கள்.  

ஜெபிப்போம்!

அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம்! மனந்திரும்பாமல் போனால், வருகின்ற ஆபத்தை விவசாயின் மூலமாகவும், மீன்பிடி வலையின் மூலமாகவும் கற்றுத் தந்ததற்காக நன்றி! சுவிஷேசத்தை அறிவிக்கும்பொழுது, நற்செய்தியைக் கேட்கின்ற யாவரும் மற்ற எதுவும் எனக்குத் தேவையில்லையென, பொக்கிஷத்தைக் கண்ட மனிதனைப் போல இயேசுவை ஏற்றுக் கொள்ள கிருபை செய்யும். கொஞ்சம் புளித்த  மா, மாவனைத்தையும் உப்பப்பண்ணும் என எழுதியிருக்கிறபடி, ஊழியத்திலே விதைக்கின்ற சத்தியம் சபையினிலே, மாகானங்களிலே, ஊரிலே, பரலோகராஜ்யம் விரிவடைவதாக. கேட்கின் அனைத்துக் குடும்பங்களிலும், சமாதானமும், நீதியும், பரிசுத்த ஆவியினால் உண்டான சந்தோஷமும் நிறம்பி வழிவதாக. பண ஆசையில்லாதவர்களாய் கிருபைக்குள்ளாக வாழ உதவி செய்யும். இருக்கின்ற திறமைகளைப் பயன்படுத்தவும், பிறரிடமிருந்து கற்றுக் கொள்ளுபவர்களாய் இருக்கவும், கவனமுள்ளவர்களாய் இருக்கவும் வழி நடத்தும். சிறுபிள்ளைகளைப் போல உம்மைச் சார்ந்து வாழக் கிருபை செய்வீராக. இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென், ஆமென்.  

அன்பு சகோதர, சகோதரிகளே மேலே உள்ள செய்தி, நாங்கள் வெளியிடும் "ஈஸ்கடோஸ்" என்ற மாதப் பத்திரிக்கையிலிருந்து வெளியிடப்படுகின்றது. எமது மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியை அனுப்பினால், அல்லது கமென்ட் பகுதியில் உங்கள் முகவரியைப் பதிவிட்டால், உலகின் எந்தப்பகுதிக்கும், அது அலாஸ்காவாக இருந்தாலும் சரி..... முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாகப் பத்திரிக்கை அனுப்பி வைக்கப்படும்.  ஆண்டவர் இந்தப் பத்திரிக்கை மூலமாக உங்களையும், உங்கள் குடும்பத்தையும், தொழிலையும், ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக.